Home Blog Page 14

ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம்: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானின் எரிசக்தி நிலையங்கள்மீதான தாக்குதல்களை 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, ஏப்ரல் 6, வரை இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், அமெரிக்கா ஏற்கனவே இந்தப் போரில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

எனினும், ஈரான் ஒரு உடன்படிக்கைக்கு வரவில்லை என்றால் மீண்டும் தாக்குதல்கள் தொடரும் என அவர் எச்சரித்துள்ளார்.

” எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்”

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர், இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள் குறித்து ரஷ்யாவிற்கு புரிதல் இருப்பதாக இங்கு குறிப்பிட்ட ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர், வலுசக்தி துறையில் மட்டுமன்றி தொழில்நுட்பம், இயந்திர உபகரணங்கள் போன்ற எவ்வகையிலான ஒத்துழைப்பையும் இலங்கைக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதி அமைச்சர், இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீண்டகால உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவும் நீண்டகால நட்புறவை இங்கு நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த காலங்களில் சோவியத் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் உதவிகள் அக்காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு பெரும் பக்கபலமாக அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

அண்மைக் காலத்திலும்கூட, இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் ரஷ்யா முன்னிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெருமளவிலான இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வழங்கும் ஒத்துழைப்பையும், இரு நாடுகளுக்கும் இடையிலான சமூக கலாசார உறவுகளையும், சர்வதேச விவகாரங்களில் இலங்கைக்கு ரஷ்யா வழங்கி வரும் ஆதரவையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

பிரதி அமைச்சரின் இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு காரணமாக அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஈரானுடன் இணைந்து போராட தயார்: ஹூதிகள்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் , தெரிவித்துள்ளனர்.

தகுந்த நேரத்தில் ராணுவ ரீதியாகக் களமிறங்க தாங்கள் முழு வீச்சுடன் காத்திருப்பதாக ஹூதி அமைப்பின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் தற்போதைய மோதல்களில் பின்னடைவைச் சந்தித்தால் மட்டுமே, தாங்கள் நேரடியாகத் தலையிட வேண்டிய அவசியம் ஏற்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய போர்முனையைத் திறக்க ஹூதி கிளர்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹூதி ஆகிய அமைப்புகள் ஈரான் ஆதரவுடன் இயங்கும் அமைப்புகளெனக் கருதப்படுகின்றது.

இனப்பிரச்சினைக்கு சமஷ்டியே தீர்வு! – கனடா தூதுவரிடம் சாணக்கியன் எம்.பி. திட்டவட்டம்


இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டினை அண்மையில் தனிப்பட்ட முறையில் சந்தித்து மேற்கொண்ட விரிவான கலந்துரையாடலின் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து சாணக்கியன் விரிவாக எடுத்துரைத்தார்.

குறிப்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தொடரும் நில அபகரிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறாமை போன்ற விடயங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் தொடர்வதை அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

வேலைவாய்ப்புப் பற்றாக்குறை, முதலீடுகள் இல்லாமை மற்றும் போருக்குப் பின்னரான மறுசீரமைப்புப் பணிகள் முழுமையடையாத நிலை ஆகியவை அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளன என்பதை அவர் விளக்கினார்.

பல்வேறு இன, மொழி மற்றும் கலாசாரப் பன்முகத்தன்மையைக் கொண்ட கனடா போன்ற நாடுகள், சமஷ்டி ஆட்சிமுறையின் ஊடாக அதிகாரப் பங்கீட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய சாணக்கியன், அந்த அனுபவங்கள் இலங்கைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் நிலையான அமைதியை எட்டுவதற்கு நீதி, பொறுப்புக்கூறல், பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பங்கீடு ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை இச்சந்திப்பில் சாணக்கியன் எம்.பி. மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஈரான் கடற்படை தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

தாங்கள் நடத்திய ராணுவத் தாக்குதலில், ஈரான் கடற்படைத் தளபதி அலிரெசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

அவருடன் சேர்ந்து ஈரானின் மூத்த கடற்படைத் தளபதிகள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், இது குறித்து ஈரான் ராணுவம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ராணுவமும் ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

மேற்கு ஆசியப் பிராந்தியம் முழுவதும் பரவியுள்ள இஸ்ரேலிய ராணுவத் தளங்கள் மற்றும் அமெரிக்க தளங்களையும் சொத்துக்களையும் குறிவைத்து ஈரான், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு 82 அலை தாக்குதல்களை நடத்தி உள்ளன.

