Home Blog Page 129

‘நானே வெனிசுலாவின் பொறுப்பு ஜனாதிபதி: ட்ரம்ப் அறிவிப்பு!

“ வெனிசுவேலாவின் செயல் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்’ என்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்து, அந்நாட்டின் மீது ஜனவரி 3 ஆம் திகதி அமெரிக்கா போர் தொடுத்தது.

ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து, நாடுகடத்தினர்.
தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலாவில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை அமெரிக்கா நிர்வகிக்கும் என்றும், அந்நாட்டின் எண்ணெய் உற்பத்திக்கு அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்யும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தார்.

ஆனால், வெனிசுவேலாவின் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, அந்நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த டெல்சி ரோட்ரிகஸ், இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனிடையே, வெனிசுவேலாவுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கும் வகையில் கடந்த சில நாள்களாக ஜனாதிபதி டிரம்ப் உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், விக்கிபீடியா தளத்தில் ‘வெனிசுவேலா செயல் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்’ என்று அவரது புகைப்படத்துடன் இருக்கும் வகையில் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை ட்ரூத் சோசியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

பிரதமருக்கு எதிரான பிரேரணை 20 ஆம் திகதி கையளிப்பு?

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதியளவிலேயே கையளிக்கப்படலாம் என தெரியவருகின்றது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நேற்று முன்தினம் 9 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கவே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டிருந்தது.

இதனையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்தும் திரட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏனைய சில பாடங்களிலும் உள்ள சிக்கல்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என அறியமுடிகின்றது.

எனவே, இதுகுறித்த தகவல்களையும் சேகரித்து காத்திரமானதொரு பிரேரணையை முன்வைக்கும் நோக்கிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை தாமதிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

தரம் ஆறு ஆங்கில பாடத்தில் வயது வந்தோர் வலைத்தளத்திற்கான இணைய இணைப்பு சேர்க்கப்பட்ட விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதனை மையப்படுத்தியதாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்குரிய ஏற்பாடு இடம்பெறுகின்றது.

எனினும், கல்வி மறுசீரமைப்பை சீர்குலைப்பதற்கான எதிரணிகளின் சதி நடவடிக்கை இதுவென நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆளுங்கட்சி கருத்து வெளியிட்டுள்ளது.

ஜனவரி மாதத்துக்குரிய இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

அயலக தமிழர் மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

இந்தியாவில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டை தமிழ் நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்ததுடன், இதில் சிறப்பு விருந்தினராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன், வட மாகாண முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய செந்தில் தொண்டமான், இலங்கையில் ஏற்பட்ட கோவிட் தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் டிக்வா புயலின் போது இந்தியா அரசு இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான உதவி பாராட்டத்தக்கது எனவும், அதற்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்தார்.

கல்வி மறுசீரமைப்பை கைவிடு: போராட்டத்தில் குதித்தார் விமல்!

இலங்கை அரசியலில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பேர்போன விமல்வீரவன்ச, இன்று சத்தியாகிரகப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

கல்வி அமைச்சுக்கு முன்னால் கட்சி சகாக்களுடன் திரண்டு வந்து அவர் போராட்டத்தில் குதித்துள்ளார்.

புதிய கல்வி மறுசீரமைப்பை கைவிடுமாறும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுமே இப்போராட்டம் இடம்பெறுகின்றது.

புதிய கல்வி சீர்திருத்தங்களை அரசாங்கம் மீளப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விமலும், அவரின் சகாக்களும் தெரிவித்துள்ளனர்.

கல்வி மறுசீரமைப்பை உடன் கைவிடு, கோ ஹோம் ஹரிணி என்று கோஷங்கள் எழுப்படுகின்றன.

துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்குகிறது ஆஸ்திரேலியா: அவசரமாக கூடுகிறது நாடாளுமன்றம்!

ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மீண்டும் கூடும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.

நாடாளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி கூடும் என்றே முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி ஆஸ்திரேலியாவில், சிட்னி போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து வெறுப்பு பேச்சு மற்றும் துப்பாக்கி சீர்திருத்தம் என்பன பற்றி சட்டங்களை இயற்றுவதற்காக நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு எதிரணிகள் வலியுறுத்தின.

இந்நிலையிலேயே மேற்படி திகதிகளில் நாடாளுமன்றம் மற்றும் செனட் சபை ஆகிய இரு அவைகளும் கூடும் என ஆஸ்திரேலிய பிரதமர் இன்று அறிவித்தார்.

போண்டி பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (12.01.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (12.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஈரானில் போராட்டம்: 500 பேர்வரை உயிரிழப்பு!

ஈரான் போராட்டத்தில் இதுவரை 500 பேர்வரை உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது.

டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

போராட்டக்காரர்களைக் கலைக்கப் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா பர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்

.அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும்.

பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது.

வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் துப்பாக்கியால் சுடவும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 10,600 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பில் களமிறங்குகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்!

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது விஜயம் முக்கியத்துவம்மிக்கதாக கருதப்படுகின்றது.

ஆபிரிக்க நாடுகளுக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று இலங்கை வருகின்றார்.

