Home Blog Page 124

ஈரான் போருக்கு தயாராகவே உள்ளது: எச்சரிக்கை விடுப்பு!

“ ஈரான் போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. அதேநேரத்தில் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறது” என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற வெளிநாட்டுத் தூதர்களின் மாநாட்டில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ஈரான் இஸ்லாமியக் குடியரசு போரை நாடவில்லை; ஆனால், போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறோம்.

ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் நியாயமானதாகவும், சம உரிமைகளுடனும், பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.

நாடு தழுவிய போராட்டங்களுக்குப் பிறகு நிலைமை தற்போது முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் போராட்டங்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையிடுவதற்கு ஒரு சாக்குப்போக்கு அளிக்கும் வகையில் வன்முறை மற்றும் ரத்தக்களரியாக மாறியது” எனத் தெரிவித்தார்.

அப்பாஸ் அராக்சி இன்று தெஹ்ரானில் உள்ள வெளிநாட்டுத் தூதர்களிடம் பேசினார். நாட்டில் இணையம் துண்டிக்கப்பட்டிருந்தபோதிலும், செயல்பட அனுமதிக்கப்பட்ட கத்தார் நிதியுதவி பெறும் அல்ஜசீரா செயற்கைக்கோள் செய்தி நிறுவனம் அராக்சியின் கருத்துகளை ஒளிபரப்பியது.

ஈரான் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றுக்கு அந்நாட்டில் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடந்து வருகிறது.

இந்தப் போராட்டத்தின் காரணமாக அந்நாட்டில் 490 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும், 10,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான ஹெச்ஆர்ஏஎன்ஏ (HRANA) தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இப்பிரச்சினையைத் தூண்டிவிடுவதாக ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

மகாசங்கத்தை அவமதித்த லால்காந்த – அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை!

மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் கே.டி. லால்காந்த மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், அரசாங்கம் விரைவில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தேசிய சங்க மாநாட்டின் தலைவர் லியன்வல சாசனாரதன தேரர் எச்சரித்துள்ளார்.

கண்டி -மடவலயில் உள்ள ஜனமங்கலராமய அனைத்துலக பௌத்த மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும், நாட்டின் வரலாற்றில் எந்த அரசியல் தலைவரும் பௌத்த மதகுருமார்களை இவ்வளவு அவமதித்ததில்லை.

அநீதி, ஊழல் மற்றும் சட்ட மீறல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் வரலாற்று ரீதியாக குரல் கொடுத்துள்ளனர்.

தவறுகளை சவால் செய்ய மதகுருமார்களுக்கு தார்மீக பொறுப்பு உள்ளது.

அமைச்சர் லால்காந்த தனது கருத்துக்களை விரைவாக மீளப்பெற வேண்டும்.

ஜனாதிபதி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் , அவ்வாறு செய்யத் தவறினால் நாட்டின் உறுதித்தன்மை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும்.

இந்தப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படாவிட்டால், பொதுமக்களின் எதிர்வினை தவிர்க்க முடியாதது.

நாட்டின் கலாசார மற்றும் மத விழுமியங்களுக்கு ஏற்ப அரசாங்கம் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி: ட்ரம்ப் உத்தரவு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத உடனடி வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போருக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதே காரணம் எனக் கூறியட்ரம்ப், இந்தியாவுக்கு முதலில் 25 சதவிகித வரியும் பின்னர், கூடுதல் 25 சதவிகித வரிவிதித்தார்.

டிரம்ப்பின் நடவடிக்கையை மீறிய இந்தியா, சீனாவுக்கு கூடுதலாக 500 சதவிகித வரி விதிப்பு குறித்த சட்டமூலத்துக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில், ஈரான் தொடரும் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த அரசுக்கு உள்ள அழுத்தம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுக்கு எதிராகப் பேசிவந்த வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அந்த நாட்டுக்குள்ளேயே நுழைந்து அமெரிக்க ராணுவத்தினர் கைது செய்த சம்பவம் ஈரான் போராட்டக்காரர்களுக்கு மேலும் உத்வேகம் அளித்துள்ளது.

இந்தச் சூழலில், போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைக்கு தண்டனையாக அந்த நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அ டிரம்ப் எச்சரித்த நிலையில், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் 25 சதவிகித உடனடி வரிவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், “ஈரானின் இஸ்லாமிய குடியரசுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய உடனடியாக 25 சதவிகித வரிவிதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்கு வந்த இந்த வரிவிதிப்பானது இறுதியானது மற்றும் உறுதியானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரிவிதிப்பால், இந்தியா, துருக்கி, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றது.

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் 8 வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 67 ஆயிரத்து 762 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஜனவரி முதலாம் திகதி 8 ஆயிரத்து 377 பேரும், 8 ஆம் திகதி 8 ஆயிரத்து 939 பேரும் வருகை தந்துள்ளனர். ஜனவரி 6 ஆம் திகதி 9 ஆயிரத்து 275 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்தே இக்காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து 11 ஆயிரத்து 367 பேர் வந்துள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து 8 ஆயிரத்து 425 பேரும், இங்கிலாந்தில் இருந்து 6 ஆயிரத்து 67 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இங்கிலாந்தில் இருந்து 6 ஆயிரத்து 67 பேரும், ஜேர்மனில் இருந்து 5 ஆயிரத்து 306 பேரும், ஆஸ்திரேலியாவில் இருந்து 3 ஆயிரத்த 285 பேரும் வருகை தந்துள்ளனர்.

கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் .

அந்த எண்ணிக்கையை இவ்வருடம் 30 லட்சம்வரை அதிகரித்துக்கொள்வதற்குரிய முயற்சி இடம்பெற்றுவருகின்றது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்!

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரான இக்பால் அத்தாஸ் (Iqbal Athas) இன்று (13) அதிகாலை காலமானார்.

மரணிக்கும்போது அவருக்கு 81 வயது என்பதுடன், அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அன்னாரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 9.00 மணி முதல் தெஹிவளை, ஹில் வீதியின், சிறிவர்தன வீதியில் அமைந்துள்ள இலக்கம் 11 C/1 இல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரது இறுதிச் சடங்குகள் இன்று (13) பிற்பகல் தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்பால் அத்தாஸ் இலங்கையின் ஊடகத் துறையில், குறிப்பாக பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வுகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

இலங்கையின் ஊடகத்துறைக்கு இக்பால் அத்தாஸ் ஆற்றிய பணிகள் மற்றும் அவர் விட்டுச் சென்ற வெற்றிடம் ஈடுசெய்ய முடியாதது எனப் பல சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் அரசியல் பிரமுகர்களும் தமது அனுதாபச் செய்திகளில் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!

பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.

திருமதி ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

அத்துடன், ‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட ஆதரவிற்கும் ஜனாதிபதி இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.

2022 பெப்ரவரி மாதம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற திருமதி ஜூலி சாங், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவு உட்பட, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பல முக்கிய மைல்கற்களில் தனது தலைமைத்துவத்தை வழங்கியிருந்தார்.

பலாலி, காங்கேசன்துறையில் பொருத்த ஸ்கானர்களை வழங்கியது ஆஸ்திரேலியா!

வடக்கின் இரண்டு உள்நுழைவு முனையங்களில் பொதிகளை சோதனையிடுவதற்கான ஸ்கானர் கருவிகளை ஆஸ்திரேலியா கொடையாக வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் எல்லைப் படைகளால் கொடையாக வழங்கப்பட்டுள்ள இந்த உயர் தொழில்நுட்ப ஸ்கானர்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று காங்கேசன்துறையில் இடம்பெற்றது.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வேர்த், இலங்கை சுங்கப் பணிப்பாளர் சீவலி அருகொடவிடம் இவற்றைக் கையளித்தார்.

இந்த நிகழ்வில் ஆஸ்திரேலிய சுங்கப் பணிப்பாளர் நாயகம் போல் எட்வர்ட்ஸ், அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக பயணிகள் முனையம் ஆகியவற்றில் இந்த ஸ்கானர்கள் பொருத்தப்படவுள்ளன.

மரக்கறி விலைப்பட்டியல் (13.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

கல்வி மறுசீரமைப்பை கைவிடும்வரை ஓயமாட்டேன்: விமல் கொக்கரிப்பு!

புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் நீக்கப்பட வேண்டும். அதுவரையில் போராட்டம் தொடரும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார்.

மேற்படி இரு விடயங்களையும் முன்வைத்து கல்வி அமைச்சுக்கு முன்பாக தனது சகாக்களுடன் விமல் வீரவன்ச சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்தார்.

கோ ஹோம் ஹரிணி, கோ ஹோம் ஹரிணி என்ற கோஷத்துடன் சத்தியாக்கிரகத்தை விமல் வீரவன்ச முன்னெடுத்தார். பிரதமர்மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவராக செயல்படும் பிரதமர், கல்வி அமைச்சு பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என சுட்டிக்காட்டினார்.

ஐ.நாவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அரசியல் நகைச்சுவையாளராக மாறிய விமலின் இந்த போராட்டமும் அரசியல் நாடகமென சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டுவருகின்றது.

கல்வி அமைச்சுக்கு முன்பாக கூடாரம் அமைத்து விமல் தரப்பு போராட்டத்தை தொடர்கின்றது. கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குறித்த இடத்துக்கு இலங்கை கொடியுடன் வந்த நபரொருவர், பிரதமருக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினார். அவரை அங்கிருந்தவர்கள் விரட்டினர்.

அதேவேளை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்தியுள்ளன.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

மலையக பிரதிநிதிகளை நாளை சந்திக்கிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், மலையக பிரதிநிதிகளை கூட்டாக சந்திக்கவுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளையே அவர் இவ்வாறு சந்தித்து கலந்துரையாடவுள்ளார். கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர...

மரக்கறி விலைப்பட்டியல் (18.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

“காலத்தை ஓட்டாதீங்க, ஊழல்வாதிகளை உள்ளே போடுங்கள்”

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, " அரசாங்க பேச்சாளர் நண்பர் நலிந்த என்ன உளறுறார்? ராஜினாமா செய்த குமார ஜயக்கொடி தொடர்புல, "குற்றம் சாட்டிய எதிர் கட்சி எம்பீக்கள்,...