Home Blog Page 214

கம்பனிகளின் விளையாட்டு எங்களிடம் எடுபடாது: ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு உறுதி!

வரவு – செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு ஜனவரி முதல் வழங்கப்படும். கம்பனிகள் கடந்த அரசாங்கங்களுக்கு விளையாட்டுக்களை காண்பித்திருக்கலாம். ஆனால் எம்மிடம் அந்த விளையாட்டுக்கள் செல்லாது. எனவே நாம் கூறியதை நிச்சயம் செயற்படுத்துவோம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவு திட்டம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
இதுவரைக் காலமும் ஆட்சி செய்த சகல ஆட்யாளர்களுக்கும் பெருந்தோட்டதொழிலாளர்கள் வாக்களித்துள்ளனர். குறிப்பாக மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களது வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொண்டார்களே தவிர, அவர்களது நலன்களில் அக்கறைகொள்ளவில்லை.

அதேபோன்றுதான் சம்பள விவகாரத்திலும் தொடர்ச்சியாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் இம்முறை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எவ்வித ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்காமலேயே சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் முடிந்தால் 10 ரூபாவை அதிகரித்துக் காண்பிக்குமாறு சவால் விடுக்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு 1350 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த சம்பளத்துடன் அரசாங்கம் 200 ரூபாவை வழங்குகிறது.

கம்பனிகள் 200 ரூபாவை வழங்குகின்றன. அதற்காக 500 கோடி ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்காக அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை.

முதன் முறையாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக 500 கோடி ரூபா நிதியை ஒதுக்கியிருக்கிறது. எனவே எமக்கு சவால் விடுத்துக் கொண்டிருப்பதை நிறுத்தி, தம்மால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தொடர்ச்சியாக நீங்கள் அந்த மக்களை ஏமாற்றியதால் தான் அவர்கள் உங்களை புறந்தள்ளியிருக்கின்றனர். மலையக பிரதிநிதிகளில் சிலர் தற்போது சஜித் பின்னாலும், சிலர் நாமல் பின்னாலும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அந்த இரு திசைகளிலுமே மலையக மக்கள் இனி பயணிக்கப் போவதில்லை.

நீங்கள் கூறுவதையும் மக்கள் இனி கேட்கப் போவதில்லை. ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட இந்த சம்பள அதிகரிப்பு ஜனவரி முதல் வழங்கப்படும். கம்பனிகளால் வழங்கப்படும் 200 ரூபா அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அரசாங்கத்தால் வழங்கப்படும் 200 ரூபா வருகை ஊக்குவிப்பு கொடுப்பனவாகும்.

கம்பனிகள் கடந்த அரசாங்கங்களுக்கு விளையாட்டுக்களை காண்பித்திருக்கலாம். ஆனால் எம்மிடம் அந்த விளையாட்டுக்கள் செல்லாது. எனவே நாம் கூறியதை நிச்சயம் செயற்படுத்துவோம் என்றார்.

யாழில் போதைப்பொருள்களுடன் 23 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள்களுடன் ஒரே நாளில்
23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, யாழ். நகரை அண்டிய பகுதிகளில் 10 பேர் ஐஸ் போதைப்பொருளுடனும், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 9 பேர் போதை மாத்திரைகளுடனும், 4 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

2026 பாதீடு அரசியல் நாடகம்: சஜித் கடும் சீற்றம்!

“வரவு – செலவுத் திட்டம் என்ற பெயரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொய்களின் மூட்டையையே முன்வைத்துள்ளார். இதில் மக்களுக்கு ஏமாற்றமே நிறைந்துள்ளது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஹொரணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வளமான நாடு – அழகான வாழ்க்கைக்கான வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் இன்று செயல்படுத்தப்படுகின்றதா என்பதை மக்கள் கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்குப் பதிலாக “பொய்களின் மூட்டை”யை முன்வைத்துள்ளார். அந்தத் திட்டம் மக்களை ஏமாற்றும் நோக்குடன் பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தவறான தகவல்களைக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டாவது வரவு – செலவுத் திட்டம், வளமான நாட்டிற்கான திட்டம் அல்ல, மாறாக கவனமாக வடிவமைக்கப்பட்ட அரசியல் நாடகம் ஆகும்.

