வெலிக்கடை சிறைச்சாலை கைதிக்கு கொரோனா தொற்று!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதியொருவர் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

குறித்த கைதி கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு தடுத்துவைக்கப்பட்டவரென அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கைதிக்கு கொரோனா பரவியுள்ள நிலையில், அவருடன் தொடர்பை பேணியவர்கள், அவருடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள்,  சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோருக்கும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.  தற்போது அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles