சீனாவிடம் கடன் கேட்டது இலங்கை
சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை கோரியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘எரிபொருள் வரிசை’ – இன்றும் ஒருவர் மயங்கி விழுந்து மரணம்
மக்கள் வரிசையில் காத்திருந்தே, செத்துமடியும் அவல நிலை இலங்கையில் உருவாகியுள்ளது என எதிரணிகள் சுட்டிக்காட்டிவரும் நிலையில், எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
மீரிகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்,...
பதவி விலகுகிறாரா ஜனாதிபதி ?
ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசித்து வருவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பதிவுகள் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இது போன்றதொரு நெருக்கடியான சூழ்நிலையில் தப்பிச்...
சரணடையமாட்டோம் – உக்ரைன் திட்டவட்டம்
துறைமுக நகரான மரியுபோல் நகரை சுற்றி வளைத்து ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில், சரணடைய வேண்டும் என்ற எச்சரிக்கையை உக்ரைன் நிராகரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 26-வது நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த...
சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்க சஜித் அணியும் முடிவு!
சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தீர்மானித்துள்ளது.
கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி மாநாடென்பது ஊடக கண்காட்சியெனவும், பிரச்சினைகளை தீர்க்கும் உண்மையான...
‘நல்லாட்சியில் இப்படி நடக்கவில்லை’ – மைத்திரி ஆதங்கம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை கட்டாயம் பெற வேண்டும் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
நாட்டில் பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும் – ஆனந்தகுமார் கடும் எச்சரிக்கை!
அரசாங்கத்தின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் நாடு பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடிகளை மத்தியதர வர்க்கத்தாலே எதிர்கொள்ள முடியாது போயுள்ள சூழலில் மிகவும் வருமானம் குறைந்த பெருந்தோட்ட மக்களால்...
வன்முறைக் களமாக மாறும் ‘வரிசை’! கத்திக்குத்தில் இளைஞன் பலி!!
நிட்டம்புவ, ஹொரகொல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - 14 ஐ சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை...
ஆளுங்கட்சியினரை அவசரமாக சந்திக்கிறார் கோட்டா
ஆளுங்கட்சியின் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை 22ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சனை, எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார பிரச்சனைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக...
மரக்கறி விலையில் வீழ்ச்சி!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்திருந்த நிலையில்,மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.
இந்நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள்...