தேர்தல் பிரசாரத்தின்போது தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளுடன் வரவு – செலவுத் திட்டத்தில் உள்ள வாக்குறுதிகளையும் கொள்கைகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

அவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்தால் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே தெளிவான முரண்பாடு இருப்பதை அறியலாம்.

ஜனாதிபதி புன்னகையுடனும் அமைதியான குரலுடனும் இதை முன்வைத்தாலும், இந்த வரவு – செலவுத் திட்டம் பொய்களின் ஒரு கட்டு மட்டுமே.

மக்கள் உதவியின்றி தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், அரசாங்கத்தின் இருப்பை நீட்டிக்கும் நோக்குடன் ஏமாற்றமும் நேர்மையின்மையும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் நிறைந்துள்ளது.

அரசாங்கம் “கோயபல்ஸ் கோட்பாட்டின்” கீழ் இயங்குகின்து. அதாவது பொய்கள் உண்மை என்று தோன்றும் வரை திரும்பத் திரும்பக் கூறி வருகின்றது. இவ்வாறு பொய்களைக் கூறி தொடர்ந்தும் ஆட்சியில் தொங்கிக் கொண்டிருக்கலாம் என்று கருதி வருகின்றதோ தெரியாது.

இந்த வரவு – செலவுத் திட்டம் நாட்டில் உள்ள 40-50% வறுமை நிலையை நிவர்த்தி செய்ய எந்தவொரு தொலைநோக்கு பார்வையையோ அல்லது திட்டத்தையோ முன்வைக்கவில்லை. 2022 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம், 2019 ஆம் ஆண்டில் காணப்பட்ட வாழ்க்கைத் தரம் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் போல அடிமையாவிட்டது. அத்துடன் மின்சாரக் கட்டணத்தை 33% குறைத்தல் மற்றும் 35 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குதல் உள்ளிட்ட அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டன.

புதிய சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறியது, ஆனால் உண்மையில் ஏலவே இணக்கப்பாடு காணப்பட்ட உடன்படிக்கையையே முன்கொண்டு செல்கிறது. இன்று, வாழ்க்கைச் செலவு அதிகரித்து காணப்படுகின்றன. பொருளாதார நிவாரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசாங்கத்திடம் ஒரு தெளிவான திட்டம் இல்லை. இந்த நாட்டிற்குத் தேவையான அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்டுவருவதற்கு அரசாங்கத்திடம் மூலோபாய திட்டமோ முறையோ இல்லை. அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள வெறும் “அலங்கார வார்த்தைகளையும் வெற்றுப் பேச்சுகளையும்” மட்டுமே இந்த அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி குழப்பத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடாது. தேசத்தை உண்மையாக கட்டியெழுப்பும் வலுவான, நம்பகமான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அபிவிருத்தி மற்றும் வாய்ப்புகள் இல்லாததால் பல திறமையான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தி தனிப்பட்ட அல்லது அரசியல் இலாபத்திற்காக அல்லாமல், இலங்கைக்கு உதவ சர்வதேச கூட்டாண்மைகளைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியினரான நாம் வெளிநாடுகளுக்குச் சென்றாலும், நாட்டிற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றோம். இன்று பணத்திற்குக் கூட மருந்துகளை வாங்க முடியாத நிலை எமது நாட்டில் காணப்படுகின்றது. தேவையான மருந்துகளைப் பெற்றுத் தருமாறு இந்தியாவிடம் நான் கோரிக்கை விடுத்தேன்.

எனவே, கடந்த காலங்களில் நடந்த அரசியல் சூதாட்டங்களுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் பிரவேசிக்காது.” – என்றார்.

போதை ஒழிப்பு சமர்: வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 7 பேர் சரணடைவதற்கு தூது!

போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தை கைவிட்டு பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைவதற்கு தயாராக இருப்பதாக வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 7 பேர் தெரியப்படுத்தியுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (09) தெரிவித்தார்.

இவர்களின் கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும், உரிய கலந்துரையாடல்களின் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

“போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.

குறிப்பாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளிநாட்டில் இருந்து அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர். போதைப்பொருள் வியாபாரத்தில் இருந்து விலகி, சமூகத்தில் சிறந்த பிரஜையாக வாழ்வதற்கு வாய்ப்பொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஓர்அங்கமாக போதைப்பொருள் வியாபாரத்தை கைவிட்டு, அரசாங்கத்திடம் சரணடைவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. உரிய கலந்துரையாடலின் பின்னரே முடிவுகள் எடுக்கப்படும்.” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்திரவதை: மந்திரவாதி கைது!

