தீவிரமடையும் டெங்கு அச்சுறுத்தல்: 24 மணிநேரத்துக்குள் 1,069 பேர் பாதிப்பு

இலங்கையில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் மிகக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது.குறிப்பாக கடந்த 24 மணிநேரத்துக்குள் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தற்காலிக இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள 47,179 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

வழக்கமாக ஒரு நாளில் பதிவாகும் எண்ணிக்கையை விட, தற்போது தினசரி தொற்று விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களே அவதானம்……

சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடுங்கள்.

 

Related Articles

Latest Articles