Home Blog Page 105

அமைதி வாரியத்தை தொடங்கினார் ட்ரம்ப்: முக்கிய நாடுகள் இணைய மறுப்பு!

இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தை மேற்பார்வையிட ‘அமைதி வாரியம் என்ற புதிய அமைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் முறைப்படி தொடங்கி வைத்தார்.

டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் இது தொடர்பான அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டார்.

“ மேற்படி அமைப்பில் இணைய அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். வருங்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கே இது சவாலாக விளங்கும்.

இருப்பினும், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகள் பல இந்த அமைப்பில் சேர மறுப்புத் தெரிவித்துள்ளன.

காசா முனையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது அமெரிக்காவுக்கானது மட்டுமல்ல, உலகுக்கானது.

காசாவில் வெற்றி பெற்ற பிறகு, மற்ற உலகப் பிரச்சினைகளுக்கும் இந்த அமைப்பை விரிவாக்கம் செய்வோம்.” – எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அசர்பைஜான் முதல் பராகுவே வரை சுமார் 59 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்த டிரம்ப், அங்கு கூடியிருந்த தலைவர்களை நோக்கி, “நீங்கள் உலகிலேயே அதிகாரம் மிக்கவர்கள்; எனது நண்பர்கள்” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், நோர்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இந்த அமைதி வாரியத்தில் இணைய மறுத்துவிட்டன.

ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் இந்த அமைப்பில் சேருவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

அமைதி வாரிய தொடக்க நிகழ்வில் அமெரிக்க வெளிஉறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர், சவுதி அரேபியா, அர்ஜென்டினா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

“உயிர்களை சுமந்த சக்கரங்கள்” ஹொலிரூட் ராஜா அண்ணா காலமானார்!

தலவாக்கலை – ஹொலிரூட் தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுசாரி யோகராஜா. அனைவராலும் அன்போடு “ராஜா டிரைவர்” என அழைக்கப்பட்டவர்.

ஹொலிரூட் தோட்ட மக்களின் வாழ்க்கையோடு மூன்று தசாப்தங்களாக ஒன்றிணைந்த மனிதர். கடந்த 30 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் (Ambulance) சாரதியாக பணியாற்றி, மனித உயிர்களின் காவலனாகவே வாழ்ந்தவர் ராஜா அண்ணா.

1964 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் திகதி பிறந்த அவர், தனது 62 ஆவது வயதில் , 2026 ஜனவரி 22 ஆம் திகதி எம்மை விட்டு பிரிந்தார். ஆனால் அவர் விட்டுச் சென்ற நினைவுகளும், அவர் காத்த உயிர்களும், அவர் காட்டிய மனிதநேயமும் என்றைக்கும் அழியாதவை.

நேரம், காலம் என்றெல்லாம் அவர் ஒருபோதும் கணக்கிட்டதில்லை.

நள்ளிரவு ஆனாலும், அதிகாலை ஆனாலும்,
“ராஜா அண்ணா” என கதவைத் தட்டினால் போதும் –
ஒரு நிமிடமும் தாமதிக்காமல் ஆம்புலன்ஸை இயக்கி, நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வார்.

உணவு உண்ணிக் கொண்டிருந்தாலும், அதை அப்படியே விட்டு வைத்து, ஒரு உயிரைக் காப்பதையே தனது முதன்மை கடமையாக கருதியவர்.

பல கர்ப்பிணித் தாய்மார்களை பாதுகாப்பாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்று, பல குடும்பங்களில் சிரிப்பையும், பிள்ளைகளின் அழுகுரலையும் கேட்க வைத்தவர். அவர் ஓட்டிய ஒவ்வொரு பயணமும் – ஒரு உயிரின் நம்பிக்கையாக இருந்தது.

தனக்காக அல்ல, தமது சமூகத்துக்காகவே வாழ்ந்தவர் . அவர் ஆற்றிய சேவை அளப்பரியது. அவர் காட்டிய மனிதநேயம் அளவிட முடியாதது.

