பதுளை, நுவரெலியா உட்பட 9 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து 697 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் ஆறு பேர் காயம் அடைந்துள்ளனர்.
கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவால் 3 வீடுகள் முழுமையாகவும், 361 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
508 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 589 பேர் 20 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் 742 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
289 குடும்பங்களைச் சேர்ந்த 918 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.










