புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்த வேண்டுமா? தீர்மானம் வெள்ளிக்கிழமை
கொவிட் நோயாளர்களது எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா? என்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவுள்ளது.
இதற்காகச் சுகாதார அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகத்...
ரிஷாட் பதியூதீனிற்கு வெளிநாடு செல்ல அனுமதி
இன்று (09) முதல் எதிர்வரும் 3 மாத காலத்திற்கு வெளிநாடு செல்ல பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியதீனிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, ரிஷாட் பதியூதீனின் கடவூச்சீட்டை வழங்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ரஜித்ரா...
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பிணையில் விடுவிப்பு
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 21 மாதங்களாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் சார்பில்...
அதிகரித்த கொள்ளை சம்பவங்கள் எச்சரிக்கும் பொலிஸார்
கொழும்பு உட்பட பல பகுதிகளில் வீதியில் நடந்து செல்லும் பெண்களின் தங்க சங்கிலிகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 11,538 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11,538 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593,602 ஆக அதிகரித்துள்ளது.
O/L பரீட்சைக்கான விண்ணப்பம் ஏற்கும் திகதி 17வரை நீடிப்பு
2021 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித்திகதி எதிர்வரும் 17 ஆம் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நாளையுடன் (10) நிறைவடையவிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,...
‘சர்வதேசத்தை ஏமாற்றவே பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தம்’
அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவானது, சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான நகர்வாகும் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டமும்,...
‘கூட்டு ஒப்பந்தம் வேண்டும்’ – ஹட்டனில் போராட்டம் (படங்கள்)
தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று (09.02.2022) ஹட்டனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் உரிமைசார் விடயங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்...
நான்கு கட்சிகளுக்கு ஜே.வி.பி. கதவடைப்பு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றுடன் ஜே.வி.பி. கூட்டணி அமைக்காது - என்று அக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
"...
அநுரவைக் காக்க ‘டம்மி அநுர’!
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை இலக்கு வைத்து முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமானது தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. அதுமட்டுமல்ல கண்டனக் கணைகயும் குவிந்துவருகின்றன.
கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டின்போதே...










