மஸ்கெலியா சாமிமலை – ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் தோட்ட வைத்திய சாலைக்கு அருகில் உள்ள வைத்தியர் குடியிருப்பு பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தைகுட்டியொன்று மீட்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளருக்கு தகவல் வழங்கியுள்ளனர், அதன்பின்னர் இது தொடர்பில் நல்லத்தண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் இறந்த நிலையில் கிடந்த சிறுத்தைக் குட்டியை, பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனர்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்