 

உடலில் புகுந்த ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்திரவதை செய்த மந்திரவாதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவன் வீட்டார் பெண்ணுக்கு பேய் பிடித்து விட்டது என்று கூறி ஆவியை விரட்டுவதற்காக மந்திரவாதி சிவதாஸ் என்பவரை அழைத்து வந்தனர்.

காலையில் வந்த மந்திரவாதி சிவதாஸ் பூஜையில் இறங்கியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணுக்கு சாராயம் கொடுத்து குடிக்குமாறு சித்திரவதை செய்துள்ளனர். மேலும் பீடியும் புகைக்க வேண்டும் என்று கூறி காலையில் தொடங்கி நள்ளிரவு வரை பூஜை நடத்தியுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு உடலில் சூடு வைத்து மந்திரவாதி துன்புறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

கட்டாயப்படுத்தி சாராயத்தை குடிக்க வைத்ததால் அந்தப் பெண் மயங்கி விழுந்தார். இந்த விவரம் அறிந்ததும், அந்தப் பெண்ணின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். விரைந்து வந்த பொலிஸார் விசாரணை நடத்தினர். அதற்குள் மந்திரவாதி சிவதாஸ் தப்பியோடிவிட்டார்.

பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி திருவள்ளா பகுதியில் அவரைக் கைது செய்தனர். அவருடன், அந்தப் பெண்ணின் கணவர் அகில் தாஸ் , அகில் தாஸின் தந்தை தாஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இனப்படுகொலை: இஸ்ரேல் பிரதமர் உட்பட 37 பேர் எதிராக துருக்கி கைது உத்தரவு!

 

காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் 37 பேர்மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கான கைது உத்தரவுகளை துருக்கி அரசு பிறப்பித்துள்ளது.

காசாவில் திட்டமிட்டு இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இவர்கள் செய்துள்ளனர் என துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.இதன் அடிப்படையிலேயே கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துருக்கி அரசின் அறிக்கையில், காசா பகுதியில் துருக்கி அரசு கட்டிய துருக்கி – பாலஸ்தீன நட்பு மருத்துவமனை பற்றியும ; குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை மீது மார்ச் மாதத்தில் இஸ்ரேல் குண்டு வீசியது.

துருக்கியின் இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுபற்றி இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர், “துருக்கியின் இந்த குற்றச்சாட்டுகளை உறுதியாக நிராகரிக்கிறோம், இதனை அவமதிப்பாகக் கருதுகிறேன். இந்த நடவடிக்கை கொடுங்கோலன் துருக்கி ஜனாதிபதி எர்டோகனின் சமீபத்திய மக்கள் தொடர்பு தந்திரம்.” என்று கூறினார்.

துருக்கியின் இந்த அறிவிப்பை ஹமாஸ் வரவேற்றுள்ளது. “நமது ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கான நீதி, மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்தின் மதிப்புகளுக்கு உறுதியளித்த துருக்கி மக்கள் மற்றும் தலைவர்களின் நேர்மையான நிலைப்பாடுகள் வரவேற்கத்தக்கது.” என்று தெரிவித்துள்ளது.

காசாவில் நடந்த போரை மிகவும் கடுமையாக விமர்சித்த துருக்கி, இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக கடந்த ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில் இணைந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியின் பேரில், அக்டோபர் 10 முதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளது.

மாகாணசபைத் தேர்தல்: சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு அழைப்பு!

மாகாணசபைத் தேர்தலை நடத்தும் விதம் பற்றி ஆராய்ந்து இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம், எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது.

இது தொடர்பில் பிரதமருக்கு இன்று அல்லது நாளை எழுத்துமூலம் தெரியப்படுத்தப்படவுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், எந்த முறைமையின்கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

கட்சி தலைவர்கள்கூடி பொருத்தமான முறைமை தொடர்பில் தீர்மானம் எடுத்தால், அதற்கமைய தேர்தலை நடத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறி இருந்தார்.

இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றம் இழைக்கவில்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்?

