Home Blog Page 9

சமஷ்டிக் கொள்கையை ஒருபோதும் கைவிடோம்

” இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பது தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட ஜனநாயகப் பண்புமிக்க ஒரு கட்சி. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் சமஷ்டிக் கொள்கையைக் கைவிடப்போவதில்லை” என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 128 ஆவது ஜனன தின நிகழ்வு, மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்குக் கிளையின் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் அங்கு ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஜனநாயகப் பண்புமிக்க கட்சி

“தமிழரசுக் கட்சி என்பது அடக்குமுறைகளைக் கொண்ட கட்சியல்ல. தந்தை செல்வாவின் காலத்தில் எவ்வித அடக்குமுறைகளும் பிரயோகிக்கப்படவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கொள்கை ரீதியான கட்சியாகவே இது திகழ்ந்தது. தனிமனிதச் சிந்தனைகளை விட, தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய பொதுச் சிந்தனையே எமது கொள்கையாகும்.

சமஷ்டிக் கொள்கையை நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைவிடவில்லை. இனிமேலும் கைவிடமாட்டோம். எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இதுவே அடிப்படைப் பண்பாகக் காணப்பட வேண்டும். இதனைத் தனிப்பட்ட ரீதியில் எவரும் மாற்றவோ அல்லது வேண்டாம் என்று சொல்லவோ முடியாது.

பேரினவாத சக்திகள் ஒற்றையாட்சிச் சிந்தனையிலும், மறுபுறம் அதிதீவிரச் சிந்தனை கொண்டவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையிலும் இருந்தனர். இவ்விரண்டுக்கும் இடையில் எட்டப்படக்கூடிய ஒரே நடுநிலைத் தீர்வு ‘கூட்டாட்சி’ முறையாகும். இது தந்தை செல்வாவினால் வகுக்கப்பட்ட தீர்மானமாகும். ஒற்றையாட்சிக்குள் எங்களைக் கொண்டுவர நினைக்கும் பேரினவாத சக்திகளின் திட்டங்களுக்கு நாங்கள் ஒருபோதும் தலையாட்ட முடியாது.

ஒற்றுமை என்பது பேசுவதற்கு இனிமையாக இருக்கலாம். ஆனால், வெளியில் ஒற்றுமையைப் பேசிக்கொண்டு உள்ளுக்குள் பகையை வளர்த்தால் அது ஒருபோதும் சாத்தியப்படாது. தமிழ்த் தேசியக் கட்சிகள் உண்மையான நோக்கத்தில் ஒன்றிணைய வேண்டும்.” – என்றார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், இ. சிறிநாத், மூத்த உறுப்பினர் அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், பேராசிரியர் ந.புஸ்பராசா, வாலிப முன்னணியின் மாவட்டத் தலைவர் க. சோபனன், மகளிர் அணியின் உப தலைவி த. கௌரி, முன்னாள் மேயர் தி.சரவணபவன் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மலையக அரசியல் அரங்கத்தின் உயர்பீட உறுப்பினராக கவிஷ்க்க இரவீந்திரன் நியமனம்!

மலையக அரசியல் அரங்கத்தின் தென் மலையக மாவட்டங்களுக்கான அமைப்பாளராகவும் உயர்பீட குழு உறுப்பினராகவும் காலி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஷ்க்க இரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற அரங்கத்தின் மத்தியகுழு கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கி வைகைகப்படைடமை குறிப்பிடத்தக்கது.

காலி மாவட்ட இளைஞர் சம்மேளனங்களின் உறுப்பினராக செயற்பட்ட கவிஷ்க்க இரவீந்திரன் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மலையக அரசியல் அரங்கத்தின் அமைப்புச் செயற்பாடுகளை விஸ்தரிக்க ஏதுவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என அரங்கத்தின் உயர் பீடம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு: ஜூலை 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதனை எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மன்று உத்தரவிட்டது.

