முல்லைத்தீவு நீதிபதி டீ.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பூரண கதவடைப்பு போராட்டம் வடக்கில் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பல தரப்புகளும் குறித்த ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வடக்கு மாகாண சட்டத்தரணிகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.