போர் இல்லாத சூழ்நிலையிலும் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மை முகமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

” வருடாந்த வரவு- செலவுத் திட்ட சடங்கு நடந்து முடிந்துள்ளது. எனினும், வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குரிய அடித்தளம் இடப்படவில்லை. தீர்வை வழங்குவதற்கு இந்த அரசாங்கமும் முனைப்பு காட்டவில்லை என்பதையே வரவு- செலவுத் திட்டம் எடுத்துக்காட்டுகின்றது.

வரவு- செலவுத் திட்டம் 10 பங்களாக இருந்தால் அதில் ஒன்றரை பங்கு பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பத்தில் அரை பங்குதான் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. போர் இல்லாத சூழ்நிலையில் பாதுகாப்பு துறைக்கு ஏன் அதிக ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது? இதன்மூலம் உங்களின் உண்மை முகம் தெளிவாகின்றது.

மரக்கறி விலைப்பட்டியல் (09.11.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (09.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சம்பள உயர்வு குறித்து கம்பனிகள் அறிவிக்கப்பட்டும்: நான் ஏன் பதவி விலக வேண்டும்?

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் முன்மொழிவு இடம்பெற்றுள்ள நிலையில், இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் பதவி விலக வேண்டும் என சிலர் வலியுறுத்திவருகின்றனர்.

அரசாங்கத்தால் 10 ரூபாகூட வழங்க முடியாது என ஜீவன் கூறி இருந்தார் எனவும், ஆனால் நாளாந்தம் 200 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது எனக் கூறியுமே இவ்வாறு வலியுறுத்தப்படுகின்றது.

இதற்கு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய ஜீவன் தொண்டமான் பதிலளித்தார்…..
அவர் கூறிய கருத்துகள் வருமாறு,

“ பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுவது நல்ல விடயம். சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்றுதான் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஒவ்வொருமுறையும் கூறிவருகின்றன. ஆனால் அடிப்படை சம்பளம் அல்ல, ஊக்குவிப்பு கொடுப்பனவு பற்றியே கூறப்பட்டது என பின்னர் அறிவிப்பு வெளியாகும்.

எந்த பொறிமுறையின்கீழ் சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது என்பது பற்றி எமக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இதை பற்றிதான் நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் ஜீவன் தொண்டமான் பதவி விலக வேண்டும் என்கின்றனர். கருத்து கூறுவதால் பதவி விலக வேண்டுமா?

ஜனாதிபதியால் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க முடியுமானால் அது வரவேற்கப்படவேண்டிய விடயம். கடந்த முறை பாதீட்டில் 1,700 ரூபா உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால் அது வழங்கப்படவில்லை. 4 ஆயிரத்து 500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்றார்கள். ஒரு செங்கல்கூட வைக்க முடியாது என்றேன். அதேபோல ஒரு செங்கல்கூட வைக்கப்படவில்லை. பதுளை மாவட்டத்தில் வெத்து பேப்பர் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு இராஜினாமா செய்;யாதவர்கள் எதற்காக என்னை இராஜினாமா செய்ய கோருகின்றனர்?

அடிப்படை சம்பளம் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டால் அதனை வரவேற்போம். பெருந்தோட்ட நிறுவனங்கள் ஊடாக இதற்குரிய அறிவிப்பு வெளியாக வேண்டும். அரசாங்கமும் இதனை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட வேண்டும். ” -என்றார் ஜீவன்

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

நிர்வாகச் சீர்கேடு: ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் கடும் அமளி! சபை அமர்வு ஒத்திவைப்பு!

0
மலைவாஞ்சான் ஹட்டன்: ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (24) காலை 10.45 மணியளவில் நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் கூடியது. எனினும், கடந்த 10 மாதங்களாக நகரசபை நிர்வாகத்தில்...

மலையகத்துக்கு மாடி வீட்டு திட்டம் வேண்டாம்: காணி உரிமையை உடன் வழங்குக!

0
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி, வீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும். எமது மக்களுக்கு மாடி வீட்டும் திட்டம் பொறுத்தமற்றது." என்று திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள் என்ற செயல்திட்டத்தின்...

காணி பிரச்சினைக்கு உரிய தீர்வு: இளங்குமரன் எம்.பி. உறுதி!

0
“வடக்கு,கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைக்கு சுமுக தீர்வை காண வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, மயிலிட்டி பிரச்சினையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்க்கப்படும்.” என்று தேசிய மக்கள்...