ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரலாற்று முக்கியத்துவமிக்க வாக்கெடுப்பு

ஆஸ்திரேலியாவில் பழங்குடியினருக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்குவது தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நடத்தப்படும் என பிரதமர் அறிவித்துள்ள நிலையில், அவ்வாக்கெடுப்பு வெற்றிபெற வேண்டும் என பலரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

சர்வஜன வாக்கெடுப்பு வெற்றியடையுமிடத்து பூர்வீகக் குடிமக்களும் Torres நீரிணை தீவு மக்களும் அவுஸ்திரேலிய அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்படுவர்.

அத்துடன் சட்டவாக்கத்தில் ஆலோசனைகளை வழங்குவதற்காக அவர்களுக்கென நிலையான பிரதிநிதித்துவமொன்று உருவாக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் கடும் விவாதத்திற்குரிய தலைப்பாக இந்த முன்மொழிவு காணப்படுகின்றது.

பழங்குடியினருக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்குவது தொடர்பில், சுமார் 50 ஆண்டுகளாக வெற்றிகரமான வாக்கெடுப்பு ஆஸ்திரேலியாவில் நடத்தப்படவில்லை.

இந்த வாக்கெடுப்பு வெற்றியடைய வேண்டுமாயின் பெரும்பான்மை ஆஸ்திரேலியர்கள் ‘YES’ என வாக்களிக்க வேண்டுமென்பதுடன், மொத்தமுள்ள 6 மாநிலங்களில் 4 மாநிலங்களின் பெரும்பான்மை ஆதரவு தேவையென்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles