Home Blog Page 213

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: 241 பேர் பலி!

போர் நிறுத்தத்தைமீறி காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திவருகின்றது. அங்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது முதல் இதுவரையில் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது.

காசாவில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் எட்டப்பட்டபோதும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தினசரி இடம்பெற்று வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் இவ்வாறான தாக்குதல்களில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஐவர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கடந்த இரண்டு ஆண்டுகள் நீடித்த காசா போரில் இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆறு உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டிபருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதலில் 241 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது மாத்திரமன்றி மேலும் 619 பேர் காயமடைந்திருப்பதோடு இடிபாடுகளில் இருந்து 528 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அமைச்சு தெரிவித்தள்ளது.

இதன்படி காசாவில் 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 69 ஆயிரத்தைத் தாண்டி 69 ஆயிரத்து 176 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1லட்சத்து 70 ஆயிரத்து 960 பேர் காயமடைந்துள்ளனர்.

வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் வழங்குவேன்: ட்ரம்ப் உறுதி

கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் வழங்கப்படும் என்றும் அஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், “கூடுதல் வரி விதிப்பை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள். எனது தலைமையின் கீழ், அமெரிக்கா உலகின் மிகவும் பணக்கார நாடாக, மிகவும் மதிக்கப்படும் நாடாக, பணவீக்கம் இல்லாத நாடாக மாறியுள்ளது. பங்குச் சந்தையில் வரலாறு காணாத உச்சத்தை அமெரிக்க தொட்டுள்ளது.

கூடுதல் வரிகள் மூலம் டிரில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்கா வருவாயாகப் பெறுகிறது. விரைவில் எங்கள் மிகப்பெரிய கடனான 37 டிரில்லியன் டாலரை செலுத்தத் தொடங்குவோம். அமெரிக்காவில் முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகின்றன.

கூடுதல் வரியிலிருந்து கிடைக்கும் வருவாய், அதிக வருமானம் ஈட்டுபவர்களைத் தவிர ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் தலா 2,000 டாலர் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்தப் பணம் எவ்வாறு அல்லது எப்போது விநியோகிக்கப்படும் என்பதைப் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், வரிகளிலிருந்து கிடைக்கும் பணம் மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் அதே வேளையில் தேசியக் கடனைக் குறைக்க உதவும் என்று அவர் கூறினார்.

ஆளும் கட்சி காட்டுச் செடிகளாகி, எதிர்க்கட்சி தங்கச் செடிகளாக மாறலாம்

எதிர்க்கட்சியினர் காட்டுச் செடிகளாகவும், ஆளும் கட்சியினர் தங்கச் செடிகளாகவும் இப்போது காணப்பட்டாலும் இன்னும் சிறிது காலத்தில் ஆளும் கட்சியினர் காட்டுச் செடிகளாகி, எதிர்க்கட்சியினர் தங்கச் செடிகளாக மாறும் நிலை ஏற்படலாம் என புதிய ஜனநாயக முன்னணி எம்.பி சாமர சம்பத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே சாமர சம்பத் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

”முழு நாடும் ஒன்றாக என்று போதைப் பொருளுக்கு எதிரான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களில் பேலியகொட மாநகர சபை உறுப்பினரின் கணவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

அதேவேளை ஒரு மாதத்திற்கு முன்னர் தெஹிவளை- கல்கிசை நகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரின் மகன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலைமையில் போதைப் பொருள் குற்றவாளிகளின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். இப்போதுதான் அவருக்கு அது தெரிகின்றதா? இதற்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து செவ்வந்தி உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலை சேர்ந்தவர்களை அழைத்து வரும் போது புகைப்படங்களை வெளியிட்டு பொலிஸாரே பிரசாரங்களை செய்தனர். அதன் பின்னரே பொலிஸ் மா அதிபருக்கு இப்போது அது நினைவுக்கு வந்துள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்னேற்றமடைந்துள்ள நிறுவனமாக ஶ்ரீ லங்கன் விமான சேவை உள்ளது. அதற்காக ரூ. 20,000 மில்லியன் வழங்கப்பட்டது. இப்படி நிதி வழங்கினால் அது முன்னேற்றம் காணாமல் இருக்குமா? நாட்டில் 14500 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு வழங்கிய பணத்தை பிரித்து பார்த்தால் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் ரூ. 17 இலட்சம் என்ற அடிப்படையில் நிதியை வழங்கியிருக்கலாம். அதேவேளை பிணையின்றி கடன் வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் எவருக்காவது பிணையின்றி கடன் கிடைத்துள்ளதா? என பார்த்தால் அப்படிக் கிடைக்கவில்லை.

மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையை சேர்ந்தவர். அவர் அந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்துள்ளார். அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷவும் ஹம்பாந்தோட்டையை அபிவிருத்தி செய்துள்ளார். அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பை அபிவிருத்தி செய்துள்ளார்.

நீங்கள் நாளுக்கு நாள் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். மக்கள் வீதிக்கு இறங்கும் நிலைமை வரும். உங்களுக்கு அதிகளவில் மக்கள் வாக்களித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இலட்சக்கணக்கில் மக்கள் வாக்குகளை வழங்கினர். நீங்கள் அந்த சாதனைகளை உடைத்துக்கொள்ள வேண்டாம். நிமல் சிறிபால டி சில்வா போன்றோர் உங்களை போன்று சாதனை வாக்குகளைப் பெற்றனர். இப்போது வீட்டில் இருக்கின்றார். இதுபோன்ற நிலைமை உங்களுக்கு வரும். இப்போது நாங்கள் காட்டுச் செடிகள், நீங்கள் தங்கச் செடிகள். ஆனால் இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் காட்டுச் செடிகளாகி, நாங்கள் தங்கச் செடிகளாகிவிடுவோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இறம்பொடையில் குளவிக்கொட்டு: இருவர் பாதிப்பு!

இறம்பொடை, வெதமுல்லை தோட்டத்தில் இரு தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

கௌசல்யா.

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா? பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு

“ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக நாம் இன்று பயணித்துக்
கொண்டிருக்கின்றோம். அத்துடன், தமிழ்த் தேசிய பேரவையுடன் புரிந்துணர்வு ஒன்றையும் மேற்கொண்டிருக்கின்றோம். மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன்
பேசியே முடிவு எடுப்போம்.”

– இவ்வாறு ரெலோ கட்சி நேற்று அறிவித்துள்ளது.

அத்துடன், தமது கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாகச் சேறு பூச வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன என்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்தார்.

ரெலோ கட்சியின் தலைமைக் குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த சில வாரங்களாக திட்டமிட்ட வகையில் சில முகநூல்களிலும் இணையத்தளங்களிலும் எமது கட்சிக்கு எதிராக அல்லது கட்சியை களங்கப்படுத்தும் வகையில் சில ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, விமர்சனங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அது சம்பந்தமாக ஆராய்ந்திருந்தோம்.

எங்கள் கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாகத் திட்டமிட்டு எங்கள் கட்சியின் மீது சேறு பூச வேண்டும் என்று அல்லது அரசியல் ரீதியாக எங்களைத் தாக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் ஊடாகவே இந்த விடயம் பிழையான ஒரு பிரசாரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இது உண்மையா, இல்லையா என்பதை ஆராய்வதற்காகத் தலைமைக் குழுவில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த விடயங்களை ஆராய்ந்து பேராளர் மாநாட்டிலே இது சம்பந்தமான வெளிப்படுத்தலைச் செய்வார்கள்.

பொதுவாக கடந்த கால தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பின்னராகப் பல தடவைகள் எங்களுடைய கட்சி கூடி ஆராய்ந்துள்ளது. மாவட்ட ரீதியான, தொகுதி ரீதியான, வட்டார ரீதியான கட்சி கட்டமைப்பையும் இதேபோன்று தலைமைக் குழுவில் இளைஞர்களுக்காக இடைவெளியை அதிகரித்து புதியவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் நாங்கள் எடுத்திருக்கின்றோம்.

இது சம்பந்தமாகவும் தலைமைக் குழுவில் தீர்மானிக்க முடியாது. ஆகவே, அதை நாங்கள் பேராளர் மாநாட்டிலேதான் அப்படியான மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானத்தையும் எடுத்திருக்கின்றோம்.

பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்ற கட்சியின் உறுப்பினர்களின் கைகளிலேதான் அந்த விடயங்களைக் கையளிப்போம். பேராளர் மாநாட்டை எதிர்வரும் 2026 ஜனவரிக்குள் அனைத்து மாவட்டத்தின் உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து இது சம்பந்தமான முடிவுகளை எட்டி எங்களுடைய கட்சியை மேலும் பலப்படுத்தி பயணிப்பதற்கான தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஓர் அழைப்பை விடுத்திருந்தது. அதைப் பற்றி நாங்கள் பேசியிருந்தோம். நாங்கள் அந்த முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக அவர்களுடைய நிபந்தனை என்ன என்பதை அறிய வேண்டும். நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக இன்று பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இதேபோன்று தமிழ்த் தேசியப் பேரவையுடன்
நாங்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதால் அவர்களோடும் கலந்தாலோசிக்க வேண்டும்.

