Home Blog Page 13

பிரின்ஸ் சுல்தான் விமானப்படைதளம்மீது ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க படையினர் காயம்!

சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர்.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 29 ஆவது நாளாக தொடர்கின்றது.

ஈரான்மீது அமெரிக்கா, இஸ்ரேல் என்பன கூட்டு இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

ஈரானும் பதிலடி கொடுத்துவருகின்றது. மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்கள்மீதும் தாக்குதல் நடத்திவருகின்றது.

இந்நிலையிலேயே சவூதியில் மேற்படி தளம் தாக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலில், இதுவரை 13 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 300 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு கொ#டூரக் கொ#லை: சந்தேகநபர்களின் வீட்டில் மயக்க மருந்துகள் மீட்பு!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை – நெல்லிக்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற கொ#லை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடமிருந்து மயக்க மருந்துப் போத்தல்கள் மற்றும் மாத்திரைகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கிழக்கு மாகாண பாரிய குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர், நேற்று நள்ளிரவு சந்தேகநபர்களை அவர்களின் காஞ்சிரன்குடா இல்லத்திற்கு அழைத்துச் சென்று தீவிர தேடுதல் நடத்தினர். இதன்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த வீரியம் மிக்க மயக்க மருந்துப் போத்தல்கள் மற்றும் குளிசைகள் மீட்கப்பட்டன.

விசாரணைகளின் போது, குறித்த மயக்க மருந்துகளை மற்றுமொரு ஓட்டோ சாரதிக்கும் வழங்கியதாக சந்தேகநபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த குறித்த ஓட்டோ சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த அதிவீரியம் மிக்க மயக்க மருந்துகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சட்டவிரோத விநியோகச் சங்கிலியுடன் தொடர்புடைய மேலும் பல நபர்கள் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், சந்தேகநபர்களைக் கொண்டு விரைவில் அடையாள அணிவகுப்பு நடத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, பாழ்ங்கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட தாயும் பிள்ளையும் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்

CEWET புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/தொழில்நுட்பக்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.

02. க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்த மாணவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிறப்புச் சான்றிதழ், க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர் தரப்பரீட்சைப் பெறுபேற்றுத்தாள்கள், பெற்றோர்களது சமீபத்திய சம்பளத்தாள் விபரம், பெற்றோரது தொழில் தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி மற்றும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் என்பவற்றின் போட்டோ பிரதிகளுடன் இணைந்ததாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.

03. இந்திய உயர் ஸ்தானிகராலயம், ( 36-38 காலி வீதி, கொழும்பு 03) மற்றும் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம், (இல. 42, ஹில்பஹந்துர மாவத்தை, அம்பிட்டிய வீதி, கண்டி), இலங்கை ஆகிய முகவரிகளிலும் விண்ணப்பப் படிவங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

04. முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கௌரவ செயலாளர், இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் (CEWET) மே/பா, இந்திய உயர் ஸ்தானிகராலயம், த.பெ.இலக்கம்-882, காலி வீதி, கொழும்பு-03 என்ற முகவரிக்கு 2026 ஏப்ரல் 28ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பப்படுதல் வேண்டும்.

“மலையக பொலிஸ் நிலையங்களில் தமிழ் அதிகாரிகள்”

மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு

இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் சபரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் அவர்களின்
பங்குபற்றுதலுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று
இன்றைய தினம்(27/03/2026) இடம் பெற்றிருந்தது.

இக் கலந்துரையாடலில் பெருநதோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்பிரதீப் கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

” மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் வெகு விரைவில் தமிழ் அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்த நிலையிலே அமைச்சர் ஆனந்த் விஜயபால இப் பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் அதிகாரிகளை வெகு விரைவில் பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார்.

அத்தோடு மலையக பகுதியில் உள்ள சட்ட விரோத மதுபானங்கள், மதுபான உற்பத்திகளை முழுமையாக தடை செய்வதற்கு விசேட வேலை திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலைமீதான தாக்குதல் போர்க்குற்றம்: பொறுப்புகூறலை வலியுறுத்துகிறது ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன தங்கள் நாடுமீது சட்டவிரோதப் போரைத் திணித்துள்ளன என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா. சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான், மினாப் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலானது போர்க்குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா துல்லியமான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதால் இதனை தற்செயலான தாக்குதலாகக் கருதமுடியாது.

எனவே, சர்வதேச சமூகம் இதற்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்த வேண்டும் எனவும்  அறைகூவல் விடுத்துள்ளார்.

மேற்படி தாக்குதல் குறித்து அமெரிக்கா இன்னும் முறையானப் பொறுப்பை ஏற்கவில்லை என்றாலும், இது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் அந்நாட்டு ராணுவம் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானில் பாடசாலைமீது தாக்குதல்: வெளிப்படையான விசாரணை வேண்டும் என்கிறது ஐ.நா.!

தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பாடசாலைமீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் துர்க் விரிவான விசாரணையை வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பலியாகின.

அமெரிக்கப் படைகள் தவறுதலாக இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பில் அமெரிக்கா உள்ளக விசாரணைகளை நடத்திவருகின்றது.

குற்றவாளிகளைப் பொறுப்பாளி ஆக்குவதற்குத் தகுந்த ஆதாரங்களுடன் கூடிய வெளிப்படையான விசாரணை அவசியம் என்று ஐநா வலியுறுத்துகிறது.

நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பள்ளிக் குழந்தைகளைக் கொல்வதன் மூலம் அவற்றை ஒருபோதும் தீர்க்க முடியாது என்று வோல்கர் துர்க் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய இந்த விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய கோரிக்கையாக உள்ளது.