இன்று ஹொலிரூட் தோட்டம் மட்டும் அல்ல, பல வீடுகள், பல குடும்பங்கள், ஒரு உண்மையான மனிதனை இழந்து நிற்கின்றன.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவர் செய்த சேவைகள் அவருக்கான நிரந்தர நினைவுச்சின்னமாக என்றும் நிலைத்திருக்கும்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 24.01.2026 சனிக்கிழமையன்று நடைபெற்று, தோட்ட பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

பதிவு – எஸ்.பிரதா
வட்டகொடை

தலவாக்கலை – ஹொலிரூட் தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுசாரி யோகராஜா.
அனைவராலும் அன்போடு “ராஜா டிரைவர்” என அழைக்கப்பட்டவர்.

ஹொலிரூட் தோட்ட மக்களின் வாழ்க்கையோடு மூன்று தசாப்தங்களாக ஒன்றிணைந்த மனிதர். கடந்த 30 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் (Ambulance) சாரதியாக பணியாற்றி, மனித உயிர்களின் காவலனாகவே வாழ்ந்தவர் ராஜா அண்ணா.

1964 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் திகதி பிறந்த அவர், தனது 62 ஆவது வயதில் , 2026 ஜனவரி 22 ஆம் திகதி எம்மை விட்டு பிரிந்தார். ஆனால் அவர் விட்டுச் சென்ற நினைவுகளும், அவர் காத்த உயிர்களும், அவர் காட்டிய மனிதநேயமும் என்றைக்கும் அழியாதவை.

நேரம், காலம் என்றெல்லாம் அவர் ஒருபோதும் கணக்கிட்டதில்லை.

நள்ளிரவு ஆனாலும், அதிகாலை ஆனாலும்,
“ராஜா அண்ணா” என கதவைத் தட்டினால் போதும் –
ஒரு நிமிடமும் தாமதிக்காமல் ஆம்புலன்ஸை இயக்கி, நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வார்.

உணவு உண்ணிக் கொண்டிருந்தாலும், அதை அப்படியே விட்டு வைத்து, ஒரு உயிரைக் காப்பதையே தனது முதன்மை கடமையாக கருதியவர்.

பல கர்ப்பிணித் தாய்மார்களை பாதுகாப்பாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்று,
பல குடும்பங்களில் சிரிப்பையும், பிள்ளைகளின் அழுகுரலையும் கேட்க வைத்தவர். அவர் ஓட்டிய ஒவ்வொரு பயணமும் – ஒரு உயிரின் நம்பிக்கையாக இருந்தது.

தனக்காக அல்ல, தமது சமூகத்துக்காகவே வாழ்ந்தவர் . அவர் ஆற்றிய சேவை அளப்பரியது.
அவர் காட்டிய மனிதநேயம் அளவிட முடியாதது.

இன்று ஹொலிரூட் தோட்டம் மட்டும் அல்ல,
பல வீடுகள், பல குடும்பங்கள், ஒரு உண்மையான மனிதனை இழந்து நிற்கின்றன.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
அவர் செய்த சேவைகள் அவருக்கான நிரந்தர நினைவுச்சின்னமாக என்றும் நிலைத்திருக்கும்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 24.01.2026 சனிக்கிழமையன்று நடைபெற்று, தோட்ட பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

பதிவு – எஸ்.பிரதா
வட்டகொடை

தலவாக்கலை – ஹொலிரூட் தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுசாரி யோகராஜா.
அனைவராலும் அன்போடு “ராஜா டிரைவர்” என அழைக்கப்பட்டவர்.

ஹொலிரூட் தோட்ட மக்களின் வாழ்க்கையோடு மூன்று தசாப்தங்களாக ஒன்றிணைந்த மனிதர். கடந்த 30 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் (Ambulance) சாரதியாக பணியாற்றி, மனித உயிர்களின் காவலனாகவே வாழ்ந்தவர் ராஜா அண்ணா.

