“ மஹிந்த ராஜபக்சவை நேசிக்கும் மக்களே இந்நாட்டில் உள்ளனர். அவர் களமிறக்கும் வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்கு மக்கள் தயாராக உள்ளனர்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி எமது தரப்புக்கு சவால் அல்ல. ஏனெனில் அக்கட்சியின் தலைவரிடம் தலைமைத்துவ பண்பு கிடையாது. இதை நாம் கூறவில்லை. அக்கட்சியின் உறுப்பினர்கள்தான் குறிப்பிட்டுவருகின்றனர் .
நாம் களமிறக்கியுள்ள அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.
இம்முறையும் வெற்றி வேட்பாளர் களமிறக்கப்படுவார், மஹிந்த ராஜபக்ச பெயரிடும் வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்கு நாட்டு மக்கள் தயாராகவே உள்ளனர்.” – என்றார்.










