மே 11 வரை ஊடரங்கு நீடிப்பு!
நாட்டில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மே 11 ஆம் திகதி காலை 07 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் பொதுவெளியில் நடமாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்!
நாடு முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது.
மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தின் பின் பதவி விலகுவார் மஹிந்த! எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் குறிவைப்பு!!
மஹிந்த ராஜபக்ச தாம் வகிக்கும் பிரதமர் பதவியை இன்றுமாலை ராஜினாமாச் செய்வார் என்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. இன்று மாலை அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் அவர் தனது ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிப் பார்...
29 ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம் – அவசரகால சட்டத்துக்கும் கடும் எதிர்ப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 29 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அவசரகால...
சபையில் சாணக்கியனுக்கு ரணில் பளார்…பளார்…..!
“ சாணக்கியனுக்குதான், ராஜபக்சக்களுடன் தொடர்பு உள்ளது. எனக்கு அவ்வாறு எந்த தொடர்பும் இல்லை. ” - இவ்வாறு இரா. சாணக்கியனுக்கு இன்று பதிலடி கொடுத்தார் ரணில் விக்கிரமசிங்க.
சபையில் இன்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க,
“...
மொட்டு கட்சியும், சுயாதீன அணிகளும் சங்கமம் – பிரதி சபாநாயகரானார் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய
நாடாளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற பிரதி சபாநாயருக்கான தேர்வில், சுயாதீன அணிகளின் சார்பில் களமிறக்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வெற்றிபெற்று, பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 148 வாக்குகள் அளிக்கப்பட்டன.
பிரதான...
ஆதாரம் இருந்தால் சிஐடியிடம் ஒப்படைக்கவும் – ஜே.வி.பிக்கு மைத்திரி சவால்!
" என்னை பற்றி ஜே.வி.பி. வெளியிட்ட தகவல் அரசியல் சேறுபூசும் நடவடிக்கையாகும்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...
புதிய அரசமைப்பு குறித்து ஆராய உப குழு
புதிய அரசியலமைப்பு குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நாலக கொடஹேவா இன்று தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா...
மே தின கூட்டத்தில் பொன்சேகா – ஹரின் மோதல்!
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே...
பிரதமர் கட்டாயம் பதவி விலக வேண்டும்! மகா சங்கத்தினர் தீர்மானம்
சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அமைச்சரவை உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மகா சங்கத்தினர் இன்று (30) ஓரணியில் திரண்டு தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளனர்.
அத்துடன், மகாநாயக்க தேரர்களின்...











