மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் (2010 – 15) யாழில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். ஜனாதிபதி மாளிகை வளாகம், குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கே SLIIT இவ்வாறு குத்தகைக்கு வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி மாளிகை வளாகம் காங்கேசன்துறையில் 29 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதில் 12 ஏக்கரில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய பகுதி, அப்பகுதி மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட காணியை உள்ளடக்கியுள்ளது.
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகருமான சாகல ரத்னாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது, முழு இடத்தையும் குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அரசுக்கு சொந்தமான 12 ஏக்கரை முதற்கட்டமாக SLIIT நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது.
மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட எஞ்சிய 17 ஏக்கர் காணியை அம்மக்களுக்கு வருமானம் கிடைக்க வழிவகுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மேற்படி நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.
குறித்த காணி தற்போது கடற்படையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. குத்தகை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், நிறுவனத்திடம் கையளிக்கப்படும்.
