கொரோனாவால் மேலும் 29 ஆண்களும், 11 பெண்களும் பலி
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 40 பேர் நேற்று (07) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
29 ஆண்களும், 11 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஹட்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜே.வி.பி. செயற்பாட்டாளர்கள் கைது!
சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடன் மீள பெறுமாறு வலியுறுத்தி ஹட்டன் மணிக்கூட்டு கோபுரச்சந்திக்கு முன்பாக ஜே.வி.பியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் நால்வர்...
30 நாடுகளில் பரவியது மிகவும் ஆபத்தான ‘லாம்ப்டா’ வைரஸ்!
ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது லாம்ப்டா என பெயரிடப்பட்ட உருமாற்றமடைந்த கொரோனா வைரஸும், தீவிரமாக பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் பிடியில் இருந்து...
5 ஆண்டுகளுக்கு பிறகு அதிஉயர் சபைக்கு வந்தார் பஸில்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, சற்று நேரத்துக்கு முன்னர் சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.
2015 ஆம் ஆண்டுக்கு பிறகு பஸில் ராஜபக்ச மீண்டும், நாடாளுமன்றத்தில் சபாபீடத்துக்குள்...
நிதி அமைச்சரானார் பஸில் – மஹிந்தவுக்கும் புதிய பதவி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் நிதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அத்துடன், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச்செயற்படுத்துகை அமைச்சராக பிரதமர் மஹிந்த...
பைசர் தடுப்பூசி ஏற்றும் பணி இடைநிறுத்தம்
கொவிஷீல்ட் எக்ஸ்ரா செனகா (Astra Zeneca) தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி டோஸினை பெற்றவர்களுக்கு, இரண்டாவது டோஸாகாக பைசர் தடுப்பூசியை ஏற்றும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இலங்கைக்கு மேலும் 1.4 மில்லியன் எக்ஸ்ரா...
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்தவாரம் முதல் தடுப்பூசி
நாட்டின் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்தவாரம் முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை,...
‘குக்கூ….குக்கூ…. நாய், நரிகளுக்கெல்லாம் அஞ்சேன்’ – தயாசிறி கொக்கரிப்பு
" இராஜாங்க அமைச்சு பதவியை துறப்பதற்கு நான் தயார். இது தொடர்பில் கட்சிக்கும் அறிவித்துள்ளேன். கட்சி கட்டளையிட்டால் நிச்சயம் விலகுவேன். ஆனால் நரிகளின் ஊளையிடலுக்கு அஞ்சப்போவதில்லை." - இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும்...
அமைச்சரவையில் 5 ஆவது ராஜபக்ச – பஸில் இன்று பதவியேற்பு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச இன்று (06) நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். அத்துடன், நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு...
மாத்தளையில் மேலும் இரு கிராமங்கள் முடக்கம்!
மாத்தளை மாவட்டத்தில் மேலும் இரு பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகஹாகொடுவ கிராம சேவகர் பிரிவில் அகலவத்த கிராமமும், அரஸ்கம கிராமமுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை...



