Home Blog Page 227

கொள்கை இல்லாத எதிரணியுடன் கூட்டு கிடையாது: 21 ஆம் திகதி போராட்டத்துக்கு மக்கள் போராட்ட முன்னணி ஆதரவு வழங்காது!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு தமது கட்சி ஆதரவு வழங்காது என்று மக்கள் போராட்ட முன்னணி அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் கூட்டம் மற்றும் எதிர்ப்பு பேரணியை நடத்துவதற்கு எதிரணிகள் ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி கூட்டத்துக்கு ஆதரவளிக்கப்படுமா என மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் லஹிரு வீரசேகரவிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையில் மேற்படி கூட்டு நடவடிக்கைக்கு தமது கட்சியின் ஆதரவு இல்லை என திட்டவட்டமாக அறிவித்தார்.

” நாம் கொள்கை அடிப்படையில் அரசியல் நடத்தி வருகின்றோம். எனவே, ஏதேனும் பிரச்சினை வரும்போது அதிகாரத்துக்காக, நாடாளுமன்ற ஆசனத்துக்காக அந்த பக்கம், இந்த பக்கம் என தாவும் அரசியல் எமக்கு ஏற்புடையது அல்ல.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகின்றது. மக்கள் மத்தியில் அரசாங்கம்மீது அதிருப்தி உள்ளது. அதேபோல மக்களால் நிராகரிக்கப்பட்ட எதிரணிகளே நாட்டில் உள்ளன. எனவே, எம்மால் எதிரணிகளுடன் இணைந்து செயற்பட முடியாது.

அந்தவகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவளிக்கமாட்டோம். ஏனெனில் எமது கொள்கையும், அவர்களின் கொள்கையும் வெவ்வேறானவை.” என லஹிரு வீரசேகர மேலும் குறிப்பிட்டார்.

ஹொரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட ஐவர் யாழில் கைது!

 

ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஜந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் உள்ளிட்ட ஐவரே யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒரு ஆணும்,
2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒரு பெண்ணும்
80 மில்லி கிராம் ஹெரோயினுடன் மூன்று ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேக நபர்களிடம் நடத்தப்படும் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஐஸ் போதைப்பொருளுடன் கெஹேல்பத்தர பத்மேவின் மூன்று சகாக்கள் கைது!

 

சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்களை வத்தவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்துக்கமைய வத்தளை, அவரக்கொட்டுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் ஏனைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள், பாதாள குழு உறுப்பினர் கெஹேல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வியாபார வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றது.

இவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

ரணில், சஜித் ஓரணியில் திரண்டால் முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார்!

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிட முன்வந்தால் மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தீர்மானம் எடுக்கவில்லை. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒரே மேடைக்கு வந்து, ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிட்டால், தேர்தலில் களமிறங்குமாறு கட்சி கோரிக்கை விடுத்தால் , எனக்கு வாக்களித்த மக்கள் கேட்டுக்கொண்டால் தேர்தலில் போட்டியிட நான் தயார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு, முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயார். கட்சி கோரிக்கை விடுக்காவிட்டால் போட்டியிட மாட்டேன். அதேபோல இரு தரப்பும் இணையாவிட்டாலும் களமிறங்கமாட்டேன்.” எனவும் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

21 ஆம் திகதி நுகேகொடையில் மேடையேறமாட்டோம்: சஜித் அணி திட்டவட்டம்!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

‘ மேற்படி கூட்டத்தில் பங்கேற்பதில்லை என கட்சியின் முகாமைத்துவக்குழு தீர்மானித்துவிட்டது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்கும் என சில எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வெளியிட்டு வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக நூலகத்திலிருந்து மகசீன்கள் மீட்பு!

 

யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இருந்து துப்பாக்கி மகசீன்களும், வயர்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது.

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரைக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிரதேச பத்திரிகை ஒன்றின் 2005 ஆம் ஆண்டு வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் , இரண்டு துப்பாக்கி மகசீன்கள் மற்றும் வயர் துண்டு என்பவற்றை ஊழியர்கள் நேற்று கண்டுள்ளனர்.

அது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை, அடுத்து, நிர்வாகத்தினர் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரின் உதவியுடன் இரண்டு மகசீன்களையும் வயர் துண்டையும் மீட்டனர்.

இரண்டு மகசீன்களுக்குள்ளும் 59 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும், மீட்கப்பட்ட வயர் துண்டு 05 நீளமுடையது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட மகசீன்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் குறித்து நீதிமன்றுக்கு அறிவித்து, மன்றில் அறிவுறுத்தலுக்கு ஏற்பட அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை பல்கலைக்கழக வளாகத்தினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பதால் , பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

நுவரெலியா பிரதேச சபையின் 2026 பாதீடு நிறைவேற்றம்!

நுவரெலியா பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.

நுவரெலியா பிரதேச சபையின் பாதீட்டு நிறைவேற்றக் கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்கு தவிசாளர் வேலு யோகராஜா தலைமையில் கூடியது.

இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 22 பேரும், எதிராக ஒருவரும் வாக்களித்தனர். உறுப்பினரொருவர் சபை அமர்வில் பங்கேற்கவில்லை. அந்தவகையில் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.

மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் பாலகிருஷ்ணன் பத்மஸ்ரீ மட்டுமே பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தார்.

கஜரூபன் திவ்யா நுவரெலியா

போதைப்பொருளுடன் இபோச பஸ் சாரதி நல்லத்தண்ணியில் கைது!

இபோச பஸ் சாரதியொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லத்தண்ணி பகுதியில் உள்ள பஸ் நிலைய தங்குமிட விடுதியில் வைத்தே, நல்லத்தண்ணி பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கடந்த சில மாதங்களாக சந்தேக நபர், கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு கைதாகியுள்ளார்.

போதை வில்லைகள் மற்றும் ஹேரோயின் 77 மில்லி கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர் இபோச ஹட்டன் கிளையை சேர்ந்தவர் என தெரியவருகின்றது.
சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

அம்பேத்கருக்கு 75 அடி உயர சிலை!

 

மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் 75 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு 10 கோடி ரூபா நிதி ஒதுக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் நகரில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் பூங்கா உள்ளது.

இப்பூங்காவில் 75 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அம்பேத்கர் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்படாததால் பணிகளை தொடங்க முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் இந்த திட்டத்துக்கு கோடி ரூபா நிதியுடன் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக லத்தூர் எம்எல்ஏ அபிமன்யு பவார் கூறினார்

. “மீதமுள்ள பணிகளை முடிக்க கூடுதலாக ரூ.12 கோடி தேவைப்படும். அதைப் பெறுவதற்கான முயற்சிகளை தொடர்வேன்” என்றும் அவர் கூறினார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

பொகவந்தலாவையில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்!

0
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக்கோரும் கை எழுத்து இயக்கம் இன்று பொகவந்தலாவ பகுதியில் ஆரம்பமானது. நோர்வூட் நகரை அண்மித்ததான பகுதியில் நோர்வூட் பிரதேச செயலகத்தை அமைக்க வேண்டும்...

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

0
ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச...

மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி!

0
மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி! மெராயா நகரில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த கண்டய்னர் , சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அழுத்தம் காரணமாக இன்று அகற்றப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மக்களுக்கும் சாரதிகளுக்கும் பெரும் சிரமத்தை...