Home Blog Page 178

மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலை மீள திறப்பு: ஜீவன் நடவடிக்கை!

அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தொழிலின்றி பாரிய சிரமங்களை சந்தித்து வந்தனர்.

இந்த பிரச்சினை இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து தொடர்புடைய தரப்புகளுடன் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கணக்காய்வு குழுவினரின் ஆய்வின்போது தேயிலை நிறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக முதற்கட்ட விசாரணைகளில் இரண்டு உயர் அதிகாரிகள் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டதை அடுத்து தொழிற்சாலை விசாரணை முடியும் வரை மூடப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆரம்ப பேச்சுவார்த்தையில் தோட்ட நிறுவனத்தின் தலைமை அதிகாரி கலந்து கொள்ளாததால் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. பின்னர் ஹட்டன் உதவி தொழில் ஆனையாளர் காரியாலயத்தில் இ.தொ.கா சிரேஷ்ட்ட இயக்குனர் லோகதாஸ் அவர்களின் கோரிக்கையின்படி இம்மாதம் 09ஆம் திகதி தீர்க்கமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஹட்டன் உதவி தொழில் ஆனையாளர் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு 3 மாத அவகாசம் கோரிய தோட்ட நிறுவனம் முன்வைத்த வேண்டுகோளை ஜீவன் தொண்டமான்  திடமாக நிராகரித்தார்.

“குற்றம் செய்தது அதிகாரிகள்; தொழிலாளர்களின் வாழ்க்கையில் தண்டனையை திணிக்கக் கூடாது. எமது மக்களுக்கு உடனடி தொழில் வாய்ப்பு வழங்க தொழிற்சாலை விரைவில் திறக்கப்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

மேலும், விசாரணை நிறைவடையும் வரை வேறு தோட்டங்களில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகளை மாற்றீடாக நியமித்து தொழிற்சாலையை செயல்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்தார்.

நீண்டகால பேச்சுவார்த்தையின் முடிவில், எதிர்வரும் ஜனவரி மாதம் 01ஆம் திகதிக்குள் தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாருள்ளதாக தோட்ட நிர்வாகம் எழுத்து மூலம் ஒப்புதல் வழங்கியது.

புரிந்துணர்வு பத்திரத்தில் தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஹட்டன் உதவி தொழில் ஆனையாளர் மற்றும் இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்களும் கையெழுத்திட்டனர்.

இக்கலந்துரையாடலில் இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவன தலைமை அதிகாரி அஜித் பெரேரா, தொடர்புடைய தோட்ட அதிகாரிகள், தொழில் ஆணையாளர் அதிகாரிகள் மற்றும் இ.தொ.கா காரியாலயக பிரதிநிதிகளும் தோட்ட மக்களும் கலந்துக்கொண்டனர்.

பேரிடரிலும் அரசியல் நடத்துபவர்களே இடைக்கால அரசு பற்றி கதைக்கின்றனர்!

பேரிடரால் இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்லும் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

“நாட்டில் பேரிடர் ஏற்படுவதற்கு முன்னரே டிசம்பர் மாதம் அரசாங்கம் விழும் என்றார்கள். இப்படியானவர்களின் கருத்துகள் பற்றி அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பேரிடர் நிலையால் நாட்டு பொருளாதாரம் மீண்டும் விழும் என வெளியாகும் தகவல் பற்றி அமைச்சரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு.

“ பேரிடரால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான நிலையிலும் சில தரப்பினர் அரசியல் நடத்துவதற்கு முற்படுகின்றனர். அதனால்தான் இடைக்கால அரசாங்கம் பற்றி எல்லாம் கதைக்கின்றனர்.

நாட்டில் அரசியல் கலாசாரம் மாறிவிட்டது என்பதை இவர்களுக்கு இன்னும் புரியவில்லை. அதனால்தான் பழைய அரசியல் கலாசார மனோநிலையிலேயே இருக்கின்றனர்.” – என்றார் அமைச்சர்.

ஜப்​பானில் ஒரு வாரத்​துக்​குள் சக்​தி​ வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்படும் அபாயம்!

ஜப்​பானில் ஒரு வாரத்​துக்​குள் சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​படலாம் என்​றும், சுனாமி ஆபத்​தும் ஏற்​படலாம் என்றும் ஜப்​பான் அரசு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

ஜப்​பான் நாட்​டின் வட கடலோரப் பகு​தி​களான ஹொக்​காய்​டோ, ஹொன்ஷு தீவு​களில் கடந்த திங்​கள்​கிழமை சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது.

ரிக்​டர் அளவு​கோலில் 7.5 புள்​ளி​களாக பதிவானது.

இதைத் தொடர்ந்து சுனாமி எச்​சரிக்​கை​யும் விடுக்​கப்​பட்​டது. ஆனால் எதிர்​பார்த்​தது போல சுனாமி எது​வும் வரவில்​லை. ஆனால், நிலநடுக்​கத்​தால் 34 பேர் காயமடைந்​தனர்.