1964 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் திகதி பிறந்த அவர், தனது 62 ஆவது வயதில் , 2026 ஜனவரி 22 ஆம் திகதி எம்மை விட்டு பிரிந்தார். ஆனால் அவர் விட்டுச் சென்ற நினைவுகளும், அவர் காத்த உயிர்களும், அவர் காட்டிய மனிதநேயமும் என்றைக்கும் அழியாதவை.

நேரம், காலம் என்றெல்லாம் அவர் ஒருபோதும் கணக்கிட்டதில்லை.

நள்ளிரவு ஆனாலும், அதிகாலை ஆனாலும்,
“ராஜா அண்ணா” என கதவைத் தட்டினால் போதும் –
ஒரு நிமிடமும் தாமதிக்காமல் ஆம்புலன்ஸை இயக்கி, நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வார்.

உணவு உண்ணிக் கொண்டிருந்தாலும், அதை அப்படியே விட்டு வைத்து, ஒரு உயிரைக் காப்பதையே தனது முதன்மை கடமையாக கருதியவர்.

பல கர்ப்பிணித் தாய்மார்களை பாதுகாப்பாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்று,
பல குடும்பங்களில் சிரிப்பையும், பிள்ளைகளின் அழுகுரலையும் கேட்க வைத்தவர். அவர் ஓட்டிய ஒவ்வொரு பயணமும் – ஒரு உயிரின் நம்பிக்கையாக இருந்தது.

தனக்காக அல்ல, தமது சமூகத்துக்காகவே வாழ்ந்தவர் . அவர் ஆற்றிய சேவை அளப்பரியது.
அவர் காட்டிய மனிதநேயம் அளவிட முடியாதது.

இன்று ஹொலிரூட் தோட்டம் மட்டும் அல்ல,
பல வீடுகள், பல குடும்பங்கள், ஒரு உண்மையான மனிதனை இழந்து நிற்கின்றன.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
அவர் செய்த சேவைகள் அவருக்கான நிரந்தர நினைவுச்சின்னமாக என்றும் நிலைத்திருக்கும்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 24.01.2026 சனிக்கிழமையன்று நடைபெற்று, தோட்ட பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

பதிவு – எஸ்.பிரதா
வட்டகொடை

டி- 20 உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகுமா பங்களாதேஷ் ?

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டோம் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தரப்பில் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடருக்காக பங்களாதேஷ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் நீடிக்கும் சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக பங்களாதேஷ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக நேற்றுக்குள் முடிவு தெரிவிக்க வேண்டும் என ஐசிசி, கால அவகாசம் வழங்கியிருந்தது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட மாட்டோம் எனவும், தங்களுக்கான போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தரப்பில் கேட்ட நிலையில், அந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்ட நிலையில், உலகக் கோப்பைத் தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கோரிக்கையை ஐசிசி ஏற்கனவே நிராகரித்துவிட்ட நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி மாற்று அணியாக சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.

 

இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்த சீனா ஒத்துழைப்பு!

சீன – இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், நாட்டின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சீனாவும் இலங்கையும் இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டமாக, நாட்டின் விவசாயத் துறையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து உற்பத்தித்திறனை அதிகரிப்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், நாட்டின் விவசாயத் துறை மற்றும் அது சார்ந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தக்கூடிய விதம் குறித்தும், வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைத்தல் மற்றும் பேரே வாவியைச் சுத்தப்படுத்தும் பணிகளுக்காகச் சீனாவிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பெருந்தோட்ட முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஸ்வஜித் கந்தேகம, Guizhou பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Zhang Guozhu , Hubei மாகாண வர்த்தக மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் (Cao Xuan , Wei Ping உள்ளிட்ட குழுவினர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய அமைப்பில் இணைய சீனா மறுப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய ‘போடர் ஒப் பீஸ்’ Board of Peace என்ற அமைப்பில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பை சீனா நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையை உறுதியாக ஆதரிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலை இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘அமைதி வாரியத்தில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. சீனா எப்போதுமே உண்மையான பலதரப்பு வாதத்தைப் பின்பற்றுகிறது.

