Home Blog Page 11

ஈரான் போரில் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க ராணுவ சொத்துகள் சேதம்!

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்​ரேல் கூட்​டுத் தாக்​குதல் தொடங்கி மூன்று வாரங்​கள் நிறைவடைந்துள்ள நிலை​யில், ஈரானின் ஏவு​கணை மற்றும் டிரோன் தாக்​குதல்​களால் அமெரிக்​கா​வின் 3 பில்லியன் டாலர் மதிப்​புள்ள ராணுவத் தளவாடங்​கள் சேதமடைந்​துள்​ள​தாகத் தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன.

இதுகுறித்து அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும் ‘வால் ஸ்ட்​ரீட் ஜர்​னல்’ நாளிதழ் செய்​தி​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது:

ஈரான் உடனான மோதல் தொடங்​கிய முதல் மூன்று வாரங்​களில் மட்​டும் அமெரிக்​கா​விற்கு சுமார் 1.4 பில்​லியன் டாலர் முதல் 2.9 பில்​லியன் டாலர் இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாகக் கணக்​கிடப்​பட்​டுள்​ளது.

இதனை பென்​டகன் முன்​னாள் பட்​ஜெட் அதி​காரி எலைன் மெக்​கஸ்​கர் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார்.

ஈரான் நடத்​திய தாக்​குதலில் அமெரிக்​கா​வின் அதிநவீன எஃப்​-35 ரக போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்து அவசர​மாகத் தரையிறக்​கப்பட்​டது. மேலும், குவைத் விமானம் தவறு​தலாகச் சுட்​ட​தில் மூன்று எஃப்​-15இ ரக விமானங்​கள் விழுந்து நொறுங்​கின.

ஈராக் வான்​பரப்​பில் இரண்டு எரிபொருள் நிரப்​பும் விமானங்​கள் மோதிக்​கொண்​ட​தில் ஆறு வீரர்​கள் உயிரிழந்​தனர். சவுதி அரேபி​யா​வில் உள்ள இளவரசர் சுல்​தான் விமானப்​படை தளத்​தின் மீது ஈரான் நடத்​திய ஏவு​கணைத் தாக்​குதலில், ஐந்து கேசி-135 ரக விமானங்​கள் சேதமடைந்து தற்​போது பழுது​பார்க்​கப்​பட்டு வரு​கின்​றன.

இது தவிர, சுமார் 12-க்​கும் மேற்​பட்ட அதிநவீன ‘எம்​.கியூ-9 ரீப்​பர்’ வகை ஆளில்லா உளவு விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டுள்​ளன. சவுதி அரேபி​யா, கத்​தார் மற்​றும் ஜோர்​டான் ஆகிய நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்​களில் வைக்​கப்​பட்​டுள்ள ரேடார் அமைப்​பு​களும் ஈரானின் தாக்​குதலுக்கு உள்​ளாகி​யுள்​ளன.

கிரீஸ் நாட்​டின் சூடா விரி​கு​டா​வில் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்ள அமெரிக்​கா​வின் பிரம்​மாண்​ட​மான ‘யுஎஸ்​எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்​டு’ போர்க்​கப்​பலிலும் தீ விபத்து ஏற்​பட்​டுள்​ளது. இதன் மூலம், 3 பில்​லியன் டாலர் மதிப்​பிலான அமெரிக்க ராணுவ சொத்​துகள் பலத்த சேதத்தை சந்​தித்​துள்​ளன. இவ்​வாறு அந்த செய்​தி​யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து தாக்​குதலைத் தொடங்​கின. இந்த மோதலில் இது​வரை 13 அமெரிக்க வீரர்​கள் உயிரிழந்துள்ளனர்; சுமார் 290 வீரர்​கள் காயமடைந்துள்ளனர்.

பாதிக்​கப்​பட்ட மற்​றும் இழந்த ராணுவத் தளவாடங்​களை மீண்​டும் வாங்​கு​வதற்​காக சுமார் 200 பில்​லியன் டாலர் கூடு​தல் நிதியை ஒதுக்க அமெரிக்​கப் பாது​காப்​புத் தலை​மையக​மான பென்​டகன்​ திட்​ட​மிட்​டுள்​ள​தாக வால்​ ஸ்ட்​ரீட்​ ஜர்​னல்​ தெரி​வித்​துள்ளது.

