குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை
கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் சுமார் 350,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்களில் 60,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் அவசரமாக கடவுச்சீட்டை பெற...
வரிசை நீள்கிறது – இதுவரை 13 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் வரிசைகளில் காத்திருந்து இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களான எரிபொருள் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குகூட அரசு பெரும் பாடு படுகின்றது.
டொலர் பற்றாக்குறையால் உரிய வகையில் இறக்குமதி...
கோட்டா திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகத்திற்கு புதிய நடைமுறை
தொழில்சார் போக்குவரத்து முச்சக்கர வண்டிகள், தனியார் பஸ்கள், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்கள், அலுவலக பணியாளர்கள் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் கொள்கலன் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களுக்கு முன்னுரிமை...
நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள்
நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் உட்பட ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் வெளிநாடு செல்லத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் ஏற்கனவே பல்வேறு தொழில்களுக்கு வெளிநாடுகளில் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெருமளவிலான...
அடுத்த வாரம் முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்க தீர்மானம்- ராஜித
அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த வாரம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பிர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
ஜனாதிபதியும், பிரதமரும் தற்போதைய நிலையில் தோல்வியடைந்துள்ளதாகவும், இதனால் இந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும்...
கோட்டா பதவி விலகும்வரை ஓயமாட்டோம்! காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்
" நாட்டில் பொருளாதார பிரச்சினையும், வாழ்வாதாரத்துக்கான தேவைகருதிய போராட்டங்களும் இடம்பெற்று வருவதால் கோட்டாகம போராட்டம் தொய்வடைந்து காணப்படுகிறது. ஆனாலும் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும் வரை எமது போராட்டம் ஓயாது."
இவ்வாறு கோட்டாகம போராட்டகாரர்கள்...
ஐ.எம்.எப். குழு நாளை இலங்கை வருகை!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாளை (20) திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே இக் குழுஇலங்கைக்கு விஜயம்...
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் ஆடைத் தொழில்துறை
தற்போதைய பொருளாதார அழுத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் ஊழியர்களுக்கு நிதி சார்ந்த மற்றும் நிதிசாரா உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்....
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான செய்தி
எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான பாடசாலை மாணவர்களுக்கான தவணை விடுமுறைகளை வழங்காதிருக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் விடுமுறையின்றி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
2வாரங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்களும் பாடசாலை மாணவர்களும் இரண்டு வார காலத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரச நிறுவனங்களை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான உரியநடைமுறைகளை அறிவிக்கும்...










