Home Blog Page 10

சிஎஸ்கே தோல்வி!

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்​பி​யான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்​டத்​தில் 2008-ம் ஆண்டு சாம்​பிய​னான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி​யிடம் 8 விக்கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது.

குவாஹாட்​டி​யில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் டாஸ் வென்ற ராஜஸ்​தான் அணி​யின் கேப்​டன் ரியான் பராக் பீல்​டிங்கை தேர்வு செய்​தார்.

பேட்​டிங்கை தொடங்​கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்​கமே அதிர்ச்​சி​யாக இருந்​தது. சஞ்சு சாம்​சன் 6 ரன்​கள் எடுத்த நிலை​யில் இடதுகை வேகப்​பந்து வீச்​சாள​ரான நந்த்ரே பர்கர் பந்​தில் போல்​டா​னார். மற்​றொரு தொடக்க வீர​ரான கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் 11 பந்​துகளில், 6 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோப்ரா ஆர்ச்​சர் பந்​தில் போல்​டா​னார்.
இதையடுத்து களமிறங்​கிய ஆயுஷ் மாத்​ரே, நந்த்ரே பர்​கர் வீசிய பவுன்​ஸர் பந்தை விளாச முயன்​றார். ஆனால் பந்து கையுறை​யில் பட்டு விக்​கெட் கீப்​பர் துருவ் ஜூரெலிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து இம்​பாக்ட் பிளேயர் விதி​யின் கீழ் களமிறங்​கிய சர்ஃப​ராஸ் கான் மட்​டையை சுழற்றினார். நந்த்ரே பர்​கர் வீசிய ஓவரில் மிட்விக்​கெட் திசை​யில் பவுண்​டரியை​யும், பேக்​வேர்டு ஸ்கொயர் லெக் திசை​யில் சிக்​ஸரை​யும் அடித்து அசத்​தி​னார்.

மறு​முனை​யில் நிதான​மாக விளை​யாடிய மேத்யூ ஷார்ட் 7 பந்​துகளில், 2 ரன்​கள் எடுத்​த நிலை​யில் சந்​தீப் சர்மா வீசிய பந்தை மிட்விக்​கெட் திசை​யில் நின்ற ஜெய்​ஸ்​வாலிடம் எளி​தாக பிடி​கொடுத்து நடையை கட்​டி​னார். பவர்பிளேவில் சிஎஸ்கே 41 ரன்​கள் சேர்த்​தது. 7-வது ஓவரை வீசிய ரவீந்​திர ஜடேஜா 2 விக்​கெட்​களை வீழ்த்தி சிஎஸ்கேவின் நெருக்​கடியை அதி​கரித்​தார்.

சர்ஃப​ராஸ் கான் 12 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்டரிகளு​டன் 17 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜடேஜா பந்தை ஸ்வீப் ஷாட் விளை​யாட முயன்று எல்​பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்​கிய ஷிவம் துபே 3-வது பந்தை சிக்​ஸருக்கு பறக்​க​விட்ட நிலை​யில் கடைசி பந்தை விளாச முயன்ற போது லாங் ஆஃப் திசை​யில் ரவி பிஷ்னோ​யிடம் கேட்ச் ஆனது. ஷிவம் துபே 4 பந்​துகளில், 6 ரன்​கள் சேர்த்தார்.

சீராக ரன்​கள் சேர்த்து வந்த கார்த்​திக் சர்மா 15 பந்​துகளில், ஒரு சிக்​ஸருடன் 18 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரிஜேஷ் சர்மா பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். ஐபிஎல் தொடரில் பிரிஜேஷ் சர்​மாவுக்கு இது முதல் விக்​கெட்​டாக அமைந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்​கிய நூர் அகமது 1 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்​சர் பந்​தி​லும், மேட் ஹென்றி 5 ரன்னில் ரவி பிஷ்னோய் பந்​தி​லும் நடையை கட்​டினர். ஒரு முனை​யில் விக்​கெட் சரிந்த போதி​லும் மறு​முனை​யில் சீராக ரன்​கள் சேர்த்​தார் ஜேமி ஓவர்​டன். இதனால் சிஎஸ்கே 17.1-வது ஓவரில் 100 ரன்​களை எட்​டியது.