இந்த சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்டு 2 நாட்​கள் மட்​டுமே​ஆன நிலை​யில் அடுத்த ஒரு வாரத்​துக்​குள் ஜப்​பானில் மீண்​டும் சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​படலாம் என்​றும், பயங்​கர​மான சுனாமி பேரலைத் தாக்​குதல் நிகழலாம் என்​றும் ஜப்​பான் அரசு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இந்த நிலநடுக்​கம் ஏற்​படும்​போது, 98 அடி உயர சுனாமி அலைகள் ஜப்​பானின் கடலில் எழ வாய்ப்​பிருப்​ப​தாக​வும், இதனால் 2 லட்​சம் பேர் உயி​ரிழக்​கும் அபா​யம் ஏற்​படலாம் என்​றும் ஜப்​பான் அரசு எச்சரிக்கை விடுத்​துள்​ளது.

இந்த சக்​தி ​வாய்ந்த நிலநடுக்​கம் ரிக்​டர் அளவு​கோலில் 8 புள்​ளி​களாக இருக்​கலாம் என்​றும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த 2011-ல் ஜப்​பானில் ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தைத் தொடர்ந்து சுனாமி ஏற்​பட்டு 20 ஆயிரம் பேர் உயி​ரிழந்​தனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இந்த சுனாமி பேரலை காரண​மாக புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலை​ய​மும் வெகு​வாகப் பாதிக்​கப்​பட்​டது.

நுவரெலியா மாவட்ட மக்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி!

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கடுமையான அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அங்கு தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த குடும்பங்களையும் குழந்தைகளையும் நேரில் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் கவலைகளையும் கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நடந்த உரையாடல்களின் போது, அனர்த்தத்தின் தாக்கத்தையும், மக்களின் மனநிலையையும் மிகத் தீவிரமாக வெளிப்படுத்தின.

பாதுகாப்பு மையத்தில் இருந்த ஒரு தாய், தன் குழந்தையை அணைத்தபடி பகிர்ந்த கவலையும், சிறுவர்கள் கண்களில் தெரிந்த பயமும், நிலைமையின் ஆழமான பாதிப்பை வெளிப்படுத்தின.

“நாங்கள் மீண்டும் எப்போது வீட்டிற்குத் திரும்ப முடியும்?” என்ற ஒரு எளிய, ஆனால் வலிமையான கேள்வி, அங்கிருந்த அனைவரின் மனதையும் நெகிழச் செய்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

அந்த ஒரு கேள்வியிலேயே மக்கள் எதிர்கொள்ளும் துயரமும் அச்சமும் ஒட்டுமொத்தமாக பிரதிபலித்தது.

அமைச்சர் சந்திரசேகர், மக்களின் இந்த வேதனையை உடனடி நடவடிக்கைகள் மூலம் குறைப்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான பொறுப்பாகும் என்று வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண உதவிகள் தாமதம் இன்றி கிடைக்கச் செய்வதற்காக மாவட்டச் செயலாளர், கிராமஅதிகாரிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளுடன் கூடி ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், உணவு, மருந்து, உலர் உணவு, உடைகள் போன்ற அவசியமான பொருட்கள் அனைத்தும் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், சேதமடைந்த வீடுகள், ஆபத்தான மலைச்சரிவுகள், தாழ்வான நிலப்பகுதிகள் போன்றவை பற்றிய தொழில்நுட்ப மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாகத் திரும்பக்கூடிய நிலை ஏற்படுத்துவதற்கான மறுசீரமைப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உளவியல் ஆதரவு, குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவ பராமரிப்பு ஆகியவை கூடுதல் கவனத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன.

“ஒரு குடும்பமும் தனியாக இந்த துயரத்தைக் கடக்க வேண்டியதில்லை; அவர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடங்கும் வரை அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்,” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்தார்.

நுவரெலியாவில் ஏற்பட்ட இந்த இயற்கை அனர்த்தம் மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ள நிலையிலும், அவர்கள் மீண்டும் நிம்மதியான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசின் பொறுப்புடன் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

மலையக மக்களை வரவேற்க வடக்கு, கிழக்கு தயார்: சுமந்திரன் அறிவிப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் முகநூல் பதிவு வருமாறு,

கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு உங்களோடு சென்ற போது மலையகத்தில் இருந்து வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம். ஆனால் நீங்களும் அவர்களும் அதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கும் வரை பகிரங்கமாக அதைச் சொல்வதைத் தவிர்த்திருந்தோம்.

இப்போது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் அதை விரும்புவதாகச் சொல்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மிகுந்த பாசத்தோடு மனதார உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே எம்மில் பலர் தங்கள் சொந்த நிலங்களைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்கள். அதே போல் அரச காணிகளையும் வாழ்விடங்களுக்கும் பயிர்ச் செய்கை, தோட்டம் போன்றவற்றிற்கும் பெற்றுத் தர எம்மால் முடிந்த முயற்சிகளை செய்து கொடுப்போம்.