சர்வதேச சூழல் எவ்வாறு மாறினாலும், ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு, சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு, ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , உலக நாடுகளின் ஆதரவை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், அந்த வாரியத்தில் இணையப் போவதில்லை என்ற முடிவை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் சீனா அறிவித்திருக்கிறது. சீனாவின் இந்த முடிவு, ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கிவுல் ஓயாத் திட்டத்துக்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு!

“தமிழரின் இனப்பரம்பலையே மாற்றியமைக்கும் கிவுல் ஓயாத் திட்ட அமுலாக்கலைத் தடுக்கும் வகையில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை நாம் நடத்தவுள்ளோம். இந்தப் போராட்டங்களில் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு மற்றைய கட்சிகளையும் கேட்டுக்கொள்கின்றோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

“கடந்த திங்கட்கிழமை 20ஆம் திகதி அமைச்சரவை, கிவுல் ஓயாத் திட்டத்தை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் திட்டம் எப்படியாக இனப்பரம்பலை மாற்றி அமைக்கும் என்றும், தமிழ் மக்களின் உரிமைகளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதையும் எமது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

இந்தத் திட்ட அமுலாக்கலைத் தடுக்கும் வகையில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை நாம் நடத்தவுள்ளோம். இந்தப் போராட்டங்களில் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு மற்றைய கட்சிகளையும் கேட்டுக்கொள்கின்றோம்.

அடுத்தடுத்த நாட்களில் இது சம்பந்தமான கலந்துரையாடல்களை வவுனியாவில் நாம் நடத்தவுள்ளோம். இதில் கலந்துகொண்டு உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து இந்தப் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்குமாறு சகலரையும் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்று குறிப்பிட்டுள்ளது.

மூவர் சுட்டுக்கொலை: ஆஸ்திரேலியாவில் பயங்கரம்

ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லேக் கார்ஜெலிகோ Lake Cargelligo நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

துப்பாக்கிதாரி தலைமறைவாகியுள்ள நிலையில் தேடுதல் வேட்டை இடம்பெறுகின்றது.

ஆஸ்திரேலிய நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 4.20 மணியளவில், வாகனமொன்றின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இது தொடர்பில் அறிந்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்தனர். இரு பெண்களும், ஆணொருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் Lake Cargelligoபகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இச்சம்பவத்தையடுத்து நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

நகரம் என்பது சிட்னியில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அங்கு ஆயிரத்து 169 பேர் வாழ்கின்றனர்.
துப்பாக்கிதாரி இன்னும் அடையாளம் காணப்படவில்லை. விசாரணை வேட்டை தொடர்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை கோரினார் பிரதமர்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தயார்நிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான ஆணையாளர் ஹட்ஜா லாபிப்புடன் (Hadja Lahbib) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, சர்வதேச அமைப்புகளின் பிரதானிகளுடனும் பேச்சு நடத்திவருகின்றார்.
இதன்ஓர் அங்கமாகவே மேற்படி சந்திப்பு நடைபெற்றது.

இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு,

” ஹட்ஜா லாபிப்பை ஜனவரி 21ஆம் திகதி டாவோஸில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

இச்சந்திப்பின்போது, ‘திட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுகளுக்காக எனது நன்றியைத் தெரிவித்தேன்.

இலங்கையின் அனர்த்தத் தயார்நிலை மற்றும் மீட்சிச் செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டேன்.

நுவரெலியாவில் கடும் குளிர் காலநிலை!