சிறப்​பாக விளை​யாடி வந்த ஜேமி ஓவர்​டன் 36 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 43 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரன் அவுட் ஆனார். முடி​வில் 19.4 ஓவர்​களில் 127 ரன்களுக்கு சிஎஸ்கே அணி ஆட்​ட​மிழந்​தது. அன்​ஷுல் கம்​போஜ் 7 ரன்​கள் சேர்த்​தார். கடைசி விக்​கெட்​டுக்கு ஜேமி ஓவர்​டன், அன்​ஷுல் கம்​போஜ் ஜோடி 33 ரன்​கள் சேர்த்​தது. ராஜஸ்​தான் அணி தரப்​பில் ஜோப்ரா ஆர்ச்​சர், நந்த்ரே பர்கர், ரவீந்​திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர்.

128 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ராஜஸ்​தான் அணி 12.1 ஒவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 128 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 36 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​களும், ரியான் பராக் 11 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 14 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

முன்னதாக 15 வயதான வைபவ் சூர்​ய​வன்ஷி 17 பந்துகளில், 5 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​களும், துருவ் ஜூரெல் 9 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 18 ரன்களும் எடுத்து அன்​ஷுல் கம்​போஜ் பந்​தில் ஆட்டமிழந்தனர். 47 பந்​துகளை மீதம் வைத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில்​ வெற்​றி பெற்​ற ராஜஸ்​தான்​ ராயல்​ அணி 2 புள்ளிகளை பெற்றது.

மரக்கறி விலைப்பட்டியல் (31.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை விஜயம்!

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ இன்று (31) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மதிப்பீடு செய்து வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே அவர் கொழும்பு வருகின்றார்.

இவ்விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதியையும் ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் கடந்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

அவர் ரஷ்யா திரும்பிய நிலையிலேயே பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று கொழும்பு வருகின்றார்.

ஈரானின் எண்ணெய் வளம் அமெரிக்கா வசமாகும்!

“ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவை கைப்பற்றுவோம். அந்தத் தீவை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மிகவும் எளிது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு டொனால்ட் ட்ரம்ப்அளித்த பேட்டியில்,

“ஈரான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக அமெரிக்கா சார்ந்த 20 எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக கடந்து செல்ல ஈரான் அனுமதி வழங்கியிருக்கிறது. அமெரிக்கா, ஈரான் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பிருக்கிறது.

தற்போதைய சூழலில் அமெரிக்கா, இஸ்ரேல் படைகளில் தாக்குதலில் ஈரான் முழுமையாக சீர்குலைந்திருக்கிறது. ஈரானில் சுமார் 13,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியிருக்கிறோம்.

தாக்குதலை சமாளிக்க முடியாமல் அந்த நாடு பேச்சுவார்த்தையில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. ஹார்முஸ் நீரிணையை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஈரானின் கச்சா எண்ணெய் வளத்தை கைப்பற்ற திட்டமிட்டு இருக்கிறோம். குறிப்பாக ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவை கைப்பற்றுவோம். அந்த தீவில் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை. எனவே கார்க் தீவை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மிகவும் எளிது.

வெனிசுலா எண்ணெய் வளம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கிறது. இதேபோல ஈரானின் எண்ணெய் வளமும் அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் வரும். ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஒருவேளை உயிரிழந்திருக்களாம் அல்லது மிகவும் மோசமான நிலையில் இருக்கலாம்.

தற்போது ஈரானில் ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஈரான் பிரதிநிதிகள் புத்திசாலிகள். அவர்கள் சூழ்நிலையை நன்று அறிவார்கள்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கோரிக்கைகள் நியாயமற்றவை! ஈரான் விளக்கம்!!

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என ஈரான் வெளிவிவகார அமைச்சு மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இடைத்தரகர்கள் வழியாக அமெரிக்கா விடுத்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமற்றவை மற்றும் வரம்பு மீறியவை என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் Esmaeil Baghaei தெரிவித்தார்.

தனது நிலைப்பாட்டில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும், எனினும், அமெரிக்கா தனது கருத்துக்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்டை நாடுகளின் அமைதி முயற்சிகளை ஈரான் மதித்தாலும், பிராந்தியப் போரைத் தொடங்கியவர்கள் யார் என்பதை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மொட்டு கட்சியின் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதியாம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிறுத்தும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“எதிரணிக்குரிய பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தம்மால் முடிந்தளவு நிறைவேற்றிவருகின்றது.

இலங்கையில் இந்த ஆட்சியின்கீழ் ஜனநாயக உரிமைகள் இல்லாதொழிக்கப்பட்டுவருகின்றன. அடக்குமுறை கையாளப்படுகின்றது. இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்.

இந்த அரசாங்கத்தை தேர்தல்மூலம் தோற்கடிப்பது எமக்கு சவாலான விடயமாக அமையாது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில் நிறுத்தப்படும் வேட்பாளரே இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாவார் என்பது உறுதி.” – என சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு!

