பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் Ceylon Tea villages 500 (சிலோன் தேயிலை கிராமங்கள் 500) வேலைத்திட்டம் இன்று (15.07.2026) நாடு முழுவதும் 11 மாவட்டங்களில் 144 இடங்களில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இரத்தினபுரி, கலவானையில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வருமானம் என்பவற்றை அதிகரிக்கும் நோக்கிலேயே தேயிலை கிராமங்களை உருவாக்குவதற்குரிய திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.










