அணையா விளக்கு போராட்டம் 3 ஆவது நாளாக தொடர்கிறது!
அணையா விளக்கு போராட்டமானது இன்றைய தினம் புதன்கிழமை (25) மனித சங்கிலி முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதால் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொள்ளவுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள...
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள்மீது துப்பாக்கிச்சூடு: 25 பேர் பலி!
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, காசாவில்...
ஈரானில் வெற்றிக் கொண்டாட்டம்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் ஏற்பட்டிருந்த போர் 12 நாட்களுக்கு பிறகு நேற்று முடிவுக்கு வந்தது. எனினும், மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்ற நிலை இன்னும் முழுமையாக தணியவில்லை.
இரு நாடுகளும் போர் நிறுத்த விதிமுறைகளை...
மரக்கறி விலைப்பட்டியல் (25.06.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மலையக மக்கள் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது அரசு!
மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா நாட் சம்பளம் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதற்கமைய இவ்வாண்டு 6000 வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, சம்பள அதிகரிப்பிற்கான புதிய...
ஈரான் வைத்திருந்த 400 கிலோ யுரேனியம் எங்கே? – சோதனை அவசியம் என்கிறது அணுசக்தி முகமை
ஈரான் வைத்திருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்ன ஆனது என்ற தகவல் தெரியவில்லை. இது குறித்த சோதனை அவசியம் என சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கூறியுள்ளது.
மின்சாரம் தயாரிக்கவே அணுசக்தியை பயன்படுத்துகிறோம்...
ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன: ட்ரம்ப் சாடல்
போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளுமே அதனை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதிடொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,
"ஈரானை இஸ்ரேல் தாக்கக் கூடாது. தனது விமானிகளை அத்தகைய...
இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுங்கள்
ஈழத்தமிழர்கள் மீது திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இனமேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில் சாத்தியமற்றது என்பதால், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையிலான சர்வதேச...
அணையா விளக்கு போராட்டம் தொடர்கிறது!
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி "அணையா விளக்கு" தொடர் போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது.
செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம்...
போர் நிறுத்தத்தைமீறி தாக்குதல்: இஸ்ரேல் குற்றச்சாட்டு: ஈரான் மறுப்பு!
போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பின்னர், தங்கள் நாடு மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ள இஸ்ரேல், பதிலடி தாக்குதல்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், போர் நிறுத்தம் தொடங்கிய பின்னர் எந்த தாக்குதலும்...













