ரணில் – சஜித் இணைய வேண்டும்! ராதா வேண்டுகோள்!!
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா...
கொழும்பு வருகிறார் இந்திய வெளிவிவகார செயலர்! மலையக கட்சிகளுடனும் பேச்சு!!
இந்திய வெளிவிவகாரச் செயலாளர், ஒக்டோபர் முதல்வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஒக்டோபர் 2 ஆம் திகதி கொழும்பு வரும் அவர், 5 ஆம் திகதிவரை முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார...
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் அதானி நிறுவனத்துக்கு – ஒப்பந்தம் இன்று கைச்சாத்து
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று (30) முற்பகல் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
துறைமுக அதிகார சபையின் சார்பில் அதன் தலைவரும் அதானி நிறுவனத்தின்...
மாகாணத்தடை குறித்து இராணுவத்தளபதி இன்று வெளியிட்ட அறிவிப்பு
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்குமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.
கட்டுப்பாடுகள் சகிதமே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை முதல் தளர்த்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு இவ்வாறு திறக்கப்பட்டாலும் சுகாதார...
‘கையொப்பமிடமாட்டேன்’ – கம்மன்பில திட்டவட்டம்!
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் 40 வீதத்தை வழங்குவதன்றி, இலங்கைக்கு ஐந்து வருடத்திற்கு எரிவாயு விநியோகிக்கும் சர்வாதிகாரத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதே பிரச்சினைக்குரியது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு...
கொழும்பில் ஹோட்டலுக்குசெல்ல தடுப்பூசி அட்டை வேண்டுமா?
கொழும்பிலுள்ள உணவகங்களில் எதிர்வரும் காலங்களில் தடுப்பூசி அட்டைகளை காட்டி வாடிக்கையாளர்கள் உணவருந்தும் நடைமுறை கொண்டுவரப்படலாம் என கொழும்பு நகர உணவகக் குழுமத்தின் தலைவர் ஹர்போ குணரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் உள்ள...
4ஆவது அலை கட்டுக்குள் – பாராளுமன்ற அமர்வும் 5 நாட்களுக்கு தொடரும்
பாராளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை (04) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமைவரை 5 நாட்களிலும் சபை அமர்வை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா...
நானுஓயா குறுக்கு வீதியில் வாகன விபத்து!
செய்தி : கிருஷ்ணசாமி முரளிதரன்
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு பாதையில் இன்று முற்பகல் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தலவாக்கலை...
சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியிடப்பட்ட விசேட அறிவித்தல்
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் செல்லுடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம்...
மாத்தளையில் கட்டுக்குள்வரும் கொரோனா! நுவரெலியாவிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!!
மாத்தளை மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார்.
கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் உரிய முறையில் இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருவதால் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி...




