Home Blog Page 199

வெளிநாட்டில் பதுங்கியுள்ள பாதாள குழுவினருக்கு வலை: 80 பேருக்கு சிவப்பு பிடிவிறாந்து!

பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ பாதாள குழுவினருக்கு எதிராக பொலிஸார் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுவருகின்றனர். இது சிலருக்கு வலிக்கின்றது. அதனால்தான் பொலிஸாரை இலக்கு வைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

பாதாள குழுவினருக்கு எதிரான நடவடிக்கை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. பாதாள குழு உறுப்பினர்களுக்கு சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 80 பேருக்கு இவ்வாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களை இந்நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய இராஜதந்திர முயற்சியும் எடுக்கப்பட்டுவருகின்றது.

பங்களாதேசில் தண்டனை: இலங்கையில் தாமதம் ஏன்?

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட பங்களாதேசின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் நடந்த அறகலயவின்போது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு எதிராக சட்டம் அமுலாவதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என கேள்வி எழுப்பட்டுள்ளது.

அறகலயவின்போது வன்முறைக்கு வழிசமைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும், நாட்டை அறகலயவரை அழைத்து வந்தவர்கள் தண்டிக்கடுவார்கள் எனவும் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்த விடயத்தை சுட்டிக்காட்டியே, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது , அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இவ்வாறு கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்.

“ விசாரணைகள் முடிவடைந்து சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இனி நீதிமன்றம்தான் தீர்ப்பு வழங்க வேண்டும். உரிய நீதி கிடைக்கும் என நம்புகின்றோம்.” என்றார்.

மரக்கறி விலைப்பட்டியல் (19.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா.

இப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது படக்குழு. முழுக்க வரலாற்றுப் பின்னணியில் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளது படக்குழு. ‘பெத்தி’ படத்தினை தயாரித்து வரும் விருத்தி சினிமாஸ் நிறுவனம் தான் இப்படத்தினையும் தயாரிக்கிறது.

’சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’, ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, இப்படத்திலும் பாலகிருஷ்ணா – நயன்தாரா ஜோடி இணைந்து நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கமர்ஷியல் கதைகளை இயக்கி வெற்றி கண்டவரான கோபிசந்த் மாலினேனி இப்படத்தின் மூலம் வரலாற்று பின்னணிக் கொண்ட கதையினை இயக்கவுள்ளார். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

ஜனாதிபதி – தமிழரசுக் கட்சியினர் சந்திப்பு இன்று

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துப் பேசவுள்ளனர்.

இந்தச் சந்திப்பு இன்று மதியம் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடை பெறவுள்ளது என்று இலங்கைத் தமிழ ரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில், தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிற பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்கள் குறித் தும் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.

இதில், இலங்கைத் தமிழரசுக் கட்சி யைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 நாடா ளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோ ரும் பங்கேற்கவுள்ளனர். தேசிய இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்கவுடன் பேசுவது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி இறுதியாகக் கூட்டிய மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட் டது.

இதைத் தொடர்ந்து, சந்திப்புக்கான நேரம் கோரி ஜனாதிபதி அநுரகுமார வுக்கு கட்சியின் சார்பில் கடிதம் அனுப் பப்பட்டிருந்தது. பேச்சுக்கான நல்லெண்ண சமிக்ஞை யாக வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதில்லை என்றும் அந்தக் கட்சி தீர்மானித்திருந்தது என்பதும் குறிப் பிடத்தக்கது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துப் பேசவுள்ளனர்.

இந்தச் சந்திப்பு இன்று மதியம் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடை பெறவுள்ளது என்று இலங்கைத் தமிழ ரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில், தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிற பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்கள் குறித் தும் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.

இதில், இலங்கைத் தமிழரசுக் கட்சி யைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 நாடா ளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோ ரும் பங்கேற்கவுள்ளனர். தேசிய இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்கவுடன் பேசுவது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி இறுதியாகக் கூட்டிய மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட் டது.