நுவரெலியாவில் ஆகக் குறைந்த வெப்பநிலையான 3.5 பாகை செல்சியஸ் மற்றும் பூமியின் வெப்பம் தரைமட்டத்தில் மறை (-1.2) ஆகவும் இன்று 22.01.2026 பதிவாகியுளளதாக நுவரெலியா காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே நுவரெலியாவின் வெப்பநிலை சடுதியாக குறைவடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.கடும் குளிருடனான காலநிலையே நிலவுகின்றது.

நுவரெலியாவில் காலையில் சுமார் 7.30 மணிவரை கடுமையான குளிருடனான காலநிலை நிலவுகின்றது.

இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலுக்கு செல்கின்றவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனினும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த காலநிலையை பெரிதும் விரும்புகின்றார்கள்.

டிசம்பர் ஜனவரி மாதங்களில் இந்த காலநிலை இடை இடையே நிலவுகின்றது.

நுவரெலியாவின் காலநிலை 3.5 பாதை செல்சியஸ் என்பது பூமியில் இருந்து 4 நான்கு அடிக்கு மேல் நிலவுகின்ற வெப்பநிலையையே குறிப்பிடப்படுகின்றது.ஆனால் தரைமட்டத்தின் வெப்பநிலையானது மறை (-1.2) ஆக இருக்கின்றது.

இதன் காரணமாகவே நுவரெலியாவின் பல பகுதிகளிலும் பூம்பணி நிலவுகின்றது.பொதுவாகவே காலநிலை அவதான நிலையம் இந்த தறை மட்டத்திலான வெப்பநிலையை செய்திகளின் ஊடாக வெளியிடுவது என்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

கிரீன்லாந்தை கைப்பற்ற இராணுவத்தை களமிறக்கமாட்டோம்: ட்ரம்ப் உறுதி!

கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள எவ்வித ராணுவ பலத்தையும் பயன்படுத்தப் போவதில்லை என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ட்ரம்ப் இவ்வாறு கூறினார்.

“ அமெரிக்கப் பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் சரியான திசையில் பயணிக்கவில்லை.

கிரீன்லாந்தை நிர்வகிப்பதற்கும், அதனை பாதுகாப்பதற்கும் அமெரிக்காவால் மட்டுமே முடியும். உலகப் பாதுகாப்பிற்காக எங்களுக்கு கிரீன்லாந்து என்ற அந்தப் பனிப்பாறைத் தீவு தேவைப்படுகிறது.” – எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

நீங்கள் அதனை தர சம்மதித்தால் அதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். மறுத்தால் அதனை நாங்கள் நினைவில் கொள்வோம். இந்த விவகாரத்தில் நேட்டோ நாடுகள் நியாயமற்ற வகையில் நடந்துகொள்கின்றன.

டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தை வாங்குவது குறித்து உடனடிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது ஆர்க்டிக் தீவுகளுக்கு அமெரிக்கா அளித்த பாதுகாப்பை மறந்துவிட்டு, டென்மார்க் நன்றியுணர்வின்றி நடந்து கொள்கிறது.

உண்மையில் இந்த மிகப்பெரிய பாதுகாப்பற்ற தீவு வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகும். அது எங்கள் பிராந்தியம்.

அங்குள்ள கனிம வளங்களை வெட்டியெடுப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான அடி ஆழப் பனியைத் தோண்ட வேண்டியுள்ளது.

ஆனால் அந்த வளங்களுக்காக மட்டும் நாங்கள் அதைக் கேட்கவில்லை; தேசிய பாதுகாப்பிற்காக அது தேவைப்படுகிறது.
கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ பலத்தை பிரயோகிக்கும் எண்ணமில்லை. டென்மார்க்கிடம் பேச்சுவார்த்தை மூலமாகவே சுமூக முடிவை எட்ட விரும்புகிறோம்.” எனவும் ட்ரம்ப் மேலும் கூறினார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ட்ரம்புடன் விவாதிக்க விரும்பவில்லை: திருத்தந்தை பதில்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை Pope Leo தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் தொடர்பான திருத்தந்தை லியோவின் கருத்துக்களை...

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...