ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ஜீவன்
இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பொதுத்தேர்தலுக்கான தனது வாக்குரிமையை பயன்படுத்தினார்.
கொத்மலை - வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, வாக்களித்தார்.
மக்கள் மதியம்வரை காத்திருக்காது இயலுமானவரை காலைவேளையிலேயே வாக்குரிமையை பயன்படுத்துமாறு மக்களிடம்...
வெற்றிநடை தொடர்கிறது!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் இலங்கை அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 வருடங்களின்...
நாடு முழுதும் வாக்களிப்பு ஆரம்பம்!
அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற நாடாளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்றுவருகின்றது.
இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. மாலை 4 மணிவரை வாக்களிக்கலாம்.
நாடாளுமன்றத்துக்கு மக்கள் ஆணைமூலம் 196 உறுப்பினர்களும், தேசிய...
அறுகம்பே குறித்த பயண ஆலோசனையை நீக்கியது அமெரிக்கா
அறுகம்பை பிரதேசம் தொடர்பில் அமெரிக்கா விடுத்திருந்த பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரையில் அறுகம்பை பிரதேசத்திற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கடந்த 23ஆம் திகதி கொழும்பில்...
பதுளையில் 530 வாக்களிப்பு நிலையங்கள்!
பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கன, வியலுவ, பசறை, பதுளை, ஹாலிஎல, ஊவாபரணகம, வெளிமடை, பண்டாரவளை மற்றும் அப்புத்தளை ஆகிய தேர்தல் தொகுதிகளில் இருந்து 705772 பதிவு செய்யப்பட்ட...
தேர்தல் சட்டங்களை மதித்து செயற்படுங்கள்!
தேர்தல் தினத்தன்று சட்டம் கடுமையாக அமுலில் இருக்கும். எனவே, அனைத்து தரப்புகளும் தேர்தல் சட்ட திட்டங்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில்...
நுவரெலியாவில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லும் நடவடிக்கை ஆரம்பம்
பொது தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் 605,292 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா...
அமைதியான தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 70 ஆயிரம் பொலிஸார் உட்பட 90 ஆயிரம் பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்...
நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்கள்! 08 ஆசனங்களுக்காக 308 பேர் களத்தில்!!
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் நுவரெலியா மாவட்ட அரச அதிபருமான திரு.நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்திற்கான 08 பாராளுமன்ற...