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும், ஈராக்கின் இஸ்லாமிய அமைப்பும் ஈரானுடன் இணைந்து கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

சிபிஎஸ் அறிக்கையின்படி, பென்டகன் தனது 82-வது வான்வழிப் பிரிவின் துருப்புகளை மேற்கு ஆசியாவுக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வான் படையினரோடு, தரைப்படையினரையும் அனுப்ப பென்டகன் திட்டமிட்டுள்ளதாகவும், கார்க் தீவில் தரைவழித் தாக்குதல்களை மேற்கொள்ள அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, ஈரானுக்குள் தரைவழி தாக்குதலை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டாம் என்று அமெரிக்க-இஸ்ரேலிய படைகளுக்கு ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘‘டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் வஞ்சகத்தால் உங்கள் பிள்ளைகளை நரகத்துக்கு அனுப்பாதீர்கள். தரைப்படை ஈரானுக்குள் நுழைய முயன்றால், லட்சக்கணக்கான ஈரான் வீரர்கள் எனும் கடலுக்குள் மூழ்கி மறைந்து போவார்கள்’’ என்று அது எச்சரித்துள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள்!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (26) முற்பகல் கூடியது.

தற்போதைய உலகளாவிய வலுசக்தி நெருக்கடிக்கு மத்தியில் இந்நாட்டின் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவது மற்றும் தொழில்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆதரவை வழங்கும் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்கின்ற இடங்களை முறையாகப் பராமரித்தல் மற்றும் போர்ச் சூழல் இல்லாத நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பேர வாவியை சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

திரைப்பட சுற்றுலாத் துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கம்முவ, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, வெளிநாட்டு அலுவல்கள்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மல்காந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கிரிஷான் பாலேந்திர, ஜெட்விங் டிரவல்ஸ் தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர் ஷிரோமால் குரே ஆகியோருடன் சுற்றுலாத்துறையின் முக்கிய பங்குதாரர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-03-26

ஐ.நா. பிரதிநிதியுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்ச் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

கடந்த ஒரு வாரகாலமாக வடக்கு மாகாணத்தில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புகளை மேற்கொண்டு வரும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, இன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை தமிழ்த் தேசியப் பேரவையின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

யாழ்ப்பாணம் – தாவடிப் பகுதியில் அமைந்துள்ள ‘பொக்ஸ்’ விருந்தினர் விடுதியில் இச்சந்திப்பு நடைபெற்றது.

தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் செல்வராசா கஜேந்திரன், பொ.ஐங்கரநேசன் , தருமலிங்கம் சுரேஷ் , நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது வடக்கின் தற்போதைய நிலைமைகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன என்று தெரியவருகிறது.

செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கி: 52 நாள் புனித பாதயாத்திரை மே 23இல் ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – கதிர்காமத்திற்கான பாரம்பரிய புனித பாதயாத்திரை, ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீ கதிர்காம கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற ஆடிவேல் விழா மகோற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

15 தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இத்திருவிழா, ஜூலை மாதம் 29 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

இலங்கையின் மிக நீண்ட இந்தப் பாதயாத்திரையில் கலந்துகொள்ள விரும்பும் அடியார்கள், ஜெயா வேல்சாமியுடன் 077-8386381 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தமது பங்கேற்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இம்முறை 95 யாத்திரிகர்கள் மாத்திரமே உள்வாங்கப்படவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

செல்வச்சந்நிதி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் இந்தப் பாரம்பரிய பாதயாத்திரை, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களையும் கடந்து செல்லவுள்ளது.

சுமார் 52 நாள்கள், 572 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்தப் பயணம், இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரையாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அணுஆயுதத் திட்டம் உலக அமைதிக்கு எதிரான ஒரு புற்றுநோய்!

ஈரான் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தலைவர்கள் தங்கள் மக்கள் மற்றும் அமெரிக்காவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தயங்குவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதலை ஒரு இராணுவ நடவடிக்கையாக விவரித்த அவர், ஈரானின் அணுஆயுதத் திட்டத்தை உலக அமைதிக்கு எதிரான ஒரு புற்றுநோய் என விமர்சித்தார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகள் உலகைப் பாதுகாப்பதாக அவர் வாதிட்டார்.

ஈரானின் செல்வாக்கை முற்றிலுமாக அழிப்பதே தனது நோக்கம் என்பதை அவர் தனது உரையின் மூலம் தெளிவுபடுத்தினார்.ர்.

 

மே 14 சீனா செல்கிறார் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சீன பயணத்துக்குரிய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அவரது சீன விஜயம் இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சீன ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக அந்நாட்டுக்கு செல்வதற்கு ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார்.

எனினும், ஈரான்மீதான போர் நடவடிக்கை காரணமாக அவ்விஜயம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே சீன ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் சீன விஜயமானது இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

பதிலடி பயங்கரமாக இருக்கும்: காலக்கெடு விதித்த ட்ரம்புக்கு ஈரான் எச்சரிக்கை!

0
உள்நாட்டு கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாகப் பயங்கரமான தாக்குதல்களை முன்னெடுப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்...