ஈரானின் புதிய உச்ச தலைவரை ஏற்க முடியாது: ஆயுதங்களை கைவிடுமாறு ட்ரம்ப் அழைப்பு!

வெனிசுலாவில் நடந்தது போல, ஈரானிலும் புதிய தலைவர் நியமனத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் புதிய உச்ச தலைவராக கமெனியின் 2-வது மகன் மொஜ்தபா கமெனி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை ஏற்க முடியாது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.

இந்த நிலையில் ஈரான் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனியை ஏற்க முடியாது என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

“ அயதுல்லா அலி கமேனியின் கொள்கைகளைத் தொடரும் ஒரு புதிய ஈரானியத் தலைவரை ஏற்க முடியாது. இது அமெரிக்காவை 5 ஆண்டுகளில் மீண்டும் போருக்குத் தள்ளும்.

எனவே வெனிசுலாவில் நடந்தது போல, ஈரானிலும் புதிய தலைவர் நியமனத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டும்.

ஈரானுக்கு நல்லிணக்கத்தையும் அமைதியையும் கொண்டு வரக்கூடிய ஒருவரை நாங்கள் விரும்புகிறோம்.

ஈரானை வழிநடத்த பகுத்தறிவு மற்றும் விவேகமுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும்.

ஈரான் இராணுவம், புரட்சி கர காவல்படை தங்களது ஆயுதங்களை கீழே போடுமாறு அழைப்பு விடுக்கிறேன். புதிய, சிறந்த ஈரானை பெரும் ஆற்றலுடன் வடிவமைக்க எங்களுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என அமெரிக்க ஜனாதிபதி மேலும் கூறினார்.

Related Articles

Latest Articles