ஈரானில் இதுவரை 250 மாணவர்கள் பலி!

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போரினால் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான இப்போரில் இதுவரையில் ஈரானில் 250 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் கல்வி அமைச்சு இந்த தகவலை இன்று (27) வெளியிட்டுள்ளது.

மனித உயிரிழப்புகள் மட்டுமின்றி, சுமார் 723 கல்வி மற்றும் கலாச்சார நிலையங்கள் இந்தத் தாக்குதல்களால் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இராணுவ இலக்குகள் மட்டுமின்றி பொதுமக்கள் குடியிருப்பு, கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை தாக்கப்படுவது தொடர்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்மீது கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் இதுவரை 10,000 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈ​ரானுக்கு எதி​ரான போரில் 10 ஆயிரம் இலக்கு​கள் மீது தாக்​குதல் நடத்​தி​யுள்​ளோம் என்று அமெரிக்கா அறி​வித்​துள்​ளது.

ஈரானுக்​கும், அமெரிக்கா, இஸ்​ரேல் படைகளுக்​கு​மான போர் கடந்த பிப்​ர​வரி 28-ம் திகதி முதல் நடந்து வரு​கிறது. இதுகுறித்து அமெரிக்கா​வின் ராணுவ மத்​திய கமாண்டை சேர்ந்த கடற்​படை அட்​மிரல் பிராட் கூப்​பர் நேற்று கூறியதாவது: ஈரான் போரின்போது 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இலக்​கு​களைத் தாக்கி அழித்துள்ளோம். இதில் பல்​வேறு வெடிபொருட்​கள் ஆலைகளும் அடங்​கும். இதுதொடர்​பான வீடியோக்​களை​யும் நாங்​கள் வெளியிட்டுள்​ளோம்.

நாங்​கள் சாதித்​தவற்​றை​யும், அமெரிக்கா – இஸ்​ரேல் படைகள் இணைந்து ஈட்​டிய வெற்​றியை​யும் இணைத்​துப் பார்க்​கும் போது இது நன்​றாகத் தெரி​யும். எங்​களின் துல்​லி​யத் தாக்​குதல்​கள் ஈரானிய வான் பாது​காப்பு அமைப்​பு​களை நிலைகுலை​யச் செய்​துள்​ளன. மேலும் எங்​கள் போர் விமானங்​கள் குறிப்​பிடத்​தக்க அளவி​லான தாக்​கங்​களை ஏற்​படுத்தி வரு​கின்​றன.

ஈரானியக் கடற்​படை​யின் மிகப்​பெரிய கப்​பல்​களில் 92 சதவீதத்தை அமெரிக்கா அழித்​து​விட்​டது. இப்​பகு​தி​யிலும், உலகம் முழு​வ​தி​லும் தங்​கள் கடற்​படை வலிமை​யை​யும் ஆதிக்​கத்​தை​யும் ஈரான் இழந்​து​விட்​டது. அந்த அளவுக்கு அழிவை அப்​பகு​தி​யில் ஏற்​படுத்​தி​யுள்​ளோம். ஈரானுக்​குச் சொந்​த​மான மூன்​றில் 2 பங்கு வெடிபொருட்​கள் ஆலைகள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது.

இது​வரை ஈரானின் ஏவுகணை, ஆளில்லா விமானம் மற்றும் கடற்படை உற்பத்தி நிலையங்கள், கப்பல் கட்டும் தளங்கள் ஆகியவற்றில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானவற்றை நாங்கள் சேதப்படுத்தியுள்ளோம். ஆனாலும், எங்கள் பணி இன்னும் முடிவடையவில்லை. ஈரானின் பரந்து விரிந்த ராணுவ உற்பத்தி கட்டமைப்பை முழுமையாக அழிக்கும் பாதையை நோக்கி பயணித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் 10,000 படையினரை களமிறக்கும் ட்ரம்ப்?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் 10,000 கூடுதல் தரைப்படை வீரர்களை களமிறக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருகிறார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் நாட்டுடன் சமாதானப் பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன எனக் கூறப்படும் சூழ்நிலையிலேயே இவ்வாறான ராணுவ நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள 5,000 வீரர்களுடன், தற்போது புதிதாகச் செல்லவிருக்கும் படையில் காலாட்படை மற்றும் கவச வாகனங்களும் இடம்பெற வாய்ப்புள்ளது.

இவர்கள் எங்கு நிலைகொள்வார்கள் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்தச் சாத்தியமான இராணுவ நகர்வு குறித்து வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனிடமிருந்து முறையான விளக்கத்தைப் பெற ஊடகங்கள் முயற்சி செய்து வருகின்றன.

அதேவேளை, ஈரானில் தரைவழி தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகிவருகின்றது என்ற தகவலும் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்!

0
- இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். - புதிய முறைமையின் ஊடாக எந்த நிமிடமும் எந்த இடத்தில்...

ஈரான் உளவுத்துறை தளபதி பலி!

0
ஈரான் புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதேமி Majid Khademi, கொல்லப்பட்டுள்ளார். ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. தாக்குதலுக்குரிய பொறுப்பை இஸ்ரேல் ஏற்றுள்ளது. பயங்கரவாதத் தலைவர்களுக்கு எதிரான வேட்டை தொடரும் என்று இஸ்ரேல்...

தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் மறுப்பு!

0
  தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் மறுத்துவிட்டது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர்நிறுத்த திட்டம் குறித்து அமெரிக்காவும், ஈரானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக...