இலங்கையை கோடிகாட்டி ரஷ்யாவை தாக்கும் உக்ரைன் ஜனாதிபதி
இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு ரஷ்யாவும் ஓர் காரணம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்களை தடை செய்தமை உலகம் முழுவதும் அமைதியின்மையை ஏற்படுத்தியதையும்...
நாடாளுமன்ற வளாக மோதல் – 42 பேர் காயம்! துப்பாக்கிகள் மாயம்!!
நாடாளுமன்றப் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலையால் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
இரு பொலிஸார், ஒரு இராணுவ அதிகாரி, இரு ஊடகவியலாளர்கள் என 42 பேரே...
தொடர் குடியிருப்பில் தீ – 3 வீடுகள் தீக்கிரை!
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டேல்பெத்த கிராம சேவகர் பிரிவின் சுவிண்டன் பெருந்தோட்டப் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள 6 வீடுகளை கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று இரவு 8.30 மணியளவில் மினசாரம்...
கோட்டாவின் இராஜினாமா கடிதத்துக்காக சபாநாயகர் இன்றும் காத்திருப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜுலை 13ஆம் திகதி பதவி விலகுவார்,...
நாடாளுமன்றத்தை கைப்பற்ற சென்ற போராட்டக்காரர்கள்!
போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றிவிடுவார்கள் என்ற அச்சத்தில் , நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்காக இராணுவ கமாண்டோ பிரிவு அழைக்கப்பட்டுள்ளது.
அரச ஊடகங்களையும், பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் இன்று கைப்பற்றினர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்களை...
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்
நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள தியத்த உயன சுற்றுவட்டத்தில் இருந்து சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பொல்துவ சந்தியில் அமைதியின்மை
நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த நிலையில் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
மக்களை அமைதியாக செயற்படுமாறு பாதுகாப்பு பிரிவு கோரிக்கை
புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்டும் வரை பொது மக்கள் அமைதியாக செயற்படுமாறு பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
கோட்டாவை வெளியேற்றுமாறு கோரி மாலைதீவில் போராட்டம்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாடு கடத்தக்கோரி மாலைதீவிலும் போராட்டம் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது
அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு
அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி இன்று மாலை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் அவசர...










