இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை வெள்ளாந்துரை தோட்ட முகாமைத்துவத்தின் தாக்குதல் செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மக்கள் பிரதிநிதியாக உள்ள ஒவ்வொருவரினதும் அணுகுமுறைகள் ஒவ்வொரு வடிவில் காணப்படுகின்ற போதிலும், அவற்றில் சில அணுகுமுறைகள் ஆக்கத்திறனான அணுகுமுறைகளையும் சேர்த்து மழுங்கடிக்கும் வண்ணம் உள்ளது.
எம் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும் போது களத்திற்கு விரைந்து தம் பொறுப்பை நிறைவேற்றும் துணிச்சல் மிக்க தலைமைகளுக்கு மத்தியில், சமூக வலைத்தளங்கள் மூலம் “வன்மையாக கண்டிக்கின்றேன்” என அறிக்கைவிடும் அரசியலும் இருக்கத்தான் செய்கின்றது.
சமூக வலைத்தளங்கள் என்பது தகவல்களை விரைவாக பரிமாரிக்கொள்ள உதவும் ஒரு தளமாகும். அதனூடாக மாத்திரம் தங்கள் எதிர்பிணை தெரிவிப்பதில் எவ்வித பலனும் இல்லை. நாடு கடந்து ஏற்படும் அநீதிகளுக்கு சமூக வலைத்தளங்களை பாவித்து கண்டணம் தெரிவிப்பதற்கும் நாட்டுக்குள்ளே ஏற்படும் அநீதிகளுக்கு சமூக வலைத்தளங்களை பாவித்து கண்டணம் தெரிவிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.
சமூக வலைத்தளங்கள் அரசியலை விட்டு விட்டு களத்திற்கு இறங்கி, எம் சமூகத்திற்காக சமூக வலைத்தளங்களில் அரசியல் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் மனோகனேசன் முன்வர வேண்டும் எனவும் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