இந்த ஒற்றுமையை நாங்கள் நேசிக்கின்றோம். இந்த அரவணைப்பை நாங்கள் வரவேற்கின்றோம். அதேநேரம் இதை எப்படிச் செயற்படுத்துவது என்பது எங்களுடைய பங்காளிக் கட்சிகளோடு கலந்தாலோசித்தே
முடிவை அறிவிப்பதாக இருக்கின்றோம்.” – என்றார்.

நுகேகொடை கூட்டம்: இதொகாவும் பங்கேற்காது!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்பதில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த தகவலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உறுதிப்படுத்தினார்.

மக்களின் நலன்கருதி ஜனநாயகம் மற்றும் இதர விடயங்களுக்காக எதிரணிகளுடன் இணங்கி செயற்பட வேண்டிய இடங்களில் இணைந்து செயற்பட முடியும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கூட்டு எதிரணி எனக் கூறும் தரப்பால் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்: அமைச்சர் அறிவிப்பு!

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துவிட்டன.” என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வு தொடர்பில் உறுதியளித்திருந்தோம். அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களை அழைத்து பேச்சு நடத்தினோம். அடிப்படை சம்பளத்தில் 200 ரூபா அதிகரிப்பை வழங்குவதற்கு நிறுவனங்கள் இணங்கின. வரவுக்கான கொடுப்பனவாக அரசாஙகம் 200 ரூபாவை வழங்கும்.

தற்போது ஆயிரத்து 350 ரூபாவாக உள்ள அடிப்படை சம்பளம் ஆயிரத்து 550 ஆக அதிகரிக்கும். ஆரசாங்கத்தின் கொடுப்பனவு 200 ரூபாவையும் சேர்ந்து, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 750 ரூபா வழங்கப்படும். இதற்காக 5 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக தற்போதுதான் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கப்போகின்றது.” எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாகிஸ்தான், ஆப்கான் இடையில் சமரசம்: ஈரான் களத்தில்!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே அதிகரித்து வரும் எல்லை பதற்றங்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஈரான் முன்வந்துள்ளது.

பாகிஸ்தானுக்கும், அதன் மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே, டி.டி.பி., எனப்படும் தெஹ்ரீக் – இ – தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக மோதல் உள்ளது.

இந்த பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. இதை, ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் பயங்கரவாத அமைப்பு மறுத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்கின்றன.

போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக மூன்று கட்டங்களாக பேச்சு நடந்தும், எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்நிலையில், இந்த பதற்றங்களை தீர்க்கவும், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தவும் சக முஸ்லிம் நாடு மற்றும் அண்டை நாடு என்கிற விதத்தில் பாகிஸ்தானுக்கு உதவ விரும்புவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி. செயலர் விரைவில் டில்லி பயணம்?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.

இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கிய இணையதளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ரில்வின் சில்வா அண்மையில் மூன்று வாரங்கள் பயணம் மேற்கொண்டு சீனா சென்றிருந்தார். அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி இருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இந்தியா செல்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி விஜயத்தின்போது அந்தநாட்டு அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் அவர் செல்கின்றாரா அல்லது கட்சியொன்றின் அழைப்பின் பிரகாரம் செல்கின்றாரா என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை. எனினும், இலங்கைக்கான இந்திய தூதுவர், ரில்வின் சில்வாவை அண்மையில் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

நிர்வாகச் சீர்கேடு: ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் கடும் அமளி! சபை அமர்வு ஒத்திவைப்பு!

0
மலைவாஞ்சான் ஹட்டன்: ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (24) காலை 10.45 மணியளவில் நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் கூடியது. எனினும், கடந்த 10 மாதங்களாக நகரசபை நிர்வாகத்தில்...

மலையகத்துக்கு மாடி வீட்டு திட்டம் வேண்டாம்: காணி உரிமையை உடன் வழங்குக!

0
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி, வீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும். எமது மக்களுக்கு மாடி வீட்டும் திட்டம் பொறுத்தமற்றது." என்று திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள் என்ற செயல்திட்டத்தின்...

காணி பிரச்சினைக்கு உரிய தீர்வு: இளங்குமரன் எம்.பி. உறுதி!

0
“வடக்கு,கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைக்கு சுமுக தீர்வை காண வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, மயிலிட்டி பிரச்சினையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்க்கப்படும்.” என்று தேசிய மக்கள்...