புரெவி புயலால் வடக்கில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! இருவர் உயிரிழப்பு!!
புரெவி புயல் தாக்கம் மற்றும் சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாணத்தில் 20 ஆயிரத்து 717 குடும்பங்களைச் சேர்ந்த 68 ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று...
கொழும்பு மாவட்டத்தில் நேற்று 342 பேருக்கு கொரோனா!
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 521 கொரோனா தொற்றாளர்களில் 342 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அத்துடன் கண்டி மாவட்டத்திலும் 91 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் 81 பேருக்கும் வெலிக்கடையில்...
மொரட்டுவ விபத்தில் இரு சிறுமிகள் பலி – கர்ப்பிணி தாய் படுகாயம்!
மொரட்டுவ பகுதியில் புதிய காலி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் அவர்களின் தாயான கர்ப்பிணி பெண்ணும் படுகாயமடைந்துள்ளார்.
இவர்கள் பாதையை கடக்க முற்பட்டவேளை, வேகமாக வந்த மோட்டார் சைக்கிளொன்று...
கண்டி, போகம்பறை பகுதி ‘லொக்டவுன்’!
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, கண்டி மாவட்டத்தில் போகம்பறை கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி– போகம்பறை கிராமத்தில் 25பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக...
‘பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளியோம்’ – இராணுவத் தளபதி
வெளிநாடுகளில் உள்ள புலி உறுப்பினர்கள், இலங்கையில் ஸ்தீரமற்ற நிலைமையை உருவாக்குவதற்கு தொடர்ச்சியாக முயற்சிக்கின்றனர்.இதற்காக முன்னாள் போராளிகளையும், வறுமையில் இருப்பவர்களையும் அவர்கள் இலக்குவைக்கின்றனர். ஆனால் அவர்களின் திட்டங்கள் கடந்தகாலங்களைப்போன்றே முறியடிக்கப்படும்."
இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட்...
‘கொரோனா’ மேலும் ஒருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள 103 ஆறுகளை தூய்மைப்படுத்துவதற்கு புதிய திட்டம்
நாடு முழுவதிலுமுள்ள 103 ஆறுகளின் தூய்மையைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையில் சிறப்புத் திட்டமொன்று ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சுத் தொடர்பான ஆலோசனைக்...
பொன்சேகாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகிறார் மனோ!
" சரத் பொன்சேகாவுக்கு இரண்டொரு தினங்களில் உரிய பதிலை வழங்குவேன்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
“மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் மனோ...
இன்று மாத்திரம் 517 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 265 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று மாத்திரம் இதுவரையில் 517 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின்...
நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...