1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை ஒன்றின் போது கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் மண்டைதீவு புதைகுழி விவகாரம் தீவகப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பான முறைப்பாட்டை, கடந்த ஆண்டு செப்டெம்பர் 4 ஆம் திகதி தனது மகனைப் பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்டீபன் மரில்டா மற்றும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் ஊர்காவற்றுறை பொலிஸில் பதிவு செய்திருந்தனர்.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பொலிஸார் தரப்பிலிருந்து சான்றுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட தரப்பு மற்றும் காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் சார்பாக பூர்ணி மரியநாயகம் (காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணி), த.செல்வக்குமார் (காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர்), சுவாமிநாதன் பிரகலாதன் (வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் மற்றும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவர்) ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

முன்னதாக கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போது, புதைகுழி அகழ்வுப் பணிக்கான வசதிகள் இல்லை என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே, இந்த வழக்கு மீண்டும் ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நானுஓயாவில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் படும் காயம்: சாரதி கைது!

நானுஓயா டெஸ்போட் பகுதியில் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்ட பெண் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிதிபலகையில் இருந்து இவ்வாறு தவறி வீதியில் விழுந்த பெண்ணின் மீது பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவரது ஒரு காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் விசாரணை நடக்கின்றது.

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கையை உடன் நிறுத்துமாறு சீனா வலியுறுத்து!

அமெரிக்காவும் இஸ்ரேலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான Ishaq Dar சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

பீஜிங்கில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது பிராந்திய மோதல்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

ஈரானில் நடைபெற்று வரும் போர் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.

போரினால் ஈரானில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் சேதமடைவதற்கு சீனா தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களைக் கடுமையாக எதிர்ப்பதுடன், அமைதியை நிலைநாட்டத் தொடர்ந்து முயற்சிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களுக்கு வழங்கப்பட்ட உதவிக்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சீனா தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

ஈரானில் ஆட்சி மாற்றம் நேரடி இலக்கு அல்ல!

ஈரானில் ராணுவ ரீதியான இலக்குகளில் பாதிக்கும் மேலான பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடனான எப்போது முடிவுக்கு வரும் என்பது தொடர்பான கேள்விக்கு அவர் தெளிவான பதிலை வழங்கவில்லை.

அத்துடன், ஈரானின் ஆயுத உற்பத்தி நிலையங்கள் மற்றும் அணுசக்தி திட்டங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டார்.

ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தங்களது நேரடி நோக்கமல்ல என்றும், அந்நாட்டின் தற்போதைய ஆட்சி உள்நாட்டிலேயே வீழ்ச்சியடையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் விவரித்துள்ளார்.

‘மத்திய கிழக்கு போர்’ ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை தவறு!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு UAE படையினரை அனுப்பிய ஆஸ்திரேலிய அரசின் முடிவு, நாடாளுமன்ற விதிகளை மீறியுள்ளதாக கிறீன்ஸ் கட்சி செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு போர் மண்டலத்திற்குப் படைகளை அனுப்பும்போது பின்பற்ற வேண்டிய சட்டபூர்வ விளக்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் முறையாக முன்னெடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் வன்முறைச் சூழலில், இத்தகைய முக்கியமான முடிவுகள் பொதுமக்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

முறையான வெளிப்படைத்தன்மை இல்லாமல் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது என்பதே அவரது முக்கிய வாதமாகும்.

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான போக்கைக் கண்டித்துள்ள அவர், இது போன்ற ராணுவப் பயன்பாடுகளுக்கு முறையான அனுமதி அவசியம் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

குருக்கள்மடத்தில் இரண்டாவது நாளாக தொடரும் அகழ்வு பணி!

தற்செயலாக எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படாமல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்த: ஒரு மனிதப் புதைகுழி என சந்தேககிக்கப்படும் தளத்தில் அகழ்வாய்வுப் பணிகள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெறுகின்றன.

தற்செயலாக மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படாமல், நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் இலங்கையில் அகழ்வாய்வு செய்யப்படும் முதல் மனிதப்புதைகுழி இதுவாகும்.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டம், குருக்கள்மடத்தில், அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில், களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் மேற்பார்வையிலும், 11 வைத்திய மற்றும் சட்ட நிபுணர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பங்களிப்புடனும், நேற்றைய தினம் திங்கட்கிழமை (மார்ச் 30) அகழ்வாராய்வுப் பணிகள் ஆரம்பமாகின.

நாளாந்தம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்ள குழுவினர் திட்டமிட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அடையாளம் காணப்பட்ட பகுதியில் 5 மீற்றர் நீளம், 5 மீற்றர் அகலம் மற்றும் குறைந்தது 9 அடி ஆழத்தில் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ஜாபிர் ராசிக் மொஹம்மட் தெரிவிக்கின்றார்.

“ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில், ரேடார் மூலம் ஆய்வு செய்தமைக்கு அமைய நிலத்திற்கு கீழ் சில இடையூறுகள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டு அறிக்கையிடப்பட்டிருந்தது. அதற்கமைய நீதிமன்றத்தின் அனுமதிக்கு அமைய முதல் கட்டமாக இந்த பிரதேசம் தெரிவு செய்யப்பட்டு, அந்த பிரதேசத்தில் 5 மீற்றர் நீளமும், 5 மீற்றர் அகலமும் கொண்ட பிரதேசத்தில் அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 9 அடி ஆழத்திற்கு அகழ்வதாக தீர்மானிக்கப்பட்டு பணிகள் இடம்பெறுகின்றன.”

குருக்கள்மடத்தில் உள்ள மனிதப் புதைகுழியில் அகழ்வாய்வை ஆரம்பிக்க ரூ. 2.8 மில்லியன் தேவைப்படும் என்ற மதிப்பீட்டை கொழும்பு தலைமை சட்ட வைத்திய அதிகாரி செபடெம்பர் 23, 2025 அன்று களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

மார்ச் 09, களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மார்ச் 30, மனித புதைகுழியில் முதல் கட்ட அகழ்வாய்வை ஆரம்பிக்க நீதவான் உத்தரவிட்டார்.

குருக்கள்மடத்தில் மனிதப் மனிதப்புதைகுழி இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் ஓகஸ்ட் 25, 2025 அன்று அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குறித்த படுகொலைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2014 சுற்றுலா நீதிமன்றம்

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து காத்தான்குடிக்குத் திரும்பிய முஸ்லிம்கள் குழு ஒன்று படுகொலை செய்து புதைத்ததாக உள்ளூர்வாசி அப்துல் மஜீத் அப்துல் ரவூப் களுவாஞ்சிக்குடி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த வழக்கு ஜூலை 1, 2014 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, படுகொலை செய்து புதைக்கப்பட்டமைக்கான நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் அகழ்வினை மேற்கொள்வதற்குத் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிபதி ஏ.எம். ரியால் உத்தரவிட்டார், எனினும் அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

11 வருடங்களின் பின்னர் களுவாஞ்சிக்குடி, நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூஃப் தனது சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், ஜூலை 11, 2025 அன்று இந்த வழக்கு திறந்த நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஹார்முஸ் நீரிணை: கப்பல் பயணத்துக்கு வரி விதிக்க ஈரான் திட்டம்!

உலகளாவிய எரிசக்தி போக்குவரத்திற்கு முக்கியத்துவமான ஹார்முஸ் நீரிணையில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு சுங்க வரி விதிக்கும் புதிய திட்டத்திற்கு ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கமைய ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகள் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாகச் செல்ல தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமன் நாட்டுடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ள இந்த புதிய நடைமுறையானது, பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பையும் வருவாயையும் இலக்காகக் கொண்டுள்ளது.

போர்க்காலச் சூழலால் இந்த நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களின் எண்ணிக்கை ஏற்கனவே பெருமளவு குறைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு சர்வதேச வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய்களில் கணிசமான பகுதி இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுவதால், ஈரானின் இந்த அதிரடி முடிவு உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவருகின்றது.

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம்.

கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்திருக்கிறது. நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து, இந்த வசூல் நிலையை அடைந்திருக்கிறது. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

‘யூத்’ படத்தின் முதல் நாள் வசூலைவிட, 11-வது நாள் வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சுராஜ் வெஞ்சுரமுடு, தேவதர்ஷினி, அனிஷ்மா உள்ளிட்ட பலர் கென் கருணாஸுடன் நடித்திருந்தனர். முழுக்க புதுமுகங்கள் நடித்த இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

‘யூத்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்கள் கென் கருணாஸை நாயகனாக நடிக்கவைக்க தொடர்பு கொண்டு வருகிறார்கள். ஆனால், ‘யூத்’ படத்தினை விளம்பரப்படுத்த பல்வேறு ஊர்களுக்கு படக்குழுவினருடன் பயணப்பட்டு வந்தார் கென் கருணாஸ்.

இப்படத்தினை பார்த்துவிட்டு சூர்யா, கார்த்தி, சிம்பு உல்ளிட்ட பலர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்

0
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி....

புதன்கிழமை விடுமுறை இரத்து!

0
  "எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அத்தியாவசிய...