நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேனை – பொல்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற துயரமான மண்சரிவு அனர்த்தத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது திடீரென மண்மேடு சரிந்து விழுந்ததில், வீட்டிலிருந்தவர்கள் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழந்ததாகப் பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள்:
குசும் ரத்நாயக்க (தாய்)
ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க (மூத்த மகள்)
மனேல் குமுதுனி ரத்நாயக்க (இளைய மகள்)
மஹின்ச தினேத் ரத்நாயக்க (மகன்)
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்










