மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி!
மெராயா நகரில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த கண்டய்னர் , சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அழுத்தம் காரணமாக இன்று அகற்றப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக மக்களுக்கும் சாரதிகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்திய இந்த பிரச்சினைக்கு இவ்வாறு தீர்வு காணப்பட்டுள்ளது.
அக்கரப்பத்தனை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் உறுப்பினர்களால் முதலாவது பிரேரணையாக இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
