உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு இணங்க, அனைத்து வணிகக் கப்பல்களும் ஈரானிய கடல்சார் அமைப்பால் ஏற்கனவே வகுக்கப்பட்ட பாதையில் தடையின்றிப் பயணிக்க முடியும் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய இந்தச் சலுகையானது வரும் ஏப்ரல் 22-ஆம் திகதியுடன்முடிவடையும் போர்நிறுத்தக் காலாவதி வரை மட்டுமே அமுலில் இருக்கும்.
