தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கைது!
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்குவந்த நாளிலிருந்து இதுவரை இச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 55 ஆயிரத்து 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொவிட் தொற்றால் இலங்கையில் உயிரிழந்த சீனப் பெண்!
கட்டுநாயக்க - கிம்புலபிட்டி பகுதியில் வசிக்கும் 38 வயதான சீன பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தப் பெண் கடந்த இரண்டு வருட காலமாக...
21 ஆம் திகதி முதல் சிலாபம் நகரமும் முடக்கம்
சிலாபம் நகரை ஒரு வார காலத்துக்கு முடக்குவதற்கு சிலாபம் நகர சபை தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை முதல் 28 ஆம் திகதி சனிக்கிழமை வரை இவ்வாறு நகரை...
நாட்டை நாம் முடக்குவோம்! தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு
வரும் 23ம் திகதி முதல் 10 நாட்கள் கட்டாயப் பொதுமுடக்கத்தை முன்னெடுக்க நேரிடும் என பல்துறை சார் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
கொவிட் தொற்று மோசமடைந்துவரும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக அரசாங்கம்...
‘கொரோனா பரவல்’ -மைத்திரி விடுத்துள்ள அவசர கோரிக்கை!
“ கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் பொறிமுறை தொடர்பிலும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கூட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் கூட்ட வேண்டும்.” - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...
‘கொரோனா பரவல்’ – கொட்டகலை நகருக்கும் ஒரு வாரம் பூட்டு!
கொட்டகலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை நாளை மறுதினம் (19) ஆம் திகதி முதல் ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை பகுதியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகின்றது. இந்நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே...
நாட்டை ஒரு வாரத்துக்காவது முடக்கவும் – ஆளுங்கட்சி எம்.பி. கோரிக்கை
" குறைந்தபட்சம் நாட்டை ஒரு வாரத்துக்காவது முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரமேநாத் தொலவத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
கம்பஹா வைத்தியசாலையில் வைத்தியராக சேவையாற்றும் தனது சகோதரருக்கும் கொரோனா வைரஸ்...
‘தோட்டப் பகுதிகளில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தவும்’
தோட்டப் பகுதிகளில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன. நாட்டில் கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் பரவல் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு...
நாட்டில் மேலும் 2,663 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 663 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 64 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டை இரு வாரங்களுக்கு முடக்கவும் – அதிஉயர் சபையில் சஜித் கோரிக்கை
முழு நாட்டையும் இரு வாரங்களுக்கு தற்காலிகமாக முடக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
கொவிட் - 19 சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை...



