Home Blog Page 168

விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் – ஜி.எல்.பீரிசின் நூல் வெளியானது

அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீளாய்வு செய்யும் நூல் ஒன்றை முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எழுதி வெளியிட்டுள்ளார்.

‘இலங்கை அமைதி செயல்முறைகள்: ஒரு உள் பார்வை’ என்ற தலைப்பில், வெளியிடப்பட்டுள்ள இந்த நூல், 2002 செப்டம்பர் 16,இல் தாய்லாந்தின் சத்தஹிப்பில் தொடங்கிய இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்கள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்தப் பேச்சுக்களின் கட்டமைப்பு பலவீனங்கள், போட்டி நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் இறுதியில் அதன் சரிவுக்கு வழிவகுத்த அரசியல் காரணிகள் குறித்தும் இதில் விபரிக்கப்பட்டுள்ளது.

சமாதான முன்னெடுப்பின் வடிவமைப்பு, அதன் பலம் மற்றும் உள்ளார்ந்த குறைபாடுகள், அடையப்பட்ட வரையறுக்கப்பட்ட ஆதாயங்கள் மற்றும் அதன் தோல்வியைத் தூண்டிய காரணிகளை இந்த நூல் பகுப்பாய்வு செய்கிறது.

விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில், பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜி.எல்.பீரிசின் பார்வையில் இந்த சமாதான முயற்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை இது விளக்குகிறது.

பேச்சுக்களில் சம்பந்தப்பட்ட ஆளுமைகள், இரு தரப்பிலும் உள்ள மூலோபாய கணக்கீடுகள் மற்றும் கடுமையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்துவதன் யதார்த்தங்கள் பற்றிய அவர் தனது நேரடி அனுபவங்களை இதில் விபரித்துள்ளார்.

சமகால உலகத் தலைவர்கள் பேச்சுவார்த்தை மூலம் ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் போராடி வரும் நிலையில், அமைதி செயல்முறைகளின் சாத்தியங்கள் மற்றும் பலவீனம் மற்றும் தவறான நடவடிக்கைகளினால் கொடுக்கப்படும் அதிக விலை ஆகியவற்றை ‘சிறிலங்கா அமைதி செயல்முறைகள்: ஒரு உள் பார்வை’ நூல் நினைவூட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி பயங்கரவாதத் தாக்குதல்: துப்பாக்கிதாரிமீது 59 குற்றச்சாட்டுகள் பதிவு!

சிட்னி போண்டியில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக கொலைக் குற்றம் உட்பட 59 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தந்தை (சாஜித் அக்ரம் – 50) மற்றும் மகன் (நவீத் அக்ரம் – 24) ஆகியோரே இந்த கொடூர தாக்குதலை நடத்தி இருந்தனர். சம்பவ இடத்திலேயே தந்தை கொல்லப்பட்டார்.

மகன் காயமடைந்த நிலையில் பொலிஸ் காவலின்கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில் அவர் கோமாவில் இருந்து மீண்டதும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

15 கொலைக்குற்றச்சாட்டுகள், பயங்கரவாத செயல் உட்பட 59 குற்றச்சாட்டுகள் அவர் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வைத்தியசாலையில் இருந்து ஒன்லைன்மூலம் அவர் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டார்.

சிறைச்சாலைக்கு மாற்றும் அளவுக்கு அவர் பூரண குணமடையவில்லை என்பதால் பொலிஸ் காவலின்கீழ் தொடர்ந்து சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.

போண்டி பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘கொம்புசீவி’ படத்தைத் தொடர்ந்து சண்முக பாண்டியன் நடிக்கவுள்ள அடுத்தப் படத்தையும் ஸ்டார் சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சண்முக பாண்டியன் உடன் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.

’திருச்சிற்றம்பலம்’, ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம புத்திரன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர். தற்போது மாதவன் நடித்து வரும் ‘அதிர்ஷ்டசாலி’ படத்தை இயக்கி வருகிறார். அப்படம் பைனான்ஸ் பிரச்சினையால் தொடங்கப்படாமல் உள்ளது. அந்த இடைவெளியில் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளார் மித்ரன் ஜவஹர்.

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 மில்லியன் டொலர்களை வழங்கியது கனடா

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்கப்படும் என கனடா அறிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கான அவசரகால நிவாரண வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவதற்காகவே குறித்த உதவி வழங்கப்படுகின்றது.

கனடாவின் சர்வதேச அபிவிருத்திக்கான வெளிவிவகார செயலாளர் ரன்தீப் சராய் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

மேற்படி உதவித் திட்டத்தின் பிரகாரம், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உடனடியாக உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கனடிய மனிதாபிமான உதவி நிதியத்தின் மூலம் அவசரகால நிவாரணப் பொருட்கள், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் தண்ணீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, வேர்ல்ட் விஷன் கனடாவுக்கு 350,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

கனடிய செஞ்சிலுவைச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் அவசரகால பேரிடர் உதவி நிதியம் மூலம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர்ச்சியான நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க 215,000 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவசர உதவி வழங்க உள்ளுர் முயற்சிகளுக்கான கனடா நிதியத்தின் மூலம் கிட்டத்தட்ட 70,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் அழிவுகள் மிகவும் மனவேதனை அளிப்பதாக கனடிய வெளியுறவுச் செயலர் சாராய் தெரிவித்துள்ளார்.

