“வைப்பாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்”
" ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை." - என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி...
” கலைக்கப்பட்ட சபைகளை மீள கட்டமைப்பது மக்கள் இறையாண்மையை பாதிக்கும் செயல்”
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அதிகாரம், மக்களின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான...
சாரதி உரிமத்தின் செல்லுபடி காலம் நீடிப்பு
31.03.2022 முதல் 30.06.2023 வரை வழங்கப்பட்ட ஒவ்வொரு தற்காலிக சாரதி உரிமத்தின் செல்லுபடியாகும் காலம், அத்தகைய உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி திகதியைப் பொருட்படுத்தாமல், காலாவதியாகும் திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
பதுளையில் நோயாளர்களை இறக்கிவிட்டுவந்த அம்பியூலன்ஸ் வண்டி விபத்து – சாரதி படுகாயம்!
நோயாளிகளை வைத்தியசாலையில் இறக்கிவிட்டுவந்த அம்பியூலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார். அவரின் நிலைமை கவலைக்கிடம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தியத்தலாவை வைத்தியசாலையில் இருந்து பதுளை வைத்தியசாலைக்கு இன்று நோயாளர்களை ஏற்றி வந்த...
‘பொகவந்தலாவை சம்பவம்’ – அமைச்சர் ஜீவனுக்கு எதிராக சஜித் அணி பொலிஸில் முறைப்பாடு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹங்குராங்கெத்த...
வரி அறவீட்டின்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்க்க விசேட நீதிமன்றம்
அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுதல் உள்ளிட்ட பரிந்துரைகளை ஜனாதிபதியின் அனுமதிக்காக விரைவில் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்லாபிட்டிய தெரிவித்தார்.
அதில்...
சிறுத்தை சடலமாக மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் சிறுத்தையின் சடலமொன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளி ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரம், பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது தோட்டத்திலுள்ள...
அரிசி இறக்குமதி காரணமாக ஏற்பட்ட 6 பில்லியன் ரூபா இழப்புக் குறித்து தனியாக ஆராய முடிவு
பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.06.22 ஆம் திகதி கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) லங்கா சதொச லிமிடட் நிறுவனம் அழைக்கப்பட்டது.
இதில் நிறுவனத்தின் 2019...
நோயாளி மீது அசிட் வீச்சு
சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் மீது அசிட் வீசியதில் நோயாளி உட்பட ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற வந்த நோயாளியை இலக்குவைத்தே அசிட் வீச்சு...
பஸ் மோதி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழப்பு
வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பிரதான பரிசோதகர் இன்று (28) காலை மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில்...