 

32 ஆவது நாளாக தொடரும் போர்: கார்க் தீவை குறிவைக்கும் ட்ரம்ப்?

மத்திய கிழக்கு போர் இன்று 32 ஆவது நாளாக தொடர்கின்றது.

இந்நிலையில் ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மையமான கார்க் தீவை Kharg Island ஆக்கிரமிப்பது குறித்து டொனால்ட் ட்ரம்ப் Donald Trump ஆலோசித்து வருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கப் படைகள் அங்கு களமிறக்குவதற்குரிய சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்துவருவதாகக் கூறப்படுகின்றது.

ஈரானின் தற்போதைய பலவீனமான பாதுகாப்பு நிலையைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை எளிதாகச் செயல்படுத்த முடியும் என்று அவர் நம்புகின்றார்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதே வேளையில், பாகிஸ்தான் மூலமாக நடைபெறும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருப்பதாகவும், ஒரு ஒப்பந்தத்தை விரைவில் எட்ட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு தரப்பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. விசா​ரித்த தனி நீதிபதி தணிக்கை சான்​றிதழ் வழங்க உத்​தர​விட்​டார்.

அதை எதிர்த்து தணிக்கை வாரி​யம் தாக்​கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி அமர்​வு, தனி நீதிபதியின் உத்​தரவை ரத்து செய்​தனர். மேலும், படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்​பிய தணி்க்கை வாரி​யத்​தின் உத்​தரவை எதிர்த்து படத்​ தயாரிப்​புக் ​குழு மீண்​டும் தனி நீதிப​தியை நாடவும், தனி நீதிபதி இரு தரப்​புக்​கும் போதிய அவகாசம் அளித்து விசா​ரிக்​க​வும் உத்தர​விட்​டனர்.

இப்​படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்​பியது தொடர்​பாக நேரடி​யாக தணிக்கை வாரி​யத்​தையே நாட​வுள்​ள​தால், வழக்கை வாபஸ் பெற்​றுக்​கொள்​வ​தாக படத்​த​யாரிப்பு தரப்​பி்ல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் ஜனநாயகன் படத்​துக்​குத் தணிக்கை சான்​றிதழ் கோரி தொடரப்பட்ட வழக்​கைத் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டது.

பின்​னர் இப்​படம் மறு​தணிக்​கைக்கு அனுப்​பப்​பட்​டது. மார்ச் 17-இல் மறு ஆய்​வுக் குழு​வினர் படத்​தைப் பார்த்​தனர். தமிழ்​நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு தேர்​தல் விதி​கள் நடைமுறையில் இருப்​ப​தா​லும் படத்​தில் அரசி​யல் வசனங்​கள் இடம் பெற்றுள்ளதாலும் படத்​தைத் தேர்​தல் ஆணை​யத்​துக்கு மறு ஆய்வு குழு பரிந்​துரை செய்​துள்​ள​தாகக் கூறப்​பட்​டது. இந்நிலையில் ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் வெளி​யீடு தொடர்​பாக புதிய தகவல் வெளி​யாகி​யுள்​ளது. அதன்​படி ஜூலை மாதம் இப்படம் வெளி​யாக வாய்ப்​பிருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

கேவிஎன் நிறு​வனம் தயாரிப்​பில் யாஷ் நடித்​துள்ள ‘த டாக்​ஸிக்’ படம் மார்ச் மாதம் வெளி​யாக இருந்​தது. ​படத்தை ஜூன் 4-ஆம் திகதிக்​குத் தள்ளி வைத்​தனர். அதன் வெளி​யீட்​டில் கவனம் செலுத்த இருக்​கும் இந்​நிறு​வனம், அப்​படம் வெளி​யான பிறகே ‘ஜன​நாயகன்’ படத்​தில்​ கவனம்​ செலுத்​தும்​ என்​று செய்​தி​கள்​ வெளி​யாகி​யுள்​ளன. படக்​குழு தரப்​பில்​ அதி​காரப்​பூர்​வ அறி​விப்​பு வெளி​யாகவில்​லை.

சென்னை, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

 

IPL தொடரின் இன்றைய 3ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

குவாஹாட்டியிலுள்ள பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

கடந்த சீசனில் போதுமான செயல்திறனை வெளிப்படுத்தாத நிலையில் இந்த ஆண்டில் புதிய வீரர்களுடன் மிகுந்த பலத்துடன் களமிறங்குகிறது சென்னை அணி.

