காலை வாருகிறது சுதந்திரக்கட்சி – கழுத்தை பிடிக்கிறது மொட்டு கட்சி
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது அரசுக்குள் இருந்துகொண்டு காலைவாரும் செயலையே முன்னெடுத்து வருகின்றது.” – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அனுமுகம குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசால் முன்னெடுக்கப்படும் திட்டத்துக்கு மக்கள்...
கொரோனா தொற்று உறுதியான 415 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 415 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 539,275 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில்...
போகம்பரை சிறைச்சாலையின் மருத்துவர் கைது
பெண் கைதிகளுக்கு கைதொலைபேசிகள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை வழங்கி பணம் பெற்றுவந்த குற்றச்சாட்டில் கண்டி, போகம்பரை சிறைச்சாலையின் பிரதான வைத்திய அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாா் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
31ஆம் திகதி விசேட அரச விடுமுறை- மதுபான நிலையங்களுக்கும் பூட்டு
காலஞ்சென்ற வெலிமிட்டியாவ குசலதம்ம தேரரின் நினைவாக எதிர்வரும் 31 ஆம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படுமென கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியானது
க.பொ.த உயர்தரப் பரீட்சை 2020ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி (Z-Score) சற்று முன் வெளியானது.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில் தோற்றியவர்கள் இதனுள் அடங்குவதாக பல்கலைக்கழக மானியங்கள்...
தடுப்பூசி ஏற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை?
பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள் உட்பட பொது மக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களுக்குச் செல்லும்போது, தடுப்பூசி அட்டையை கொண்டுசெல்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று...
ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி மாகாணத்தடை நீக்கம்
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை, ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இன்று (29) முற்பகல் இடம்பெற்ற கொவிட் தொற்றொழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
பொதுமக்களின்...
கைதிகளின் போராட்டத்தால் வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஒரு கோடி ரூபா இழப்பு
சிறைக்கைதிகள் சிலரின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையில், செப்பல் பிரிவின் கூரைக்கு விளைவிக்கப்பட்ட சேதத்தால் சுமார் ஒரு கோடி ரூபா அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் பொறியியலாளர் பிரிவு தெரிவித்துள்ளது.
பொருள் சேதத்தை...
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ – ஜனாதிபதி செயலணி எதற்காக? ஹக்கீம் வெளியிடும் பரபரப்பு தகவல்
'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு, கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை...
‘விடைபெற தயாராகும் அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு’
தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) அம்மையார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
அமெரிக்காவுக்கும்...