“இந்த கடினமான நேரத்தில் இலங்கை மக்களுடன் கனடா ஒற்றுமையாக நிற்கிறது. இந்த ஆதரவு உடனடி நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

மேலும் மீட்பு முயற்சிகள் முன்னேறும்போது உதவ கூடுதல் வழிகளை அடையாளம் காண்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, புயல் சிறிலங்காவில் பல குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு பெரும் துன்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கவும் மீண்டும் கட்டியெழுப்பவும் உதவுவதில் கனடாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்டவர்களுடன் கனடா நிற்கிறது, சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்கு மனிதாபிமான உதவி மற்றும் ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்

அந்த அறிக்கையில், சிறிலங்காவின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வளர்ந்து வரும் தேவைகளை மதிப்பிடுவதற்கு அனுபவம் வாய்ந்த மனிதாபிமான கூட்டாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கனடா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சீனா முழு ஆதரவு!

 

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிரந்தரக் குழுவின் உப தலைவர் வெங் டொங்னுக்கும், (Wang Dongming) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை அண்மையில் எதிர்கொண்ட இயற்கை அனர்த்தத்தின் போது சீன அரசாங்கம் வழங்கிய துரித உதவிகளுக்காகப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்ததோடு, அனர்த்தத்தின் பின்னர் இலங்கை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்புதல் மற்றும் மீளக்கட்டியெழுப்பும் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்ட வெங் டொங்மின், எதிர்வரும் மறுசீரமைப்புப் பணிகளுக்கும் சீனாவின் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார்.

பிரதமரின் சமீபத்திய சீன விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக, பாடசாலை சீருடை, உர மானியம், டிஜிட்டல் கல்விச் செயற்பாடுகளுக்கான தொழில்நுட்ப உதவி, வீதி அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அத்துறைகளில் நட்புறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படச் சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்த வெங், இந்நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகத் தொடர்ச்சியாகப் பங்களிப்பு செய்வதாக உறுதி அளித்தார்.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த உறவை மேலும் பலப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் சீனத் தூதுவர் ஷி ஷென்ஹொங் (Qi Zhenhong), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமர் அலுவலகத்தினதும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினதும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

சர்வதேச கொடையாளர் மாநாடு நல்லது: வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்ப்பதும் அவசியம்!

டித்வா புயலால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு 4 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

இவர் பொருளாதார நிபுணர் என்பதுடன், நிழல் நிதி அமைச்சராகவும் கருதப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ உலக வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்பே பேரிடர் இழப்பு பற்றி சரியான தகவலை குறிப்பிடலாம்.

எனினும், 3 முதல் 4 பில்லியன் டொலர்வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது எனது தனிப்பட்ட கணிப்பாகும்.

மொத்த தேசிய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு கணித்தால் இழப்பு 3 சதவீதமாக அமையும்.” எனவும் கலாநிதி ஹர்ச டி சில்வா சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, பேரிடரால் 6 பில்லியன் டொலர்வரை இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளமை தெரிந்ததே.

இந்திய தூதுவர், ஜீவன் அவசர சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும், இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், பேரிடரால் பெருந்தோட்டப்பகுதிகள் உட்பட மலையகத்தில் ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் இந்திய தூதுவருக்கு ஜீவன் தொண்டமான் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேவேளை, இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என ஜீவன் தொண்டமானிடம் இந்திய தூதுவர் உறுதியளித்துள்ளார்.

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் வரவு–செலவுத் திட்டம் தோல்வி

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

சபையின் தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி தலைமையில், டிசம்பர் மாதத்திற்கான பொதுச் சபைக் கூட்டம் இன்று அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தின் ஆரம்பத்தில், சமீபத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தவிசாளர் 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை சபையின் முன் சமர்ப்பித்தார்.

இன்றைய கூட்டத் தொடரில் தவிசாளர் உட்பட மொத்தம் 14 உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். வரவு–செலவுத் திட்டத்தின் மீது தீர்மானம் எடுக்க, இரகசிய வாக்கெடுப்பு நடத்த சபையில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி நடைபெற்ற வாக்கெடுப்பில்,

வரவு–செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 6 உறுப்பினர்கள் வாக்களித்ததுடன்,

எதிராக 8 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

மேலும், ஒரு உறுப்பினர் கூட்டத்திற்கு வருகை தரவில்லை.

இதன் விளைவாக, பெரும்பான்மை வாக்குகளால் அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

கௌசல்யா

ரயில் கட்டமைப்பை மீளமைக்க சீனாவிடம் தொழில்நுட்ப உதவி கோருகிறார் அநுர!

பேரிடரால் சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு சீனாவிடம், இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸ்ன் உப தலைவர் வாங் டோங்மிங் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர்.

இதன்போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்படி கோரிக்கையை விடுத்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் உப தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சீனா இலங்கைக்கு வழங்கிய பொருள் மற்றும் நிதி உதவியையும் அவர் மனப்பூர்வமாக பாராட்டினார்.

அத்துடன், இலங்கை எதிர்கொண்ட அனர்த்த நிலைமை மற்றும் மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் தொடர்பில் சீன பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

“ பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதே அரசாங்கத்தின் பிரதான பிரயத்தனமாக இருந்தது.

அதன்பின்னர் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.” என்று ஜனாதிபதி விளக்கமளித்தார்.

அவர்களின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக திட்டமிடப்பட்ட வகையில் பணியாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: ரூ. 500 பில்லியனுக்குரிய குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு!

2025.12.18ஆம் திகதி கூட்டப்பட்டுள்ள பாராளுமன்றம் 2025.12.19ஆம் திகதியும் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

டிசம்பர் 18ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு அன்றையதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.

இதனைத் தொடர்ந்து மோசமான காலநிலையின் தாக்கத்தால் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் பி.ப 5.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

டிசம்பர் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதுடன், அன்றையதினம் ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்படவுள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...

காவத்தையில் காடையர் கும்பல் அடாவடி: இதொகா தலைவர் கண்டனம்!

0
இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 1 தோட்டத்தில் தோட்ட தொழிலாளியால் அமைக்கப்பட்ட வீடு ஒன்றை காடையர்கள் உடைத்து தரைமட்டம் ஆக்கியமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு...