நுவரெலியாவில் குதிரை ஓட்டப்போட்டி!

இலங்கைக்குவரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் ஆலோசனைக் அமைய “ரோயல் டேப்” கிளப்பினால் நுவரெலியாவில் குதிரை ஓட்ட போட்டி (24.02.2024) இடம்பெற்றது.

நுவரெலியா குதிரை பந்தைய திடலில் இடம்பெற்ற இந்த ஓட்ட போட்டியில் நான்கு சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.

முதலாவது மற்றும் இரண்டாவது சுற்று போட்டிகளில் அசரங்க மற்றும் பிரபா ஜெயரத்தின ஆகிய குதிரை பந்தய உரிமையாளர்களின் சார்பாக போட்டியில் பங்கு பெற்றிருந்த குதிரை ஓட்ட வீரர் பி.விக்ரமன் என்பவர் வெற்றி பெற்றார்.

அதேநேரத்தில் இடம்பெற்ற மூன்றாவது மற்றும் நான்காவதுசுற்று குதிரை ஓட்ட போட்டியில் எல்.ரவிக்குமார்,மற்றும் பி. எஸ் கவிராஜ் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தார்கள்.

இவ்விரு போட்டியாளர்களும் திரு, திருமதி எட்வர்ட் என்பவரின் குதிரைப் பந்தயத்தின் உரிமையாளர் சார்பாக போட்டியில் பங்குப்பட்டிருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி நிகழ்வில் வெளிநாட்டு பயணிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டதுடன், பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஆ.ரமேஸ்

Related Articles

Latest Articles