மலையக மக்களின் எதிர்பார்ப்பு பாதீட்டில் பிரதிபலிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டம் மலையக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று நோர்வூட் பிரதேசசபை தவிசாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அம்பகமுவ பிரதேச அமைப்பாளருமான ரவி குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

” மலையக மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு புதிதாக பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அம் மக்களுக்கு பிரதேச சபையின் ஊடான தேவைகளை நிறைவேற்றுவதில் பல இடர்பாடுகள் காணப்பட்டன. இதற்குக் காரணம் காணி உரிமையை தோட்ட நிறுவனங்கள் கொண்டிருந்ததாகும். ஆனால் தற்போது காணி உரிமை பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள வரவு செலவு திட்டம் வழி வகுத்துள்ளது. இதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை எதிர்காலத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

” பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் கடந்த காலங்களில் பல்வேறு வகையான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும் பல உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய நிலை யும் காணப்படுகிறது. ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட பிரதேசங்களுக்கு 10 பில்லியன் ரூபாய்களை உட் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டில் மலையகத்தில் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ள உதவும் என எதிர்பார்க்கிறோம்.

நீர்வளங்கள் மட்டும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலில் மலையக மக்களுக்கான பல்வேறு உட் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு கிடைத்திருக்கின்ற வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்துவோம். நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த காலங்களில் பின்னடைவை எதிர்நோக்கி இருந்த அபிவிருத்தி வேலை திட்டங்கள் அடுத்து வரும் ஆண்டில் விரைவு படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.” எனவும் நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் குழந்தைவேல் ரவி தெரிவித்துள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles