இந்த அரசின் அமைச்சரவை ‘பெயில்’ – ஒப்புக்கொள்கிறார் இராஜாங்க அமைச்சர்
" தற்போதைய அரசின் அமைச்சரவை தோல்வியடைந்துள்ளது. (பெயில்). எனவே, தகுதியானவர்கள் - அனுபவம்மிக்கவர்கள் அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டு புதிய வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும்." - என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில்...
‘மலையக பிரச்சினைகளை தேசிய, சர்வதேசிய மட்டங்களுக்கு உயர்த்துகிறேன்’ – மனோ
" இந்நாட்டில் வாழும் வடகிழக்கு, முஸ்லிம் தேசிய இனங்களுடன் கரங்கோர்த்து, சிங்கள சகோதர மக்களுக்கும் ஒரு செய்தியை சொல்லி, மலையக மக்களின் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கும் உயர்த்த வேண்டிய வரலாற்று...
‘சுயநிர்ணய உரிமை கோரும் ஆவணத்தில் கையொப்பமிடமாட்டேன்’ – திகா திட்டவட்டம்
" அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால்சென்று, சுயநிர்ணய உரிமைகோரும் முயற்சிக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். அது தொடர்பான ஆவணத்தில் கையொப்பம் இடவும்மாட்டோம்."
இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின்...
‘மலையக மக்களும் வீதிக்கு இறங்குவர்’ – ஆனந்தகுமார் சுட்டிக்காட்டு
முறையற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தீர்மானங்களால் நாடு கடுமையான பொருளாதார நெருகடிகளை எதிர்கொள்ளும் அபாய நிலை தோன்றியுள்ளது. இது மலையக மக்களின் அன்றாட வாழ்வை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்...
2022 ஜனவரியில் உணவுப் பஞ்சம் ஏற்படும்! வேலுகுமார் எச்சரிக்கை!!
2022 ஜனவரியில் இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற...
‘ மூவரும் இணைந்து கூட்டு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்’
" அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகிய மூவரும் நாடகம் அரங்கேற்றிவருகின்றனர்." - என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது...
உள்நாட்டு பால்மா விலையும் அதிகரிப்பு!
" இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பால்மாவின் விலையும் நிச்சயம் அதிகரிக்கப்படும்." - என்று இராஜாங்க அமைச்சர் டி பி ஹேரத் தெரிவித்தார்.
" உலக சந்தையில் பால்மா விலை...
கொவிட் தொற்றால் 18 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு
எதிர்வரும் 3 வாரங்களுக்குள் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு தேவையான...
கொவிட் தொற்றிலிருந்து 228 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 228 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,313 ஆக அதிகரித்துள்ளது.