கொழும்பு வரும், சீன வெளிவிவகார அமைச்சர் , இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட தரப்பினருடன் சந்திப்பு நடத்துவார்.

இலங்கையில் சீனத் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் புதிய சீன முதலீடுகள் தொடர்பில் மேற்படி சந்திப்புகளின்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதுவராக அண்மையில் இலங்கை வந்தார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மீண்டெழுவதற்குரிய இந்தியாவின் சலுகைக் கடன் மற்றும் நன்கொடை திட்டம் பற்றி அவர் அறிவிப்பு விடுத்தார்.

எனவே, இலங்கை மீண்டெழுவதற்கு சீனாவின் உதவி பற்றியும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பார் என தெரியவருகின்றது.

அதேவேளை, சீன அமைச்சரின் கொழும்பு வருகை தொடர்பில் டெல்லி கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது.

 

“மலையக அரசியல் அரங்கம்” அரசியல் கட்சியாக அங்கீகாரம்

“மலையக அரசியல் அரங்கம்”
அரசியல் கட்சியாக அங்கீகாரம்

கடந்த நான்கு ஆண்டுகளாக சமூக அரசியல் தளத்தில் இயங்கி வந்த மலையக அரசியல் அரங்கம் இலங்கை தேர்தல்கள் ஆணையகத்தால் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அதன் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.

மலையக அரசியல் அரங்கத்தின் ஊடகச் சந்திப்பு நேற்று ஹட்டனில் இடம்பெற்றது.

இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

“மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் உரையாடலை வளர்த்தல், ஆண்களுக்கு சமாந்திரமாக பெண்களுக்கும் சம வாய்ப்பு அளித்தல், மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியல், அடுத்த தலைமுறைக்கான அரசியல் பாலமாக செயற்படுதல் எனும் பிரதான இலக்குகளைக் கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளாக சமூக அரசியல் தளத்தில் இயங்கிவந்த மலையக அர்சியல் அரங்கம் 2026 ஆம் ஆண்டு முதல் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதுடன் ‘சிறகு’ சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் உரிமை சார்ந்த அரசியல் முனவைப்புக்கான தேவை எப்போதும் இருந்து வருகின்றது. 2026 ஆண்டு அரங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக நிர்வாக ‘மலையக பக்கங்களின் உரிமைக் கோரிக்கை: நிலமும் நிர்வாகமும்’ எனும் தொனிப்பொருளில் மலையக மாவட்டங்கள் தோறும் தொடர் ஆய்வு கூட்டங்களை நடத்துவதற்கும் 2026 ஆண்டு இறுதியில் மலையக மக்களின் டித்வா புயல் அனர்த்தத்தின் பின்னான மதிப்பீட்டறிக்கையையும் தயார் செய்து
‘மலையகத் தீர்மானம்’ ஒன்றை நிறைவேற்றி இலங்கை அரசுக்கும் சர்வதேச அரங்குக்கும் கொண்டு செல்வதற்கும் தீர்மானித்துள்ளோம்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் கலப்பு முறையிலா அல்லது விகிதாசார முறையிலா எந்த முறைமையில் நடைபெறும் என இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அரசு அதற்காகக் குழு ஒன்றை நியமித்துள்ளது.

இப்போதைய மாகாண சபையில் மலையக மக்களுக்கு உரிமைகள் ஏதும் குறித்து வைக்கப்படவில்லை. அத்தகைய அதிகாரங்கள் எவ்வாறானதாக அமைதல் வேண்டும் எனும் அடிப்படையில் உடன்பாடுடைய அமைப்புகளுடன் கூட்டணியாக இணைந்து போட்டியிடவும் தயாராகவுள்ளோம்.” – என்றார்.

ஈரானில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய ட்ரம்ப்!

ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

“ஈரான் சுதந்திரத்தை எதிர்பார்க்கிறது. முன்னெப்போதும் இல்லாதவகையில், அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது”எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈரானில் பணவீக்கம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், கடந்த 1979-ஆம் ஆண்டு அந்நாட்டில் இஸ்லாமிய புரட்சி நடைபெற்றது முதல், ஈரானில் மதகுருக்கள் ஆட்சி செய்து வரும் மரபை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற குரல்களும் வலுக்கத் தொடங்கியுள்ளன.

இதனிடையே, ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் அங்குள்ள நகரங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று நாடு கடந்து வசிக்கும் அந்த நாட்டு பட்டத்து இளவரசா் ரேஸா பாலவி அழைப்பு விடுத்துள்ளாா்.

இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ராகலையில் மக்களை சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி!

0
இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், நுவரெலியா, ராகலை, லிட்டில்ஸ்டே Liddlesdale தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் (மூன்றாம் கட்டம்) கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டதுடன், அதன்...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

0
ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் இன்று (20) 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மாவட்டங்களுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. சுமார் மூன்று மீட்டர் உயரத்திற்கு...

இந்திய துணை ஜனாதிபதியிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்த இ.தொ.கா!

0
இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனிடத்தில் மகஜரொன்றைக் கைளித்துள்ளார். கொழும்பு தாஜ்...