சமூகத்தை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார நன்மைகள் சமூகத்தில் சமமாகப் பகிரப்படுவதை உறுதி செய்வதற்கும் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது “சமூக சக்தி” வேலைத்திட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான தற்போதைய முன்னேற்றம், அதனுடன் தொடர்புடைய திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் 2027ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டதோடு இது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக, “சமூக சக்தி” வழிநடத்தல் குழுவின் விசேட கலந்துரையாடலை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, பன்முக அணுகுமுறையைக் கொண்ட சமூக வலுவூட்டல் திட்டமாக “சமூக சக்தி” முன்னெடுக்கப்படுகிறது. அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படும் 03 தேசிய மட்டத்திலான வேலைத்திட்டங்களில் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகச் சென்றடைவதை உறுதி செய்வதும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அபிவிருத்தியின் ஊடாக கிராமப்புறங்களை முழுமையான வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்வதும் இந்தத் திட்டத்தின் பிரதானநோக்கமாகும்.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.எம்.எம்.யு.பி. ஹேரத், கிராமிய அபிவிருத்திப் பணியகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

காரைக்குடி தொகுதியில் களமிறங்கும் சீமான் வேட்பு மனு தாக்கல்!

காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது சொந்த தொகுதியான காரைக்குடியில் இம்முறை களமிறங்கியுள்ளார்.

இந்த சூழலில், காரைக்குடி தொகுதியில் சீமான் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கல் செய்தபோது சீமானுடன் அவரின் தாய் மற்றும் மனைவி கயல்விழி ஆகியோர் உடனிருந்தனர்.

காரைக்குடி தொகுதியில் நாதக சார்பில் சீமான், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, தவெக சார்பில் பிரபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி!

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்படி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்த தகவலை வெளியிட்டனர்.

இதற்கமைய மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பிரிவுகளுக்கும் 13.56 சதவீத மின் கட்டண உயர்வு கோரப்பட்டிருந்தது.

எனினும், பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம், ஏற்றுமதி வணிகம் உடப்ட அனைத்து காரணிகளையும் கருத்திற்கொண்டு ஒவ்வொரு பிரிவுக்குமாக கட்டண உயர்வை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது எனவும் ஆணைக்குழு உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

ஊடக சந்திப்பின்போது அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் வருமாறு,

0 – 30 அலகுகளுக்கு 4.3 சதவீத அதிகரிப்பு இடம்பெறும். மாதாந்தம் 15 ரூபா அதிகரிக்கும்.

31 – 60 அலகுகளுக்கு 6.9 சதவீத அதிகரிப்பு இடம்பெறும். மாதாந்தம் 45 ரூபா அதிகரிக்கும்.

61 – 90 அலகுகள் பயன்படுத்தினால் 6.9 சதவீத அதிகரிப்பு இடம்பெறும். மாதாந்தம் 120 ரூபா.

91 – 180 அலகுகளுக்கு 7.2 சதவீத அதிகரிப்பு இடம்பெறும். மாத கட்டணம் 240 ரூபாவால் அதிகரிக்கப்படும்.

180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தினால் 25 சதவீத அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

மாதாந்த மின்சார நுகர்வு 180 அலகுகளுக்குக் குறைவாகக் காணப்படும் மதத் தலங்கள் மற்றும் புனித பூமிகளுக்கு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் மதத்தலங்கள் மற்றும் புனித பூமிகளுக்கு 6.9 சதவீத அதிகரிப்பு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இலங்கையில் ஏற்கனவே எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே தற்போது மின்சார கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு போர்ச்சூழலால் உலகில் பல நாடுகளிலும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

லெபனானில் ராணுவ நடவடிக்கை: 6 இஸ்ரேல் படையினர் காயம்!

தெற்கு லெபனானில் இராணுவ நடவடிக்கைகளின் போது ஆறு இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஏவுகணைத் தாக்குதல்கள், ட்ரோன் வெடிப்புகள் மற்றும் ஒரு செயல்பாட்டு விபத்து ஆகியவற்றால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவும் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

லெபனானின் தெற்குப் பகுதியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் இஸ்ரேல் தனது தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது.

இந்தத் தொடர் மோதல்கள் ஏற்கனவே லெபனானில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரிழப்பிற்கு காரணமாகியுள்ளன.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்

0
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி....

புதன்கிழமை விடுமுறை இரத்து!

0
  "எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அத்தியாவசிய...