மஹிந்த ஆட்சியில் வடக்கில் குறுகிய காலப்பகுதிக்குள் மீள்குடியேற்றம் நடந்தது

வடக்கில் பெருமளவான மக்கள் இடைத்தங்கள் முகாம்களில் இருந்தனர். போர் முடிவடைந்த பின்னர் அவர்களை குறுகிய காலப்பகுதிக்குள் மீள்குடியமர்த்துவதற்கு மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.

“ அபாய வலயங்களில் வீடுகள் உள்ளன. அங்குள்ள மக்களை தற்காலிக இருப்பிடங்களுக்கு அனுப்ப வேண்டும். அதன்பின்னர் மாற்று காணிகள் தேடப்பட வேண்டும்.

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை குறுகிய காலப்பகுதியில் மீள் குடியமர்த்துவதற்குரிய பொறிமுறை அன்று இயங்கியது. சுனாமி அனர்த்தத்தின் பின்னரும் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் இருந்து அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டும். முன்னாள் தலைவர்களிடம் அனுபவங்களைப் பெற வேண்டும்.

பேரிடர் இழப்பு தொடர்பில் எங்கு தவறு நடந்துள்ளது என்பதை கண்டறியவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்குமாறு கோரியுள்ளோம். அதன்மூலம் உண்மை தெரியவரும்.

அதேபோல பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை நாம் கண்காணிப்போம். இது தொடர்பான எமது கடப்பாட்டை உரிய வகையில் நிறைவேற்றுவோம்.” எனவும் நாமல் ராஜபக்ச எம்.பி. குறிப்பிட்டார்.

4 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலையால் பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயமிக்க பகுதிகளிலுள்ள சுமார் 600-இற்கும் அதிகமானோர் பாதுகாப்பு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

ஊவபரணகம, எல்ல, ஹாலிஎல, சொரணாதோட்ட மற்றும் மீகஹகிவுல பகுதிகளிலுள்ள மக்களே இவ்வாறு வெயேற்றப்பட்டதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவிக்ரம குறிப்பிட்டார்.

நாட்டின் 04 மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் பன்வில, உடபலாத, மினிபே, தும்பனே, ஹதரலியத்த, யட்டிநுவர, தெல்தோட்டை, மெததும்பர, குண்டசாலை, பஸ்பாகே, பாததும்பர, பாதஹேவாஹெட்ட ஹாரிஸ்பத்துவ, தொலுவ, பூஜாபிட்டிய, கங்கவட்ட கோரளை, அக்குரணை

கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டி, மாவனெல்லை, எட்டியாந்தோட்டை, ரம்புக்கனை, அரநாயக்க, வரக்காபொல, கலிகமுவ

மாத்தளை மாவட்டத்தின், இரத்தோட்டை, உக்குவெல, மாத்தளை, பல்லேபொல, லக்கல, பல்லேகம, யட்டவத்த, அம்பன்கங்க கோரளை, வில்கமுவ

குருணாகல் மாவட்டத்தின் ரிதிகம, மல்லவபிட்டி, மாவத்தகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (11.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பேரிடர் நிவாரணப் பணியில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை!

பேரிடர் நிவாரணப் பணிகளில் அரசாங்க அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது.

“ அரசாங்க அதிகாரிகளுக்கு அரசாங்க தரப்பில் இருந்து எவ்வித இடையூறும் விளைவிக்கப்படுவதில்லை. அரசாங்க ஊழியர்களுக்கு சுதந்திரமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேச தொடர்பு இல்லை என விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் சிறப்பான முறையில் உறவு பேணப்பட்டுவருகின்றது.

சுனாமி அனர்த்தத்தின் பின்னர் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற நிதி முறையாக பயன்படுத்தப்படாததால் சர்வதேசம் நம்பிக்கை இழந்து இருந்தது. ஆனால் எமது நிர்வாக பொறிமுறைமீது சர்வதேசத்துக்கு முழு நம்பிக்கை உள்ளது.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

டித்வா புயல்: உயிரிழப்பு, வீடுகள் சேதம், இடம்பெயர்வு விபரங்கள்…!

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

203 பேர் காணாமல்போயுள்ளனர்.

5 ஆயிரத்து 350 வீடுகள் முழமையாகவும், 86 ஆயிரத்து 245 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

26 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன.

மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

மத்திய மலை நாட்டில் பிரதான வீதிகளில் சரிந்துள்ள மண்மேடுகளை அகற்றும் பணியும் இடம்பெற்றுவருகின்றது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

அமெரிக்க கடற்படை செயலர் திடீர் விலகல்!

0
அமெரிக்க கடற்படைச் செயலாளர் John Phelan தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தில் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வரும் சூழலில், இவரது வெளியேற்றம் முக்கியமானதாகக்...

மரக்கறி விலைப்பட்டியல் (23.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மும்பை, சென்னை அணிகள் இன்று மோதல்!

0
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். தொடை பகுதியில் ஏற்பட்ட...