இளைஞானி இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணியின் பூதவுடன் இன்று மாலை சென்னைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று (25) வியாழக்கிழமை இலங்கையில் காலமானார். அவருக்கு வயது 47.
பவதாரணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்திருந்த அவர், இங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையிலேயே நேற்று மாலை காலமானார்.
சடலத்தை பொறுப்பேற்பதற்காக இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்த பவதாரிணியின் சகோதரர் யுவன் சங்கர் ராஜாவும் மற்றும் வெங்கட் பிரபுவும் கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இளைஞானி இளையராஜாவுடன் தற்போது தங்கியுள்ளனர்.
இளைஞானியால் கொழும்பில் நடத்தப்படவிருந்த இசை நிகழ்ச்சியும் பிற்போடப்பட்டுள்ளது.