இதைத் தொடர்ந்து, சந்திப்புக்கான நேரம் கோரி ஜனாதிபதி அநுரகுமார வுக்கு கட்சியின் சார்பில் கடிதம் அனுப் பப்பட்டிருந்தது. பேச்சுக்கான நல்லெண்ண சமிக்ஞை யாக வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதில்லை என்றும் அந்தக் கட்சி தீர்மானித்திருந்தது என்பதும் குறிப் பிடத்தக்கது.

திருகோணமலையில் நடந்தது என்ன? முழுமையான விசாரணை அறிக்கை கோருகிறார் ஜனாதிபதி!

திருகோணமலை சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிக்கை கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார்.

“ தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல் நடந்தால் அதற்கு எதிராக போராடலாம், ஜனநாயக மீறல்கள் இடம்பெற்றால் அதற்கு எதிராக போராட்டம் நடத்தலாம். பொருளாதாரம் சரிந்தால் அதற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம். ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் தோல்வி கண்ட தரப்புகள் இனவாத சூழ்நிலையை ஏற்படுத்த முற்படுகின்றன.

இப்பிரச்சினை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரியுள்ளேன். எமது நாட்டில் இனவாதத்துக்கு இடமளிக்கமாட்டேன். பௌத்த மக்களும் இடமளிக்கமாட்டார்கள். பொதுவாக அனைத்து இன மக்களும் இனவாதத்தை நிராகரிக்கின்றனர்.

எனவே, பழைய இனவாத நாடகங்கள் இனி இந்நாட்டில் எடுபடாது. இனவாதத்தை இனி அரசியல் வரலாற்றை எழுத முடியாது.” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

திருகோணமலை சம்பவம்: ஜனாதிபதி தலைமையில் குழு அமைக்குமாறு வலியுறுத்து!

 

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவொன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு,

“ திருகோணமலை ஜயந்தி போதிராஜ விகாரையில் நடந்த சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு சாதகமானதா? பாதிப்பானதா? 1951ஆம் ஆண்டில் அந்த விகாரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2010 இல் பௌத்த விவகாரங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 இல் புனித பூமிக்கான உரித்து கிடைத்துள்ளது.

ஏதோவோரு பிரச்சினை உருவாகின்றது. அந்த பிரச்சினையில் புத்தர்சிலையை கொண்டு செல்லும் தரப்பாக பொலிஸார் மாற்றப்பட்டுள்ளனர். புத்தர் சிலையை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு உள்ள உரிமை என்ன? தவறை புரிந்துகொண்டு மீண்டும் அந்த புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்துள்ளனர்.

பௌத்த மதத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமை தொடர்பில் நாம் அனைவரும் அறிவோம். அதேபோன்று மற்றைய மதங்களுக்கு வழங்கப்படும் உரிய கௌரவம் மற்றும் இடம் என்பன வழங்கப்பட வேண்டும்.

எனவே, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவொன்றை அமைக்க வேண்டும். ஜனாதிபதி அதனை செயற்படுத்த வேண்டும். இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது இதனை பொலிஸாரிடம் ஒப்படைத்து பலனில்லை. நாட்டுத் தலைவர் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

இது சாதாரண பிரச்சினையல்ல என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஏனைய மதங்களில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போதும் நாங்கள் இவ்வாறு செயற்பட்டோம். சிறந்த பௌத்தர்கள் போன்றே நடந்து கொண்டோம். ஆனால் தற்போது சில குழுக்கள் பௌத்த மதத்தை திரிபுப்படுத்துகின்றன. இந்த நிலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் ஜனாதிபதிக்கு கூறுகின்றேன்.

ஜனாதிபதி தீயை உருவாக்கக் கூடாது. தீயை அணைப்பதற்கே நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு பிரிவினர் இதுபோன்ற விடயங்களில் தலையிடாது. நாட்டின் ஜனாதிபதி இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிச் செல்லாத வகையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாநாயக்க தேரர் மற்றும் இந்த பிரச்சினையில் தொடர்புபட்டுள்ள சகல குழுக்களையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுங்கள். பிரச்சினையில் இருந்து நழுவிச் செல்வது தலைமைத்துவம் அல்ல. இதனை தீர்க்க வேண்டும். நாட்டில் பல இடங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன.

ஆகவே இவற்றுக்கு முறையான தீர்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை, உண்மையான மக்கள் இறையாண்மை, நாட்டின் சுதந்திரத்தை பலப்படுத்தும் சாதகமான செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சி கூட ஒத்துழைப்பை வழங்க தயார். ஆனால் விகாரைகளுக்குள் சென்று செயற்படுவதற்கு பொலிஸாருக்கு உரிமை கிடையாது. இதனால் இந்தப் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

ட்ரம்பின் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கீகாரம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காஸா அமைதித் திட்டத்திற்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஆதரவாக வாக்களிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலும் , ஹமாஸும் அமைதியை முன்னெடுக்கும் வகையில், தங்கள் இரண்டு ஆண்டுகால போரை நிறுத்தி, ஒப்பந்தத்தை அங்கீகரித்தன.

இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு சபை வாக்களித்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு இங்கிலாந்து, பிரான்ஸ் உட்பட 13 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

எவரும் இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. ரஷ்யாவும் சீனாவும் வாக்களிக்கவில்லை.

ஆனால், இந்த தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஹமாஸ்,

“பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது” என்றும், காஸா மீது சர்வதேச அறங்காவலர் பதவியை திணிக்க முயற்சிக்கிறது என்றும் கூறியது.

ஆனால், ஹமாஸின் இந்த முடிவை பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது.

மறுபுறம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வாக்கெடுப்பை வரவேற்ற ட்ரம்ப், தனது சமூக ஊடக தளத்தில் ஒரு நீண்ட செய்தியை வெளியிட்டார்.

இந்த முடிவை உலகளாவிய ராஜதந்திரத்திற்கான ஒரு மைல்கல் என்று வர்ணித்த அவர், இந்த நடவடிக்கையை ஆதரித்த நாடுகளைப் பாராட்டினார். அதேநேரத்தில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அரசை நிராகரிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியம் ரத்து: சட்டமூலம் விரைவில் முன்வைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தேசிய அரச பேரவையின் 1971 ஆம் ஆண்டின் 01 ஆம இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரச கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘வளமான நாடு- அழகான வாழ்க்கை’ எனும் தொலைநோக்குக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் அரசு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய, நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவர்களுடைய துணைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள ஓய்வூதிய உரித்தை இரத்துச் செய்யும் நோக்கில் நாடாளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை நீக்குவதற்காக சட்டவரைஞரால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காகவும் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” – என்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

தோல்வியில் இருந்து மீளுமா குஜராத் அணி?

0
ஐபிஎல் தொடரில் இன்று நடை​பெறும் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்சிபி) - குஜராத் டைட்டன்ஸ் அணி​கள் மோதுகின்​றன. இரவு 7.30 மணிக்கு பெங்​களூரு​வில் உள்ள எம்​சின்​ன​சாமி மைதானத்​தில் போட்டி ஆரம்பமாகும். நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி...

“உலக அமைதிக்கான நடை பயணம்” 3 ஆம் நாள் நிகழ்வு இன்று

0
உலக அமைதியை வலியுறுத்தி "அமைதிக்கான நடைபயணம்" எனும் மகுடத்தின் கீழ் அமெரிக்காவில் 110 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்ட வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், தற்போது இலங்கையில் தமது பயணத்தைத் தொடர்ந்து...

“ஐ.நா. அமைதி படை” – பாதுகாப்பு செயலர், ஐ.நா. உதவி செயலருடன் சந்திப்பு!

0
நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடர்ந்து, இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா...