லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் அந்த அமைப்புக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் உக்கிர தாக்குதல்களில் நேற்று புதன்கிழமை அன்று மட்டும் 200 இற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
லெபனான்மீதான தாக்குதலை ஈரான் உட்பட பல நாடுகள் கண்டித்துள்ளன.
இந்நிலையில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், அதற்கு மிகக்கடுமையான பதிலடி கொடுக்க இஸ்ரேலிய ராணுவம் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.










