” இலங்கையானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு இடமளிக்காது.” – என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ இலங்கை அரசு சர்வதேச விசாரணைகளை நடாத்தாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளி தரப்பின் தலையீடு இல்லை என FBI அறிக்கை வழங்கியுள்ளது.
இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் இரகசிய பொலிஸாரும் அறிக்கைகளை வழங்கியுள்ளனர்.
எந்தவொரு விடயத்திற்கும் சர்வதேச விசாரணை நடத்தப்படாது .” -எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்
அத்துடன், மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்பு சபை என்பன முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் ஜனாதிபதி நிராகரித்தார்.










