சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை
பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐந்து லட்சம் லீற்றர் நனோ நைதரசன் உரம் எதிர்வரும்...
ராகலை நகரில் கவனயீர்ப்புப் போராட்டம்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று ராகலை நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்து மாறும் உரத்தட்டுப்பாட்டை நீக்குமாறும் அதிபர்- ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்குமாறும் கோரி இந்தக்...
செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் அவர் பங்கேற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட குழு கூட்டம்
இன்று மாலை 6.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அரசாங்கத்தின் விசேட குழு கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.
பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசாங்க உறுப்பினர்களையும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது உர...
அதிக விலைக்கு சீனி விற்றால் கடும் நடவடிக்கை
அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுக்கு சீனி கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய...
தமிழக மீனவரின் சடலம் இன்று ஒப்படைப்பு!கோட்டைப்பட்டினத்தில் உடனே நல்லடக்கம் !!
யாழ். காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18ஆம் திகதி உயிரிழந்த தமிழக மீனவர் ராஜ்கீரனின் சடலம் இன்று சர்வதேசக் கடலில் வைத்து இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காரைநகர் கோவளம் பகுதிக்குள் கடந்த 18...
‘அரசியல் பொறிக்குள் சிக்க வேண்டாம்’- விவசாயிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை
விவசாயிகளான நீங்களே நல்லது கெட்டதை ஆராய்ந்து தீர்மானம் எடுங்கள். மனிதர்களைத் தூண்டும் அரசியலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். எதிர்காலச் சந்ததியினருக்காக ஒன்றிணையுங்கள்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
உடுபந்தாவ – புன்னெஹெபொல...
கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 437 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் இதுவரை...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (22) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
மாணவர்கள் தடுப்பூசி ஏற்ற சீருடை அவசியமில்லை
தடுப்பூசி ஏற்றச்செல்லும் மாணவர்களுக்கு சீருடை அத்தியாவசியமாக்கப்படவில்லை என்கிறார் கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல்.எம்.பி. தர்மசேன.
கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை உறுதிசெய்துள்ளார். இதன்போது மேலும்...



