கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி மின் வாயில்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவ, சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதன்படி, ஆரம்ப கட்டத்தில், புறப்பாட்டு முனையத்தில் இரண்டு தானியங்கி குடிவரவு...
ஆறு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் சிக்கியது
கொஸ்கொட பிரதேசத்தில் ஆறு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது .
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று(10) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த போதை...
வவுனியாவில் 7 விலைமாதுகளுக்கு தொற்று நோய் – தொடர்பை பேணியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…
வவுனியாவில் கைது செய்யப்பட்ட விபச்சாரிகள் 7 பேருக்கு தொற்றுநோய் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தம்மை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஏழு விலைமாதுக்கள்...
“ நுவரெலியா, பண்டாரவளை நகரங்களில் சமையல்கலை கல்லூரிகளை ஆரம்பிக்கலாம் – சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதே இலக்கு”
நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத்துறையின் அதிகபட்ச பங்களிப்பை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் தனித்துவமான சமையல் கலையானது உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளதுடன்,...
வடகொரியாவில் தற்கொலை தேச துரோக குற்றமாக அறிவிப்பு
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்துள்ளார். தற்கொலையை தேசத்துரோகக் குற்றமாகக் கருதி கிம் ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிம் அரசு அதிகாரிகள் தங்கள்...
தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியில் விரைவில் மாற்றம்?
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியில் விரைவில் மாற்றம் வரவுள்ளதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் ஆகிய இருவரில் ஒருவர் தலைமைப்பதவிக்கு தெரிவாகலாம் எனவும் உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவருக்கு...
நீனோவால் 2024 இல் ஏற்படவுள்ள ஆபத்து!
பசிபிக் பெருங்கடலில் ‘எல் நீனோ’ காலநிலை நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் அதிகரித்திருக்கும் வெப்பத்தை மேலும் உயர்த்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எல் நீனோ ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்....
வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய வயோதிப தம்பதி விபத்தில் பலி!
வாகன விபத்தில் வயோதிபத் தம்பதியினர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
ஓட்டோவுடன் லொறி மோதியதில் ஏற்பட்ட விபத்திலேயே குறித்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பிரதேசத்தில் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபத்...
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழர் போட்டி!
சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களமிறங்கவுள்ளார்.
யாழ்ப்பாணம் - ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட தர்மன்...
வெள்ளவத்தையில் ரயில் மோதி ஒருவர் பலி
கொழும்பு, வெள்ளவத்தையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று வெள்ளவத்தைப் பொலிஸார் இன்று (10) தெரிவித்தனர்.
கோட்டையில் இருந்து தெஹிவளையை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் அடையாளம் காணப்படவில்லை...