அதேநேரத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி, முதல் 2 வார காலம் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (30.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

மும்பை இந்தியன்ஸ்  அபார வெற்றி!

 

ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது முதல் லீக் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, 14 ஆண்டுகால நீண்ட கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அஜிங்க்ய ரஹானே மற்றும் ஃபின் ஆலன் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். அஜிங்க்ய ரஹானே 40 பந்துகளில் 67 ரன்களும், ஃபின் ஆலன் 17 பந்துகளில் 37 ரன்களும் குவித்தனர்.

மிடில் ஆர்டரில் அறிமுக வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை அளித்தார்.

221 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா மற்றும் ரையான் ரிகெல்டன் ஜோடி வானவேடிக்கை காட்டியது. முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பழைய ஃபார்முக்குத் திரும்பி, 38 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் விளாசினார். அவருக்கு இணையாக விளையாடிய ரையான் ரிகெல்டன் 43 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். இவர்களின் 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் மும்பையின் வெற்றியை எளிதாக்கியது.

இறுதிக்கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 16 ரன்களும், திலக் வர்மா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்திக் பாண்டியா 18 ரன்களுடன் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தார். 19.1 ஓவர்களிலேயே மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

 

மரக்கறி விலைப்பட்டியல் (29.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“ வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எமது எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள்” என்று அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தனது எக்ஸ்தள பக்கத்தில் அவர் விசேட பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

“ஈரான் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தாது என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். ஆனால் எங்கள் உள்கட்டமைப்பு அல்லது பொருளாதார மையங்களை குறிவைத்தால், அதற்கு நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மத்திய கிழக்கு போர் இன்று 31 ஆவது நாளாக தொடர்கின்றது.

 

கியூபாதான் அடுத்த குறி!

“ வெனிசுலா மற்றும் ஈரானின் ராணுவ வெற்றிக்குப் பிறகான அடுத்த இலக்கு கியூபாதான்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப், வெனிசுலா மற்றும் ஈரானில் அமெரிக்க ராணுவம் மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளதாக பாராட்டினார்.

அப்போது அவர், ‘‘நான் இந்த மகத்தான (அமெரிக்க) ராணுவத்தை உருவாக்கினேன். நீங்கள் ஒருபோதும் போரில் ஈடுபட வேண்டியிருக்காது என்று நான் அவர்களிடம் கூறி இருந்தேன்.

ஆனால், சில நேரங்களில் ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சொல்லப்போனால் அடுத்தது கியூபாதான்’’ என தெரிவித்தார்.

எனினும் பின்னர், ‘‘நான் அப்படி சொல்லவில்லை என்று பாவித்துக்கொள்ளுங்கள். நான் அப்படி சொல்லவில்லை என்றே நினைத்துக்கொள்ளுங்கள்’’ என குறிப்பிட்டார்.

வெனிசுலாவின் நட்பு நாடாக இருந்து வந்த கியூபா, அந்த நாட்டிடம் இருந்து எரிபொருட்களை பெற்று வந்தது.

கடந்த ஜனவரியில் வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்து தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்றதை அடுத்து, கியூபாவுக்கான எரிபொருள் விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவிட்டது.

இது குறித்து குறிப்பிடும் ட்ரம்ப், ‘‘கடுமையான பொருளாதார நெருக்கடியை கியூபா சந்தித்து வருகிறது. கியூப அரசாங்கம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது என்றே நான் நம்புகிறேன். அந்த நாட்டுக்கு எதிராக அமெரிக்கா, ராணுவ ரீதியிலான நேரடி நடவடிக்கையை எடுக்கலாம்.

எனினும், ராணுவ மோதலை தவிர்க்கும் நோக்கில், அமெரிக்காவுடன் தங்கள் நாடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கியூப ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கேனல் ஒப்புக்கொண்டுள்ளார்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் கியூபா நட்பான கையகப்படுத்தலுக்கு உள்ளாகலாம்; உள்ளாகாமலும் போகலாம்’’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி....

புதன்கிழமை விடுமுறை இரத்து!

0
  "எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அத்தியாவசிய...

நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து சடலம் மீட்பு!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (06) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர்...