அவிசாவளை, பென்ரீத் தோட்டம் பகுதியிலுள்ள தோட்ட குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் 8 லயின் அறைகள் தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீவிபத்து இன்று முற்பகல் ஏற்பட்டுள்ளது.
தீவிபத்தினால், குறித்த லயின் வீட்டு குடியிருப்பில் தங்கியிருந்த 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த லயின் குடியிருப்பிலிருந்த 4 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
தீ விபத்து காரணமாக 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கௌசல்யா